யோபு 23:10-12 - WCV
10
ஆயினும் நான் போகும் வழியை அவர் அறிவார்: என்னை அவர் புடமிட்டால், நான் பொன்போல் துலங்கிடுவேன்.
11
அவர் அடிச்சுவடுகளை என் கால்கள் பின்பற்றின: அவர் நெறியில் நடந்தேன்: பிறழவில்லை.
12
அவர் நா உரைத்த ஆணையினின்று நான் விலகவில்லை: அவர்தம் வாய்மொழிகளை அரும்பொருளின் மேலாகப் போற்றினேன்.