சங்கீதம் 78:70-72 - WCV
70
அவர் தாவீதைத் தம் ஊழியராய்த் தேர்ந்தெடுத்தார்: ஆட்டு மந்தைகளினின்று அவரைப் பிரித்தெடுத்தார்.
71
இறைவன் தம் மக்களான யாக்கோபை, தம் உரிமைச் சொத்தான இஸ்ரயேலை, பால் கொடுக்கும் ஆடுகளைப் பேணிய தாவீது மேய்க்குமாறு செய்தார்.
72
அவரும் நேரிய உள்ளத்தோடு அவர்களைப் பேணினார்: கைவன்மையாலும் அறிவுத்திறனாலும் அவர்களை வழிநடத்தினார்.