2தீமோத்தேயு 2:16-18 - WCV
16
உலகப் போக்கிலான வீண் பேச்சுகளை விலக்கு: ஏனெனில் அதனால் அவர்கள் மேன்மேலும் இறைப்பற்று அற்றவர்களாவார்கள்.
17
அவர்களது போதனை சதையழுகல் நோய் போன்று அரித்துத் தின்றுவிடும். இமனேயும் பிலேத்தும் இத்தகையோராவர்.
18
உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நிகழ்ந்து விட்டதென்று அவர்கள் சொல்லி, உண்மையை விட்டு விலகிப் போய் விட்டார்கள்: சிலருடைய நம்பிக்கையைச் சீர்குலைத்துவிட்டார்கள்.