இணை வசன வேதாகமம்

கலாத்தியர் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1கலாத்திய மாநிலத்தில் உள்ள திருச்சபைகளுக்கு, எந்த ஒரு தனி மனிதராலோ மனித அதிகாரத்தாலோ ஏற்படுத்தப்படாமல்ரோம 1:1 1கொரி 1:1
2இயேசு கிறிஸ்துவாலும் இறந்த அவரை உயிர்த்தெழச் செய்த தந்தையாம் கடவுளாலும் திருத்தூதனாக ஏற்படுத்தப்பட்ட பவுலாகிய நானும் என்னுடன் இருக்கும் சகோதரர் அனைவரும் எழுதுவது:பிலிப் 2:22 பிலிப் 4:21
3நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!ரோம 1:7-15 1கொரி 1:3 2கொரி 1:2 2கொரி 13:14 எபே 1:2 பிலிப் 1:2 கொலோ 1:2 1தெச 1:1 2தெச 1:2 2யோவா 1:3
4இவரே நம் தந்தையாம் கடவுளின் திருவுளத்திற்கேற்ப இன்றைய பொல்லாத காலத்தினின்று நம்மை விடுவிக்கமாறு நம்முடைய பாவங்களின் பொருட்டுத் தம்மையே ஒப்புவித்தார்.கலா 2:20 மத் 20:28 மத் 26:28 மாற் 10:45 லூக் 22:19 யோவா 10:11 யோவா 10:17 யோவா 10:18 ரோம 4:25 எபே 5:2 1தீமோ 2:6 தீத் 2:14 எபிரெ 9:14 எபிரெ 10:9 எபிரெ 10:10 1பேது 2:24 1பேது 3:18 1யோவா 2:2 1யோவா 3:16 வெளிப் 1:5
5தந்தையாம் கடவுளுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.1நாளா 29:13 சங் 41:13 சங் 72:19 ஏசா 24:15 ஏசா 42:12 மத் 6:13 லூக் 2:14 ரோம 11:36 ரோம 16:27 எபே 1:12 பிலிப் 4:20 1தீமோ 1:17 2தீமோ 4:18 எபிரெ 13:21 1பேது 5:11 2பேது 3:18 யூதா 1:25 வெளிப் 4:9-11 வெளிப் 5:12 வெளிப் 7:12 வெளிப் 14:7
6கிறிஸ்துவின் பொருட்டு அருள் கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது.மாற் 6:6 யோவா 9:30
7வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை.கலா 2:4 கலா 4:17 கலா 5:10 கலா 5:12 கலா 6:12 கலா 6:13 கலா 6:17 அப் 15:1-5 அப் 15:24-5 அப் 20:30 ரோம 16:17 ரோம 16:18 2கொரி 11:13
8நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக!கலா 1:9 1கொரி 16:22 2கொரி 11:13 2கொரி 11:14 1தீமோ 1:19 1தீமோ 1:20 தீத் 3:10 வெளிப் 22:18 வெளிப் 22:19
9ஏற்கெனவே சொல்லியிருக்கின்றோம்: நீங்கள் பெற்றுக் கொண்ட நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக!2கொரி 1:17 2கொரி 13:1 2கொரி 13:2 பிலிப் 3:1 பிலிப் 4:4
10இப்படிப் பேசும்போது நான் நாடுவது மனிதருடைய நல்லெண்ணமா? கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? நான் இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால் கிறிஸ்துவுக்குப் பணியாளனாய் இருக்க முடியாது.அப் 4:19 அப் 4:20 அப் 5:29 2கொரி 5:9-11 1தெச 2:4
11சகோதர சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல.கலா 1:1 1கொரி 2:9 1கொரி 2:10 1கொரி 11:23 1கொரி 15:1-3 எபே 3:3-8
12எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை: எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது.
13நான் யூதநெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன்.அப் 22:3-5 அப் 26:4 அப் 26:5
14மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூதநெறியில் சிறந்து விளங்கினேன்.ஏசா 29:13 ஏசா 57:12
15ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள்,உபா 7:7 உபா 7:8 1சாமு 12:22 1நாளா 28:4 1நாளா 28:5 மத் 11:26 லூக் 10:21 1கொரி 1:1 எபே 1:5 எபே 1:9 எபே 3:11
16தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை.மத் 16:17 1கொரி 2:9-13 2கொரி 4:6 எபே 1:17 எபே 1:18 எபே 3:5-10
17எனக்குமுன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன்.கலா 1:18 அப் 9:20-25
18மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுநான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன்.அப் 9:26-29 அப் 22:17 அப் 22:18
19ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை.மத் 10:3 மாற் 3:18 லூக் 6:15 அப் 1:13
20நான் உங்களுக்கு எழுதுவதில் பொய் ஒன்றுமில்லை: இதற்குக் கடவுளே சாட்சி!ரோம 9:1 2கொரி 11:10 2கொரி 11:11 2கொரி 11:31
21பிறகு நான் சிரியா, சிலிசியப் பகுதிகளுக்குச் சென்றேன்.அப் 9:30 அப் 11:25 அப் 11:26 அப் 13:1 அப் 15:23 அப் 15:41 அப் 18:18 அப் 21:3
22ஆயினும் யூதேய நாட்டிலிருந்த கிறிஸ்தவச் சபைகளுக்கு அதுவரை அறிமுகம் ஆகாமலேயே இருந்தேன்.அப் 9:31 1தெச 2:14
23“ஒரு காலத்தில் தங்களைத் துன்புறுத்தியவன், தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தை இப்பொழுது நற்செய்தியாக அறிவிக்கிறான்” என்று மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள்.அப் 9:13 அப் 9:20 அப் 9:26 1கொரி 15:8-10 1தீமோ 1:13-16
24அதற்காக என் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.எண் 23:23 லூக் 2:14 லூக் 7:16 லூக் 15:10 லூக் 15:32 அப் 11:18 அப் 21:19 அப் 21:20 2கொரி 9:13 கொலோ 1:3 கொலோ 1:4 2தெச 1:10 2தெச 1:12

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.