எபிரெயர் 1:8-13 - WCV
8
தம் மகனைக் குறித்து, “இறைவனே, என்றுமுளது உமது அரியணை: உம் ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்.
9
நீதியே உமது விருப்பம்: அநீதி உமக்கு வெறுப்பு: எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள், மகிழ்ச்சியின் நெய்யால் உம்மீது அருள்பொழிவு செய்து அரசத் தோழரினும் மேலாய் உயர்த்தினார்” என்றார்.
10
மீண்டும், “ஆண்டவரே, நீர் தொடக்கத்தில் பூவுலகுக்கு அடித்தளம் இட்டீர். விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ!
11
அவையோ அழிந்துவிடும்: நீரோ நிலைத்திருப்பீர். அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்:
12
போர்வையைப்போல் அவற்றை நீர் சுருட்டிவிடுவீர்: ஆடையைப்போல் அவற்றை மாற்றிவிடுவீர். நீரோ மாறாதவர்! உமது காலமும் முடிவற்றது” என்றார் அவர்.
13
மேலும், கடவுள், வானதூதர் எவரிடமாவது, எப்போதாவது, “நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று கூறியதுண்டா?