| 1 | தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “அரசனுக்கென முதல் புல்லறுப்புச் செய்தானபின், இரண்டாம் பருவத்தில் புற்கள் துளிர்க்கத் தொடங்கும் வேளையில், அவர் வெட்டுக்கிளிக் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். | ஆமோ 7:4 ஆமோ 7:7 ஆமோ 8:1 எரே 1:11-16 எரே 24:1 எசே 11:25 சகரி 1:20 |
| 2 | நாட்டிலிருந்த புல்லையெல்லாம் அவை தின்று தீர்த்துக் கொண்டிருந்த வேளையில் நான் “இறைவனாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்: உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்: யாக்கோபு எப்படி நிலைநிற்கப் போகிறான்? அவன் மிகச் சிறயவன் அல்லவா!” என்றேன். | யாத் 10:15 வெளிப் 9:4 |
| 3 | ஆண்டவரும் இதைக் குறித்து மனம் மாறினார்: “இது நிகழாது,” என்றார் தலைவராகிய ஆண்டவர்.” | ஆமோ 7:6 உபா 32:36 1நாளா 21:15 சங் 106:45 ஓசி 11:8 யோவே 2:14 யோனா 3:10 யாக் 5:16 |
| 4 | தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “தலைவராகிய ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பாக நெருப்பு மழையை வருவித்தார்: அந்த நெருப்பு ஆழ்கடலை வற்றச் செய்து நிலத்தையும் விழுங்கிக் கொண்டிருந்தது. | ஆமோ 7:1 ஆமோ 7:7 வெளிப் 4:1 |
| 5 | நான், “தலைவராகிய ஆண்டவரே, அதை நிறுத்தியருளும்: உம்மைக் கெஞ்சி மன்றாடுகின்றேன்: யாக்கோபு எப்படி நிலைநிற்கப் போகின்றான்? அவன் மிகச் சிறியவன் அல்லவா!” என்றேன். | ஆமோ 7:2 சங் 85:4 ஏசா 10:25 |
| 6 | ஆண்டவரும் இதைக் குறித்து மனம் மாறினார்: “இதுவும் நிகழாது,” என்றார் தலைவராகிய ஆண்டவர்.” | நியா 2:18 நியா 10:16 சங் 90:13 சங் 135:14 எரே 26:19 யோனா 4:2 |
| 7 | ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “தூக்கு நூல் குண்டின் துணைக்கொண்டு கட்டப்பட்ட ஒரு மதில் அருகில் அவர் நின்று கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு தூக்கு நூல் குண்டு இருந்தது. | 2சாமு 8:2 2இரா 21:13 ஏசா 28:17 ஏசா 34:11 புலம் 2:8 எசே 40:3 சகரி 2:1 சகரி 2:2 வெளிப் 11:1 வெளிப் 21:15 |
| 8 | “ஆமோஸ்! நீ காண்பதென்ன?” என்று ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார். நான், “அது தூக்கு நூல் குண்டு” என்றேன். தலைவர் தொடர்ந்து சொன்னார்: “தூக்கு நூல் குண்டை என் மக்களாகிய இஸ்ரயேலின் நடுவில் தொங்கவிடப் போகிறேன்: இனி நான் அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்லப்போவதில்லை”. | எரே 1:11-13 சகரி 5:2 |
| 9 | ஈசாக்கின் உயர்ந்த இடங்கள் பாழாக்கப்படும்: இஸ்ரயேலின் புனித இடங்கள் பாலைவெளி ஆக்கப்படும்: எரொபவாம் வீட்டாருக்கு எதிராக நான் வாளெடுத்து வருவேன்.” | ஆமோ 3:14 ஆமோ 5:5 ஆமோ 8:14 |
| 10 | பிறகு, பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினான்: “இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி செய்கிறான். | 1இரா 12:31 1இரா 12:32 1இரா 13:33 2இரா 14:23 2இரா 14:24 2நாளா 13:8 2நாளா 13:9 எரே 20:1-3 எரே 29:26 எரே 29:27 மத் 21:23 |
| 11 | அவன் சொல்வதை எல்லாம் இந்த நாட்டால் தாங்கமுடியவில்லை. ஏனெனில், “எரொபவாம் வாளால் மடிவான்: அவனது நாட்டைவிட்டு இஸ்ரயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும்” என்று ஆமோஸ் சொல்லுகிறான்.” | எரே 26:9 எரே 28:10 எரே 28:11 அப் 6:14 |
| 12 | பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு: யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு: அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். | 1சாமு 9:9 2நாளா 16:10 ஏசா 30:10 |
| 13 | பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே: ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்” என்று சொன்னான். | ஆமோ 2:12 அப் 4:17 அப் 4:18 அப் 5:28 அப் 5:40 |
| 14 | ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: “நான் இறைவாக்கினன் இல்லை: இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை: நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். | 1இரா 20:35 2இரா 2:3 2இரா 2:5 2இரா 2:7 2இரா 4:38 2இரா 6:1 2நாளா 16:7 2நாளா 19:2 2நாளா 20:34 |
| 15 | ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, “என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு” என்று அனுப்பினார். | 2சாமு 7:8 சங் 78:70-72 மத் 4:18 மத் 4:19 மத் 9:9 |
| 16 | எனவே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்: “இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே: ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராகப் பேசாதே” என்று நீ சொல்கிறாய்! | 1சாமு 15:16 1இரா 22:19 எரே 28:15-17 |
| 17 | ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “உன் மனைவி நகரில் விலைமகளாய் இருப்பாள்: உன் புதல்வர் புதல்வியர் வாளால் மடிவர்: உன் நிலபுலம் பங்கு போட்டுக் கொள்ளப்படும், நீயோ புனிதமற்ற நாட்டிலே மாண்டு போவாய்: இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே அடிமையாகக் கொண்டு போகப்படும்.” | ஏசா 13:16 எரே 20:6 எரே 28:12 எரே 28:16 எரே 29:21 எரே 29:25 எரே 29:31 எரே 29:32 புலம் 5:11 ஓசி 4:13 ஓசி 4:14 சகரி 14:2 |