இணை வசன வேதாகமம்

எபேசியர் 6

                   
புத்தகங்களைக் காட்டு
1பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது.ஆதி 28:7 ஆதி 37:13 லேவி 19:3 உபா 21:18 1சாமு 17:20 எஸ்தர் 2:20 நீதி 1:8 நீதி 6:20 நீதி 23:22 நீதி 30:11 நீதி 30:17 எரே 35:14 லூக் 2:51 கொலோ 3:20-25
2“உன் தந்தையையும் தாயையும் மதித்து நட” என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை.யாத் 20:12 உபா 27:16 நீதி 20:20 எரே 35:18 எசே 22:7 மல்கி 1:6 மத் 15:4-6 மாற் 7:9-13 ரோம 13:7
3“இதனால் நீ நலம் பெறுவாய்: மண்ணுலகில் நீடுழி வாழ்வாய்” என்பதே அவ்வாக்குறுதி.உபா 4:40 உபா 5:16 உபா 6:3 உபா 6:18 உபா 12:25 உபா 12:28 உபா 22:7 ரூத் 3:1 சங் 128:1 சங் 128:2 ஏசா 3:10 எரே 42:6
4தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்துவாருங்கள்.ஆதி 31:14 ஆதி 31:15 1சாமு 20:30-34 கொலோ 3:21
5அடிமைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல் இவ்வுலகில் உங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தோடும் நடுக்கத்தோடும், முழுமனத்தோடும் கீழ்ப்படியுங்கள்.ஆதி 16:9 சங் 123:2 மல்கி 1:6 மத் 6:24 மத் 8:9 அப் 10:7 அப் 10:8 கொலோ 3:22 1தீமோ 6:1-3 தீத் 2:9 தீத் 2:10 1பேது 2:18-21
6மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு, வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவர்களாயிராமல் கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள்.பிலிப் 2:12 கொலோ 3:22 1தெச 2:4
7மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வதுபோல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள்.ஆதி 31:6 ஆதி 31:38-40 2இரா 5:2 2இரா 5:3 2இரா 5:13
8அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர். இது உங்களுக்குத் தெரியும் அன்றோ!நீதி 11:18 நீதி 23:18 ஏசா 3:11 மத் 5:12 மத் 6:1 மத் 6:4 மத் 10:41 மத் 10:42 மத் 16:27 லூக் 6:35 லூக் 14:14 ரோம 2:6-10 2கொரி 5:10 கொலோ 3:24 எபிரெ 10:35 எபிரெ 11:26
9தலைவர்களே, நீங்களும் உங்கள் அடிமைகளிடம் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள். அவர்களை அச்சுறுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே தலைவர் விண்ணுலகில் உண்டு என்பதையும் அவர் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.லேவி 19:13 லேவி 25:39-46 உபா 15:11-16 உபா 24:14 உபா 24:15 நெகே 5:5 நெகே 5:8 நெகே 5:9 யோபு 24:10-12 யோபு 31:13-15 ஏசா 47:6 ஏசா 58:3-6 ஆமோ 8:4-7 மல்கி 3:5 கொலோ 4:1 யாக் 5:4
10இறுதியாக, நீங்கள் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள்.2கொரி 13:11 பிலிப் 3:1 பிலிப் 4:8 1பேது 3:8
11அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள்.எபே 4:24 ரோம 13:14 கொலோ 3:10
12ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம்.லூக் 13:24 1கொரி 9:25-27 2தீமோ 2:5 எபிரெ 12:1 எபிரெ 12:4
13எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று, அனைத்தின் மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமைபெறும்படி, கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.எபே 6:11-17 2கொரி 10:4
14ஆகையால், உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக் கொண்டு, நீதியை மார்புக்கவசமாக அணிந்து நில்லுங்கள்:எபே 5:9 ஏசா 11:5 லூக் 12:35 2கொரி 6:7 1பேது 1:13
15அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை உங்கள் காலில் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள்.உபா 33:25 உன்ன 7:1 ஆபகூ 3:19 லூக் 15:22
16எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதைக் கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அணைத்துவிட முடியும்.ஆதி 15:1 சங் 56:3 சங் 56:4 சங் 56:10 சங் 56:11 நீதி 18:10 2கொரி 1:24 2கொரி 4:16-18 எபிரெ 6:17 எபிரெ 6:18 எபிரெ 11:24-34 1பேது 5:8 1பேது 5:9 1யோவா 5:4 1யோவா 5:5
17மீட்பைத் தலைச்சீராவாகவும், கடவுளின் வார்த்தையைத் தூய ஆவி அருளும் போர்வாளாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்.1சாமு 17:5 1சாமு 17:58 ஏசா 59:17 1தெச 5:8
18எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்: எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாருங்கள்: இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள்.எபே 1:16 யோபு 27:10 சங் 4:1 சங் 6:9 ஏசா 26:16 தானி 6:10 லூக் 3:26 லூக் 3:37 லூக் 18:1-7 லூக் 21:36 அப் 1:14 அப் 6:4 அப் 10:2 அப் 12:5 ரோம 12:12 பிலிப் 4:6 கொலோ 4:2 1தெச 5:17 2தீமோ 1:3
19நான் பேசும்போது நற்செய்தியின் மறைபொருளைத் துணிவுடன் தெரியப்படுத்துவதற்கான வார்த்தைகளைக் கடவுள் எனக்குத் தந்தருளுமாறு எனக்காகவும் மன்றாடுங்கள்.ரோம 15:30 2கொரி 1:11 பிலிப் 1:19 கொலோ 4:3 1தெச 5:25 2தெச 3:1 பிலேமோ 1:22 எபிரெ 13:18
20நான் விலங்கிடப்பட்டிருந்தும் இந்த நற்செய்தியின் தூதுவனாக இருக்கிறேன். நான் பேச வேண்டிய முறையில் அதைத் துணிவுடன் எடுத்துக் கூற எனக்காக மன்றாடுங்கள்.நீதி 13:17 ஏசா 33:7 2கொரி 5:20
21என்னைப்பற்றிய செய்திகளையும், நான் என்ன செய்கிறேன் என்பதையும் நீங்களும் அறிந்திருக்கும்படி, என் அன்பார்ந்த சகோதரர் திக்கிக்கு எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரிவிப்பார். அவர் ஆண்டவரது பணியில் நம்பிக்கைக்குரிய திருத்தொண்டர்.பிலிப் 1:12 கொலோ 4:7
22எங்களைப்பற்றிய செய்திகளை உங்களுக்குத் தெரிவித்து உங்கள் உள்ளங்களை ஊக்குவிக்கவே அவரை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன்.பிலிப் 2:19 பிலிப் 2:25 கொலோ 4:7 கொலோ 4:8 1தெச 3:2 2தெச 2:17
23தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் நம்பிக்கையோடு கூடிய அன்பும் அமைதியும் சகோதரர் சகோரரிகள் அனைவருக்கும் உரித்தாகுக!ரோம 1:7 1கொரி 1:3 ஆதி 43:23 1சாமு 25:6 சங் 122:6-9 யோவா 14:27 கலா 6:16 1பேது 5:14 வெளிப் 1:4
24நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது அழியாத அன்பு கொண்டிருக்கும் அனைவரோடும் இறை அருள் இருப்பதாக!1கொரி 16:23 2கொரி 13:14 கொலோ 4:18 2தீமோ 4:22 தீத் 3:15 எபிரெ 13:25

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.