இணை வசன வேதாகமம்

தீத்து 1

                   
புத்தகங்களைக் காட்டு
1அனைவருக்கும் பொதுவான விசுவாச அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை தீத்துக்கு, கடவுளின் பணியாளனும் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதனுமாகிய பவுல் எழுதுவது:1நாளா 6:49 ரோம 1:1 பிலிப் 1:1
2தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் நம்பிக்கை கொள்ளவும் நிலைவாழ்வை எதிர்நோக்கி இறைப்பற்றுக்கு இசைந்த உண்மை அறிவைப் பெறவும் நான் திருத்தூதனாய் இருக்கிறேன்.தீத் 2:7 தீத் 2:13 தீத் 3:7 யோவா 5:39 யோவா 6:68 ரோம 2:7 ரோம 5:2 ரோம 5:4 கொலோ 1:27 1தெச 5:8 2தீமோ 1:1 2தீமோ 2:10 1பேது 1:3 1பேது 1:4 1யோவா 2:25 1யோவா 3:2 1யோவா 3:3 யூதா 1:21
3இந்நிலை வாழ்வை, பொய் கூறாத கடவுள், காலங்கள் தொடங்கு முன்னே வாக்களித்தார்.தானி 8:23 தானி 9:24-27 தானி 10:1 தானி 11:27 ஆபகூ 2:3 அப் 17:26 ரோம 5:6 கலா 4:4 எபே 1:10 1தீமோ 2:6 2தீமோ 1:10
4ஏற்ற காலத்தில் நற்செய்தியைப் பறைசாற்றியதன் வாயிலாகத் தம் செய்தியை வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியைப் பறைசாற்றும் பணி நம் மீட்பராம் கடவுள் இட்ட கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.2கொரி 2:13 2கொரி 7:6 2கொரி 7:13 2கொரி 7:14 2கொரி 8:6 2கொரி 8:16 2கொரி 8:23 2கொரி 12:18 கலா 2:3
5நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்.1தீமோ 1:3
6இம்மூப்பர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதவராயும் ஒரு மனைவியைக் கொண்டவராயும் நம்பிக்கை கொண்ட பிள்ளைகளை உடையவராயும் இருக்க வேண்டும். தாறுமாறாக வாழ்பவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்களாகவோ கட்டுக்கடங்காதவர்களாகவோ இருக்கக் கூடாது.1தீமோ 3:2-7
7ஏனெனில் சபைக் கண்காணிப்பாளர்கள் கடவுள் பணியில் பொறுப்பாளர்களாய் இருப்பதால், அவர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதிருக்க வேண்டும். அகந்தை, முன் கோபம், குடிவெறி, வன்முறை, இழிவான ஊதியத்தின்மேல் ஆசை ஆகியவை இவர்களிடம் இருக்கக்கூடாது.தீத் 1:5 பிலிப் 1:1 1தீமோ 3:1 1தீமோ 3:2-13
8மாறாக, அவர்கள் விருந்தோம்பல், நன்மையில் நாட்டம், கட்டுப்பாடு, நேர்மை, அர்ப்பணம், தன்னடக்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும்.1தீமோ 3:2
9அவர்கள் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட உண்மைச் செய்தியைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது அவர்கள் நலந்தரும் போதனையை அறிவுறுத்தவும் எதிர்த்துப் பேசுவோரின் தவற்றை எடுத்துக் காட்டவும் வல்லவர்களாய் இருப்பார்கள்.யோபு 2:3 யோபு 27:6 நீதி 23:23 1தெச 5:21 2தெச 2:15 2தீமோ 1:13 யூதா 1:3 வெளிப் 2:25 வெளிப் 3:3 வெளிப் 3:11
10ஏனெனில், பலர், குறிப்பாக விருத்தசேதனத்தில் நம்பிக்கை கொண்டோர் கட்டுகடங்காதவராயும் வீண்வாதம் செய்பவராயும் ஏய்ப்பவராயும் இருக்கின்றனர்.அப் 20:29 ரோம 16:17-18 2கொரி 11:12-15 எபே 4:14 2தெச 2:10-12 1தீமோ 1:4 1தீமோ 1:6 1தீமோ 6:3-5 2தீமோ 3:13 2தீமோ 4:4 யாக் 1:26 2பேது 2:1 2பேது 2:2 1யோவா 2:18 1யோவா 4:1 வெளிப் 2:6 வெளிப் 2:14
11அவர்களது வாயை அடைக்கவேண்டும். அவர்கள் இழிவான ஊதியத்திற்காகத் தகாதவற்றைக் கற்பித்துக் குடும்பம் குடும்பமாகச் சீர்குலையச் செய்கிறார்கள்.தீத் 1:9 தீத் 3:10 சங் 63:11 சங் 107:42 எசே 16:63 லூக் 20:40 ரோம 3:19 2கொரி 11:10
12அவர்களுடைய இறைவாக்கினர் ஒருவரே, “கிரேத்தர்கள் ஓயாப் பொய்யர்கள், கொடிய காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள்” என்று கூறியுள்ளார்.அப் 17:28
13அவரது சான்று உண்மையே. எனவே உண்மையைப் புறக்கணிக்காமலும்,தீத் 2:15 நீதி 27:5 2கொரி 13:10 1தீமோ 5:20 2தீமோ 4:2
14யூதப் புனைகதைகளிலும் மனிதக் கட்டளைகளிலும் கவனம் செலுத்தாமலும், விசுவாசத்தைப் பழுதின்றிக் காத்துக்கொள்ளும்படி அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துக்கொள்.1தீமோ 1:4-7 2தீமோ 4:4
15தூய்மையானவர்களுக்கு எல்லாம் தூய்மையே. மாசுபடிந்த மனத்தோருக்கும் நம்பிக்கை கொண்டிராதோருக்கும் எதுவுமே தூய்மையாயிராது. அவர்கள் மனமும் மனச்சான்றும் கூட மாசுபடிந்தவை.லூக் 11:39-41 அப் 10:15 ரோம 14:14 ரோம 14:20 1கொரி 6:12 1கொரி 6:13 1கொரி 10:23 1கொரி 10:25 1கொரி 10:31 1தீமோ 4:3 1தீமோ 4:4
16கடவுளை அறிந்திருப்பதாக அவர்கள் அறிக்கை இடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய செயல்கள் அதை மறுதலிக்கின்றன. அவர்கள் அருவருக்கத் தக்கவர்கள்: கீழ்ப்படியாதவர்கள்: எந்த நற்செயலையும் செய்யத் தகுதியற்றவர்கள்.எண் 24:16 ஏசா 29:13 ஏசா 48:1 ஏசா 58:2 எசே 33:31 ஓசி 8:2 ஓசி 8:3 ரோம 2:18-24 2தீமோ 3:5-8 யூதா 1:4

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.