இணை வசன வேதாகமம்

நீதிமொழிகள் 21

                   
புத்தகங்களைக் காட்டு
1மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது: வாய்க்கால் நீரைப்போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார்.நீதி 16:1 நீதி 16:9 நீதி 20:24 எஸ்றா 7:27 எஸ்றா 7:28 நெகே 1:11 நெகே 2:4 சங் 105:25 சங் 106:46 தானி 4:35 அப் 7:10
2மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால் ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.நீதி 16:2 நீதி 16:25 நீதி 20:6 நீதி 30:12 சங் 36:2 லூக் 18:11 லூக் 18:12 கலா 6:3 யாக் 1:22
3பலிசெலுத்துவதைவிட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்.நீதி 15:8 1சாமு 15:22 சங் 50:8 ஏசா 1:11-17 எரே 7:21-23 ஓசி 6:6 மீகா 6:6-8 மாற் 12:33
4மேட்டிமையான பார்வை, இறுமாப்புக்கொண்ட உள்ளம் - இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள்.நீதி 6:17 நீதி 8:13 நீதி 30:13 சங் 10:4 ஏசா 2:11 ஏசா 2:17 ஏசா 3:16 லூக் 18:14 1பேது 5:5
5திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்: பதற்றத்துடன் வேலைசெய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.நீதி 10:4 நீதி 13:4 நீதி 27:23-27 எபே 4:28 1தெச 4:11 1தெச 4:12
6ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்துவிடும்: அவரது உயிரையும் அது வாங்கி விடும்.நீதி 10:2 நீதி 13:11 நீதி 20:14 நீதி 20:21 நீதி 22:8 நீதி 30:8 எரே 17:11 1தீமோ 6:9 1தீமோ 6:10 தீத் 1:11 2பேது 2:3
7பொல்லார் நேர்மையானதைச் செய்ய மறுப்பதால், அவர்களது கொடுமை அவர்களையே வாரிக் கொண்டுபோகும்.நீதி 1:18 நீதி 1:19 நீதி 10:6 நீதி 22:22 நீதி 22:23 சங் 7:16 சங் 9:16 ஏசா 1:23 ஏசா 1:24 எரே 7:9-11 எரே 7:15-11 எசே 22:13 எசே 22:14 மீகா 3:9-12
8குற்றம் செய்பவர் வழி கோணலானது: குற்றமற்றவர் செய்கை நேர்மையானது.ஆதி 6:5 ஆதி 6:6 ஆதி 6:12 யோபு 15:14-16 சங் 14:2 சங் 14:3 பிரச 7:29 பிரச 9:3 1கொரி 3:3 எபே 2:2 எபே 2:3 தீத் 3:3
9மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட, குடிசை வாழ்க்கையே மேல்.நீதி 21:19 நீதி 12:4 நீதி 19:13 நீதி 25:24 நீதி 27:15 நீதி 27:16
10பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்: தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை.நீதி 3:29 நீதி 12:12 சங் 36:4 சங் 52:2 சங் 52:3 மாற் 7:21 மாற் 7:22 1கொரி 10:6 யாக் 4:1-5 1யோவா 2:16
11ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்: உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும் போது அவர் மேலும் அறிவுடையவராவார்.நீதி 19:25 எண் 16:34 உபா 13:11 உபா 21:21 சங் 64:7-9 அப் 5:5 அப் 5:11-14 1கொரி 10:6-11 எபிரெ 2:1-3 எபிரெ 10:28 எபிரெ 10:29 வெளிப் 11:13
12நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்: அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்துவிடுகிறார்.யோபு 5:3 யோபு 8:15 யோபு 18:14-21 யோபு 21:28-30 யோபு 27:13-23 சங் 37:35 சங் 37:36 சங் 52:5 சங் 107:43 ஓசி 14:9 ஆபகூ 2:9-12
13ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக்கொள்கிறானோ, அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவி கொடுக்கமாட்டார்.சங் 58:4 சகரி 7:11 அப் 7:57
14மறைவாக நன்கொடை கொடுத்து சினத்தைத் தணிப்பார்கள்: மடியில் கைக்கூலி திணித்துச் சீற்றத்தை ஆற்றுவார்கள்.நீதி 17:8 நீதி 17:23 நீதி 18:16 நீதி 19:6 ஆதி 32:20 ஆதி 43:11 1சாமு 25:35
15நீதி நிலைநாட்டுவது நேர்மையானவருக்கு மகிழ்ச்சியளிக்கும்: தீமை செய்வோருக்கோ அது திகிலுண்டாக்கும்.யோபு 29:12-17 சங் 40:8 சங் 112:1 சங் 119:16 சங் 119:92 பிரச 3:12 ஏசா 64:5 யோவா 4:34 ரோம 7:22
