அப்போஸ்தலர் 13:32-39 - WCV
32
இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளைகளாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி.
33
இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், “நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்” என்று எழுதப்பட்டுள்ளது.
34
மேலும் இறந்த அவர் இனி ஒருபோதும் அழிவுக்குட்படாதபடி கடவள் அவரை உயிர்த்தெழச் செய்தார். இதுபற்றித்தான் “நான் தாவீதுக்கு அருளிய தூய, மாறாத வாக்குறுதிகளை உங்களுள்ளும் தருவேன்” என்றும் கூறியிருக்கிறார்.
35
எனவே இன்னோர் இடத்தில் அவர், “உம் தூயவரை படுகுழியைக் காணவிடமாட்டீர்” என்றும் சொல்லியிருக்கிறார்.
36
ஏனென்றால் தாவீது தம் காலத்து மக்களிடையே கடவுளின் திட்டத்தை நிறைவேற்றி இறந்தார். அவர் தம் மூதாதையருடன் சேர்க்கப்பட்டார்: இவ்வாறு அழிவுக்குள்ளானார்.
37
ஆனால் கடவுளால் எழுப்பப்பட்டவரோ அழிவுக்குட்படவில்லை.
38
எனவே சகோதரரே, இது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும்: இவர் வழியாகவே உங்களுக்கப் பாவ மன்னிப்பு உண்டு என அறிவிக்கப்படுகிறது. மோசேயின் திருச்சட்டத்தால் உங்களை எந்தப் பாவத்திலிருந்தும் விடுவிக்கமுடியாது.
39
ஆனால் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் இவர்வழியாக விடுவிக்கப்படுகின்றனர்.