1கொரிந்து நகரில் உள்ள கடவுளின் திருச்சபைக்கும் அக்காயா மாநிலம் முழுவதிலும் வாழும் இறைமக்கள் அனைவருக்கும் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும் சகோதரராகிய திமொத்தேயுவும் எழுதுவது:ரோம 1:1-5 1கொரி 1:1 1தீமோ 1:1 2தீமோ 1:1 2நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!ரோம 1:7 2சாமு 15:20 1நாளா 12:18 தானி 4:1 1கொரி 1:3 கலா 6:16 எபே 6:23 பிலிப் 1:2 கொலோ 1:2 1தெச 1:1 2தெச 1:2 பிலேமோ 1:3 3நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று: அவரைப் போற்றுவோம்.ஆதி 14:20 1நாளா 29:10 நெகே 9:5 யோபு 1:21 சங் 18:46 சங் 72:19 தானி 4:34 எபே 1:3 1பேது 1:3 4கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.2கொரி 7:6 2கொரி 7:7 சங் 86:17 ஏசா 12:1 ஏசா 49:10 ஏசா 51:3 ஏசா 51:12 ஏசா 52:9 ஏசா 66:12 ஏசா 66:13 யோவா 14:16 யோவா 14:18 யோவா 14:26 2தெச 2:16 2தெச 2:17 5கிறிஸ்து நமக்காக மிகுதியாகத் துன்புற்றார்: அது போல அவர் வழியாக நாம் மிகுதியான ஆறுதலும் பெறுகிறோம்.2கொரி 4:10 2கொரி 4:11 2கொரி 11:23-30 அப் 9:4 1கொரி 4:10-13 பிலிப் 1:20 பிலிப் 3:10 கொலோ 1:24 6ஆகவே நாங்கள் துன்புறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவும்தான்: நாங்கள் ஆறுதல் பெறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவே. நாங்கள் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதைப் போல நீங்களும் உங்கள் துன்பங்களைத் தளராமனத்துடன் பொறுத்துக் கொள்வதற்கு இந்த ஆறுதல் ஆற்றல் அளிக்கிறது.2கொரி 1:4 2கொரி 4:15-18 1கொரி 3:21-23 2தீமோ 2:10 7நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்ததைப்போல் எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வாறு செய்வீர்கள் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறோம்.2கொரி 1:14 2கொரி 7:9 2கொரி 12:20 பிலிப் 1:6 பிலிப் 1:7 1தெச 1:3 1தெச 1:4 8சகோதர சகோதரிகளே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட இன்னல்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அவை எங்களை அளவுக்கு மிஞ்சி வாட்டின: எங்களால் தாங்க முடியாத சுமையாக மாறின. இனிப் பிழைப்போம் என்னும் நம்பிக்கையே இல்லாமல் போயிற்று.2கொரி 4:7-12 அப் 19:23-35 1கொரி 15:32 1கொரி 16:9 9எங்களுக்கு மரணதண்டனையே விதிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. நாங்கள் எங்களை அல்ல, இறந்தோரை உயிர்த்தெழச்செய்யும் கடவுளையே நம்பி இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நிகழ்ந்தது.2கொரி 3:5 2கொரி 4:7 2கொரி 12:7-10 யோபு 40:14 சங் 22:29 சங் 44:5-7 நீதி 28:26 எரே 9:23 எரே 9:24 எரே 17:5-7 எசே 33:13 லூக் 18:9 10அவரேதான் இத்துணைக் கொடிய சாவிலிருந்து எங்களை விடுவித்தார்: இன்னும் எங்களை விடுவிப்பார்.1சாமு 7:12 1சாமு 17:37 யோபு 5:17-22 சங் 34:19 ஏசா 46:3 அப் 26:21 2தீமோ 4:17 2பேது 2:9 11நீங்களும் உங்கள் மன்றாட்டு மூலமாக எங்களுக்கு உதவினால் இனிமேலும் எங்களை விடுவிப்பார் என்று எதிர் பார்க்கிறோம். இவ்வாறு பலர் எங்களுக்காக மன்றாடி இந்த அருளுக்காக எங்கள் சார்பில் கடவுளுக்கு நன்றி செலுத்துவர்.2கொரி 9:14 ஏசா 37:4 ஏசா 62:6 ஏசா 62:7 அப் 12:5 ரோம 15:30-32 எபே 6:18 எபே 6:19 பிலிப் 1:19 கொலோ 4:3 1தெச 5:25 2தெச 3:1 பிலேமோ 1:22 எபிரெ 13:18 யாக் 5:16-18 12மக்களிடையே, குறிப்பாக உங்களிடையே மனித ஞானத்தின்படி நடவாமல், கடவுளின் அருளைச் சார்ந்து அவர் தரும் நேர்மையோடும் நாணயத்தோடும் நடந்து வந்தோம் என எங்கள் மனச்சான்று உறுதியாகச் சொல்லுகிறது. இதுவே எங்களுக்குப் பெருமை.