இணை வசன வேதாகமம்

1தீமோத்தேயு 1

                   
புத்தகங்களைக் காட்டு
1விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை திமொத்தேயுவுக்கு நம் மீட்பராம் கடவுளும், நம்மை எதிர்நோக்குடன் வாழச் செய்யும் கிறிஸ்து இட்ட கட்டளையின்படி கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனான பவுல் எழுதுவது:ரோம 1:1 1கொரி 1:1
2தந்தையாம் கடவுளிடமிருந்தும், நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக!அப் 16:1-3 1தெச 3:2
3நான் மாசிதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசில் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். அங்கே சிலர் மாற்றுக் கொள்கைகளைக் கற்பிக்கின்றனர். அப்படிச் செய்யாதபடி அவர்களுக்குக் கட்டளையிடு.அப் 19:1-10
4அவர்கள் புனைகதைகளிலும், மூதாதையரின் முடிவில்லாப் பட்டியல்களிலும் கவனம் செலுத்துகின்றார்கள். இவை விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட கடவுளின் திட்டத்திற்காகக் கொண்ட பயன்படாமல், ஊக ஆய்களுக்கே இடம் தருகின்றன.1தீமோ 4:7 1தீமோ 6:4 1தீமோ 6:20 2தீமோ 2:14 2தீமோ 2:16-18 2தீமோ 4:4 தீத் 1:14 2பேது 1:16
5தூய்மையான உள்ளம், நல்ல மனச்சான்று, வெளிவேடமற்ற விசுவாசம் ஆகியவற்றினின்று அன்பைத் தூண்டுவதே நான் கொடுத்த கட்டளையின் நோக்கம்.ரோம 10:4 ரோம 13:8-10 கலா 5:13 கலா 5:14 கலா 5:22 1யோவா 4:7-14
6சிலர் இந்த நோக்கத்தைக் கைவிட்டு, வீண் பேச்சில் ஈடுபட்டுள்ளனர்.1தீமோ 6:21 2தீமோ 2:18 2தீமோ 4:10
7அவர்கள் திருச்சட்ட போதகர்களாக இருக்க விரும்புகின்றனர். தாங்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதையும், எவற்றை வலியுறுத்துகின்றார்கள் என்பதையும் அறியாமல் இருக்கின்றார்கள்.அப் 15:1 ரோம 2:19-21 கலா 3:2 கலா 3:5 கலா 4:21 கலா 5:3 கலா 5:4 தீத் 1:10 தீத் 1:11
8திருச்சட்டம் நல்லது என்பதை அறிந்திருக்கின்றோம். ஆனால், அதை முறைப்படி பயன்படுத்த வேண்டும்.உபா 4:6-8 நெகே 9:13 சங் 19:7-10 சங் 119:96-105 சங் 119:127-105 சங் 119:128-105 ரோம 7:12 ரோம 7:13 ரோம 7:16 ரோம 7:18 ரோம 7:22 ரோம 12:2 கலா 3:21
9திருச்சட்டம் நேர்மையானவர்களுக்காக இயற்றப்படவில்லை. மாறாக ஒழுங்கு மீறுவோர், கட்டுப்பாட்டுக்கு அடங்காதோர், இறைப்பற்று இல்லாதோர், பாவிகள், தூய்மையற்றோர், உலகப்போக்கைப் பின்பற்றுவோர், தந்தையைக் கொல்வோர், தாயைக் கொல்வோர், பிற மனிதரைக் கொல்வோர்,ரோம 4:13 ரோம 5:20 ரோம 6:14 கலா 3:10-14 கலா 3:19-14 கலா 5:23
10பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒருபால் புணர்ச்சி கொள்வோர், ஆள்களைக் கடத்தி விற்போர், பொய்யர், பொய்யாணையிடுவோர், மற்றும் நலம் தரும் போதனையை எதிர்ப்போர் ஆகியோருக்காகவே திருச்சட்டம் இயற்றப்பட்டது.மாற் 7:21 மாற் 7:22 1கொரி 6:9 1கொரி 6:10 கலா 5:19-21 எபே 5:3-6 எபிரெ 13:4
