96
நிறைவான அனைத்தின் எல்லையையும் நான் பார்த்துவிட்டேன்: உமது கட்டளையின் நிறைவோ எல்லை அற்றது.
97
ஆண்டவரே! நான் உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்! நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.
98
என் எதிரிகளைவிட என்னை ஞானியாக்கியது உமது கட்டளை: ஏனெனில், என்றென்றும் அது என்னோடு உள்ளது.
99
எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் விவேகமுள்ளனவாய் இருக்கின்றேன்: ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே நான் சிந்திக்கின்றேன்:
100
முதியோர்களைவிட நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன். ஏனெனில், உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன்.
101
உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீயவழி எதிலும் நான் கால்வைக்காது பார்த்துக் கொள்கின்றேன்.
102
உம் நீதிநெறிகளைவிட்டு நான் விலகவில்லை: ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர்.
103
உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.
104
உம் நியமங்களால் நான் நுண்ணறிவு பெறுகின்றேன். ஆகவேதான் பொய்வழிகள் அனைத்தையும் நான் வெறுக்கின்றேன்.
105
என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!