யோபு 13:15 யோபு 23:10-12 யோபு 27:5 யோபு 27:6 யோபு 31:1-40 சங் 7:3-5 சங் 44:17-21 ஏசா 38:3 அப் 24:16 ரோம 9:1 1கொரி 4:4 கலா 6:4 1தீமோ 1:5 1தீமோ 1:19 1தீமோ 1:20 எபிரெ 13:18 1பேது 3:16 1பேது 3:21 1யோவா 3:19-22 13நாங்கள் உங்களுக்கு எழுதும் திருமுகங்களில் நீங்கள் வாசித்துப் புரிந்து கொள்ள முடியாதது எதுவுமில்லை. இப்போது நீங்கள் எங்களை ஓரளவுக்குத்தான் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.2கொரி 4:2 2கொரி 5:11 2கொரி 13:6 பிலேமோ 1:6 14ஆனால் நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று, நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள்.2கொரி 2:5 ரோம 11:25 1கொரி 11:18 15இந்த உறுதியான நம்பிக்கை இருந்ததால்தான் நான் முதலில் உங்களிடம் வரத் திட்டமிட்டேன். அப்போது நீங்களும் என்னை இருமுறை சந்திக்கும் பேற்றைப் பெற்றிருப்பீர்கள்.1கொரி 4:19 1கொரி 11:34 16மாசிதோனியாவுக்குப் போகும் வழியிலும் அங்கிருந்து திரும்பி வரும் வழியிலும் நான் உங்களைச் சந்தித்திருப்பேன். நீங்களும் என்னை யூதேயாவுக்கு வழியனுப்பி வைத்திருப்பீர்கள்.அப் 19:21 அப் 19:22 அப் 21:5 1கொரி 16:5-7 17இப்படித் திட்டமிட்ட பிறகு நான் பொறுப்பற்ற முறையில் அதை மாற்றிவிட்டேன் என நினைக்கிறீர்களா? அல்லது உள்நோக்கத்தோடு திட்டமிடுகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஒரே நேரத்தில் ‘ஆம் ‘ என்றும் ‘இல்லை’ என்றும் சொல்பவன் நான் என்று நினைக்கிறீர்களா?நியா 9:4 எரே 23:32 செப் 3:4 18நான் ஒரே நேரத்தில் ‘ஆம் ‘ என்றும் ‘இல்லை’ என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராயிருப்பது போல் நான் சொல்வதும் உண்மையே.2கொரி 1:23 2கொரி 11:31 யோவா 7:28 யோவா 8:26 1யோவா 5:20 வெளிப் 3:7 வெளிப் 3:14 19நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் ‘ஆம்’ என உண்மையையே பேசுபவர்.சங் 2:7 மத் 3:17 மத் 16:16 மத் 16:17 மத் 17:5 மத் 26:63 மத் 26:64 மத் 27:40 மத் 27:54 மாற் 1:1 லூக் 1:35 யோவா 1:34 யோவா 1:49 யோவா 3:16 யோவா 3:35 யோவா 3:36 யோவா 6:69 யோவா 19:7 யோவா 20:28 யோவா 20:31 அப் 8:37 அப் 9:20 ரோம 1:3 ரோம 1:4 2பேது 1:17 1யோவா 1:3 1யோவா 5:9-13 1யோவா 5:20-13 2யோவா 1:9 வெளிப் 2:18 20அவர் சொல்லும் ‘ஆம்’ வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக ‘ஆமென் ‘ எனச் சொல்லுகிறோம்.ஆதி 3:15 ஆதி 22:18 ஆதி 49:10 சங் 72:17 ஏசா 7:14 ஏசா 9:6 ஏசா 9:7 லூக் 1:68-74 யோவா 1:17 யோவா 14:6 அப் 3:25 அப் 3:26 அப் 13:32-39 ரோம 6:23 ரோம 15:8 ரோம 15:9 கலா 3:16-18 கலா 3:22-18 எபிரெ 6:12-19 எபிரெ 7:6 எபிரெ 9:10-15 எபிரெ 11:13 எபிரெ 11:39 எபிரெ 11:40 எபிரெ 13:8 1யோவா 2:24 1யோவா 2:25 1யோவா 5:11 21கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்: இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.2கொரி 5:5 சங் 37:23 சங் 37:24 சங் 87:5 சங் 89:4 ஏசா 9:7 ஏசா 49:8 ஏசா 62:7 ரோம 16:25 கொலோ 2:7 1தெச 3:13 2தெச 2:8 2தெச 2:17 2தெச 3:3 1பேது 5:10 22அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.யோவா 6:27 ரோம 4:11 எபே 1:13 எபே 1:14 எபே 4:30 2தீமோ 2:19 வெளிப் 2:17 வெளிப் 7:3 வெளிப் 9:4 23என் உயிரின் மேல் ஆணையாகச் சொல்கிறேன்: உங்களை வருத்தத்துக்கு உள்ளாக்காமல் இருக்கவே இதுவரை நான் கொரிந்துக்கு வரவில்லை. கடவுளே இதற்குச் சாட்சி.2கொரி 1:18 2கொரி 11:11 2கொரி 11:31 ரோம 1:9 ரோம 9:1 கலா 1:20 பிலிப் 1:8 1தெச 2:5 24நீங்கள் எதையெதை நம்ப வேண்டும் என நாங்கள் உங்களை கட்டாயப்படுத்துவதில்லை. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் நிலையாய்த் தான் இருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சிக்காக உங்களோடு ஒத்துழைக்கிறோம்.மத் 23:8-10 மத் 24:49 1கொரி 3:5 2தீமோ 2:24-26 1பேது 5:3