16விவேகம் காட்டும் வழியை விட்டு விலகிச் செல்பவர், செத்தாரிடையே தங்க விரைபவர்.நீதி 13:20 சங் 125:5 செப் 1:6 யோவா 3:19 யோவா 3:20 எபிரெ 6:4-6 எபிரெ 10:26 எபிரெ 10:27 எபிரெ 10:38 2பேது 2:21 2பேது 2:22 1யோவா 2:19
17ஒய்யாரமான வாழ்க்கையை நாடுகிறவர் ஏழையாவார்: மதுவையும் நறுமணப் பொருள்களையும் விரும்புகிறவர் செல்வராகமாட்டார்.நீதி 21:20 நீதி 5:10 நீதி 5:11 நீதி 23:21 லூக் 15:13-16 லூக் 16:24 லூக் 16:25 1தீமோ 5:6 2தீமோ 3:4
18நல்லவருக்குப் பொல்லாங்கு செய்யப் பார்ப்பவர் தாமே அவருக்குப் பதிலாள் ஆகிவிடுவார்: நேர்மையானவரை வஞ்சிக்கப் பார்ப்பவர் அவருக்குப் பதிலாகத் தாமே வஞ்சனைக்கு ஆளாவார்.நீதி 11:8 ஏசா 43:3 ஏசா 43:4 ஏசா 53:4 ஏசா 53:5 ஏசா 55:8 ஏசா 55:9 1பேது 3:18
19நச்சரிப்பவளும் சிடுசிடுப்பவளுமான மனைவியுடன் வாழ்வதைவிட, பாலை நிலத்தில் தனியே வாழ்வதே மேல்.நீதி 21:9 சங் 55:6 சங் 55:7 சங் 120:5 சங் 120:6 எரே 9:2
20ஞானமுள்ளவர் வீட்டில் செல்வமும் அரும்பொருள்களும் இருக்கும்: மதிகேடர் தம் செல்வத்தைக் கரைத்துவிடுவார்.நீதி 10:22 நீதி 15:6 சங் 112:3 பிரச 5:19 பிரச 7:11 பிரச 10:19 மத் 6:19 மத் 6:20 லூக் 6:45
21நேர்மையையும் இரக்கத்தையும் கடைப்பிடித்து நடப்பவர், நீடித்து வாழ்வார், மேன்மையும் அடைவார்.நீதி 15:9 ஏசா 51:1 ஓசி 6:3 மத் 5:6 ரோம 14:19 பிலிப் 3:12 1தெச 5:21 1தீமோ 6:11 2தீமோ 2:22 எபிரெ 12:14
22வீரர் நிறைந்த பட்டணத்தையும் நல்வாழ்வையும் ஞானமுள்ளவர் கைப்பற்றுவார்: அவர்கள் நம்பியிருந்த அரணையும் இடித்துக் தள்ளுவார்.2சாமு 20:16-22 பிரச 7:19 பிரச 9:13-18
23தம் வாயையும் நாவையும் காப்பவர், இடுக்கண் வராமல் தம்மைக் காத்துக்கொள்வார்.நீதி 10:19 நீதி 12:13 நீதி 13:3 நீதி 17:27 நீதி 17:28 நீதி 18:21 யாக் 1:26 யாக் 3:2-13
24ஏளனம் செய்யும் செருக்குடையோரின் பெயர் இறுமாப்பு: அளவு கடந்த பெருமையுடன் நடப்பதே அவர் போக்கு.நீதி 6:17 நீதி 16:18 நீதி 18:12 நீதி 19:29 எஸ்தர் 3:5 எஸ்தர் 3:6 பிரச 7:8 பிரச 7:9 மத் 2:16
25சோம்பேறியின் அவா அவரைக் கொல்லும்: ஏனெனில், அவர் கைகள் வேலை செய்ய மறுக்கின்றன.நீதி 6:6-11 நீதி 12:24 நீதி 12:27 நீதி 13:4 நீதி 15:19 நீதி 19:24 நீதி 20:4 நீதி 22:13 நீதி 24:30-34 நீதி 26:13 நீதி 26:16 மத் 25:26
26அவர் நாள் முழுதும் பிறர் பொருளுக்காக ஏக்கங்கொண்டிருப்பார்: ஆனால் சான்றோர் தம் பொருளை இல்லையென்னாது வழங்குவர்.அப் 20:33-35 1தெச 2:5-9
27பொல்லார் செலுத்தும் பலி அருவருக்கத்தக்கது: தீய நோக்கத்தோடு அவர்கள் செலுத்தும் பலி இன்னும் அருவருக்கத்தக்கதன்றோ?நீதி 15:8 நீதி 28:9 1சாமு 13:12 1சாமு 13:13 1சாமு 15:21-23 சங் 50:8-13 ஏசா 1:11-16 ஏசா 66:3 எரே 6:20 எரே 7:11 எரே 7:12 ஆமோ 5:21 ஆமோ 5:22
28பொய்ச்சான்று கூறுபவன் கெட்டழிவான்: உன்னிப்பாய்க் கேட்பவன் பேச்சோ என்றைக்கும் ஏற்புடையதாகும்.நீதி 6:19 நீதி 19:5 நீதி 19:9 நீதி 25:18 யாத் 23:1 உபா 19:16-19
29பொல்லார் முகத்தில் போலி வீரம் காணப்படும்: நேர்மையானவர் தம் நடத்தை சீரானது என்னும் உறுதியுடனிருப்பார்.நீதி 28:14 நீதி 29:1 எரே 3:2 எரே 3:3 எரே 5:3 எரே 8:12 எரே 44:16 எரே 44:17
30ஆண்டவரின் எதிரில் நிற்கக் கூடிய ஞானமுமில்லை, விவேகமுமில்லை, அறிவுரையுமில்லை.நீதி 19:21 ஏசா 7:5-7 ஏசா 8:9 ஏசா 8:10 ஏசா 14:27 ஏசா 46:10 ஏசா 46:11 எரே 9:23 யோனா 1:13 அப் 4:27 அப் 4:28 அப் 5:39 1பேது 2:8
31போர் நாளுக்கென்று குதிரையை ஆயத்தமாக வைத்திருக்கலாம்: ஆனால் வெற்றி கிடைப்பது ஆண்டவராலேயே.சங் 20:7 சங் 33:17 சங் 33:18 சங் 147:10 பிரச 9:11 ஏசா 31:1

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.