11இந்நலந்தரும் போதனையே பேரின்பக் கடவுள் என்னிடம் ஒப்பவித்திருக்கிற அவரது சீர்மிகு நற்செய்தி.ரோம 2:16
12எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன். ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார்.யோவா 5:23 பிலிப் 2:11 வெளிப் 5:9-14 வெளிப் 7:10-12
13முன்னர் நான் அவரை பழித்துரைத்தேன்: துன்புறுத்தினேன்: இழிவுபடுத்தினேன். ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார்.அப் 8:3 அப் 9:1 அப் 9:5 அப் 9:13 அப் 22:4 அப் 26:9-11 1கொரி 15:9 கலா 1:13 பிலிப் 3:6
14இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது.அப் 15:11 ரோம 16:20 2கொரி 8:9 2கொரி 13:14 வெளிப் 22:21
15“பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்”. - இக்கூற்று உண்மையானது: எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. - அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான்.1தீமோ 1:19 1தீமோ 3:1 1தீமோ 4:9 2தீமோ 2:11 தீத் 3:8 வெளிப் 21:5 வெளிப் 22:6
16ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு நான் முன்மாதிரியாய் விளங்கவேண்டும் என்பதற்காக முதன்முதலில் என்னிடம் தம் முழுப் பொறுமையைக் காட்டினார்.எண் 23:3 சங் 25:11 ஏசா 1:18 ஏசா 43:25 எபே 1:6 எபே 1:12 எபே 2:7 2தெச 1:10
17அழிவில்லாத, கண்ணுக்குப் புலப்படாத, எக்காலத்துக்கும் அரசராயிருக்கின்ற ஒரே கடவுளுக்கு என்றென்றும் மாண்பும் மாட்சியும் உரித்தாகுக! ஆமென்.1தீமோ 6:15 1தீமோ 6:16 சங் 10:16 சங் 45:1 சங் 45:6 சங் 47:6-8 சங் 90:2 சங் 145:13 எரே 10:10 தானி 2:44 தானி 7:14 மீகா 5:2 மல்கி 1:14 மத் 6:13 மத் 25:34 ரோம 1:23 எபிரெ 1:8-13 வெளிப் 17:14 வெளிப் 19:16
18என் பிள்ளையாகிய திமொத்தேயுவே, உன்னைப் பற்றி முன்னர் சொல்லப்பட்ட இறைவாக்குகளுக்கு ஏற்ப, நான் உனக்கு இடும் கட்டளை இதுவே:1தீமோ 1:11 1தீமோ 1:12 1தீமோ 4:14 1தீமோ 6:13 1தீமோ 6:14 1தீமோ 6:20 2தீமோ 2:2 2தீமோ 4:1-3
19அந்த இறைவாக்குகளைத் துணையாகக் கொண்டு நம்பிக்கையுடனும் நல்மனச்சான்றுடனும், நன்கு போரிடு. சிலர் இம்மனச்சான்றை உதறித் தள்ளிவிட்டதால் விசுவாசம் என்னும் கப்பல் உடைந்து போகச் செய்தனர்.1தீமோ 1:5 1தீமோ 3:9 தீத் 1:9 எபிரெ 3:14 1பேது 3:15 1பேது 3:16 வெளிப் 3:3 வெளிப் 3:8 வெளிப் 3:10
20அத்தகையோருள் இமனேயும், அலக்சாந்தரும் அடங்குவர். அவர்களைச் சாத்தானிடம் ஒப்புவித்து விட்டேன். இனியும் அவர்கள் கடவுளைப் பழித்துரைக்காதிருக்கக் கற்றுக் கொள்ளுமாறு இவ்வாறு செய்தேன்.2தீமோ 2:17

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.