16
ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.
17
எலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக்கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார்: மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போயிற்று.
18
மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்: வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது.