1 | திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். | லூக் 2:1 |
2 | அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். | யோவா 11:49-51 யோவா 18:13 யோவா 18:14 யோவா 18:24 அப் 4:6 |
3 | “பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்” என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார். | மத் 3:5 மாற் 1:4 மாற் 1:5 யோவா 1:28 யோவா 3:26 |
4 | இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:”பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்: | ஏசா 40:3-5 மத் 3:3 மாற் 1:3 யோவா 1:23 |
5 | பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்: கோணலானவை நேராக்கப்படும்: கரடு முரடானவை சமதளமாக்கப்படும். | லூக் 1:51-53 ஏசா 2:11-17 ஏசா 35:6-8 ஏசா 40:4 ஏசா 49:11 ஏசா 61:1-3 எசே 17:24 யாக் 1:9 |
6 | மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்'.” | லூக் 2:10 லூக் 2:11 லூக் 2:30-32 சங் 98:2 சங் 98:3 ஏசா 40:5 ஏசா 49:6 ஏசா 52:10 மாற் 16:15 ரோம 10:12 ரோம 10:18 |
7 | தம்மிடம் திருமுழுக்குப் பெறப் புறப்பட்டு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு யோவான், “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? | ஆதி 3:15 சங் 58:4 சங் 58:5 ஏசா 59:5 மத் 3:7-10 மத் 23:33 யோவா 8:44 அப் 13:10 1யோவா 3:8 |
8 | மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்: ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உள்ளத்தில் சொல்லத் தொடங்காதீர்கள். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் செல்கிறேன். | ஏசா 1:16-18 எசே 18:27-31 அப் 26:20 2கொரி 7:10 2கொரி 7:11 கலா 5:22-24 பிலிப் 1:11 எபிரெ 6:7 எபிரெ 6:8 |
9 | ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தரா மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்” என்றார். | லூக் 13:7 லூக் 13:9 லூக் 23:29-31 ஏசா 10:33 ஏசா 10:34 எசே 15:2-4 எசே 31:18 தானி 4:14 தானி 4:23 மத் 3:10 மத் 7:19 யோவா 15:6 எபிரெ 10:28 எபிரெ 12:29 |
10 | அப்போது, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். | லூக் 3:8 அப் 2:37 அப் 9:6 அப் 16:30 |
11 | அதற்கு அவர் மறுமொழியாக, “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்: உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்” என்றார். | லூக் 11:41 லூக் 18:22 லூக் 19:8 ஏசா 58:7-11 தானி 4:27 மத் 25:40 மாற் 14:5-8 யோவா 13:29 அப் 10:2 அப் 10:4 அப் 10:31 2கொரி 8:3-14 1தீமோ 6:18 எபிரெ 6:10 யாக் 1:27 யாக் 2:15-26 1யோவா 3:17 1யோவா 4:20 |
12 | வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர். | லூக் 7:29 லூக் 15:1 லூக் 15:2 லூக் 18:13 மத் 21:31 மத் 21:32 |
13 | அவர், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்” என்றார். | லூக் 19:8 சங் 18:23 நீதி 28:13 ஏசா 1:16 ஏசா 1:17 ஏசா 55:6 ஏசா 55:7 எசே 18:21 எசே 18:22 எசே 18:27 எசே 18:28 மீகா 6:8 மத் 7:12 1கொரி 6:10 எபே 4:28 தீத் 2:11 தீத் 2:12 எபிரெ 12:1 |
14 | படைவீரரும் அவரை நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்: யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்: உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்” என்றார். | மத் 8:5 அப் 10:7 |
15 | அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். | யோவா 10:24 |
16 | யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்: ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். | மத் 3:11 மாற் 1:7 மாற் 1:8 யோவா 1:26 யோவா 1:33 அப் 1:5 அப் 11:16 அப் 13:24 அப் 13:25 அப் 19:4 அப் 19:5 |
17 | அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்: பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார். | எரே 15:7 மத் 3:12 |
18 | மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். | யோவா 1:15 யோவா 1:29 யோவா 1:34 யோவா 3:29-36 அப் 2:40 |
19 | குறுநில மன்னன் ஏரோது தன் சகோதரன் மனைவியாகிய ஏரோதியாவை வைத்திருந்ததன் பொருட்டும் அவன் இழைத்த மற்ற எல்லாத் தீச்செயல்கள் பொருட்டும் யோவான் அவனைக் கண்டித்தார். | நீதி 9:7 நீதி 9:8 நீதி 15:12 மத் 11:2 மத் 14:3 மத் 14:4 மாற் 6:17 மாற் 6:18 |
20 | எனவே அவன் தான் செய்த தீச்செயல்கள் எல்லாம் போதாதென்று அவரைச் சிறையிலும் அடைத்தான். | லூக் 13:31-34 2இரா 21:16 2இரா 24:4 2நாளா 24:17-22 2நாளா 36:16 நெகே 9:26 எரே 2:30 மத் 21:35-41 மத் 22:6 மத் 22:7 மத் 23:31-33 1தெச 2:15 1தெச 2:16 வெளிப் 16:6 |
21 | மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. | மத் 3:13-15 மாற் 1:9 யோவா 1:32-34 |
22 | தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. | லூக் 9:34 லூக் 9:35 சங் 2:7 ஏசா 42:1 மத் 12:18 மத் 17:5 மத் 27:43 கொலோ 1:13 1பேது 2:4 2பேது 1:17 2பேது 1:18 |
23 | இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது: அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்: | ஆதி 41:46 எண் 4:3 எண் 4:35 எண் 4:39 எண் 4:43 எண் 4:47 |
24 | ஏலி மாத்தாத்தின் மகன்: மாத்தாத்து லேவியின் மகன்: லேவி மெல்கியின் மகன்: மெல்கி யன்னாயின் மகன்: யன்னாய் யோசேப்பின் மகன்: |
25 | யோசேப்பு மத்தத்தியாவின் மகன்: மத்தத்தியா ஆமோசின் மகன்: ஆமோசு நாகூமின் மகன்: நாகூம் எஸ்லியின் மகன்: எஸ்லி நாகாயின் மகன்: |
26 | நாகாய் மாத்தின் மகன்: மாத்து மத்தத்தியாவின் மகன்: மத்தத்தியா செமேயின் மகன்: செமேய் யோசேக்கின் மகன்: யோசேக்கு யோதாவின் மகன்: |
27 | யோதா யோவனானின் மகன்: யோவனான் இரேசாவின் மகன்: இரேசா செருபாபேலின் மகன்: செருபாபேல் செயல்தியேலின் மகன்: |
28 | செயல்தியேல் நேரியின் மகன்: நேரி மெல்கியின் மகன்: மெல்கி அத்தியின் மகன்: அத்தி கோசாமின் மகன்: கோசாம் எல்மதாமின் மகன்: எல்மதாம் ஏரின் மகன்: ஏர் ஏசுவின் மகன்: |
29 | ஏசு எலியேசரின் மகன்: எலியேசர் யோரிமின் மகன்: யோரிம் மாத்தாத்தின் மகன்: மாத்தாத்து லேவியின் மகன்: |
30 | லேவி சிமியோனின் மகன்: சிமியோன் யூதாவின் மகன்: யூதா யோசேப்பின் மகன்: யோசேப்பு யோனாமின் மகன்: யோனாம் எலியாக்கிமின் மகன்: எலியாக்கிம் மெலேயாவின் மகன்: |
31 | மெலேயா மென்னாவின் மகன்: மென்னா மத்தத்தாவின் மகன்: மத்தத்தா நாத்தானின் மகன்: நாத்தான் தாவீதின் மகன்: | 2சாமு 5:14 1நாளா 3:5 1நாளா 14:4 சகரி 12:12 |
32 | தாவீது ஈசாயின் மகன்: ஈசாய் ஓபேதின் மகன்: ஓபேது போவாசின் மகன்: போவாசு சாலாவின் மகன்: சாலா நகசோனின் மகன்: நகசோன் அம்மினதாபின் மகன்: | ரூத் 4:18-22 1சாமு 17:58 1சாமு 20:31 1இரா 12:16 1நாளா 2:10-15 சங் 72:20 ஏசா 11:1 ஏசா 11:2 மத் 1:3-6 அப் 13:22 அப் 13:23 |
33 | அம்மினதாபு அத்மினின் மகன்: அத்மின் ஆர்னியின் மகன்: ஆர்னி எட்சரோனின் மகன்: எட்சரோன் பெரேட்சின் மகன்: பெரேட்சு யூதாவின் மகன்: யூதா யாக்கோபின் மகன்: | ரூத் 4:19 ரூத் 4:20 1நாளா 2:9 1நாளா 2:10 |
34 | யாக்கோபு ஈசாக்கின் மகன்: ஈசாக்கு ஆபிரகாமின் மகன்: ஆபிரகாம் தெராகின் மகன்: தெராகு நாகோரின் மகன். | ஆதி 21:3 ஆதி 25:26 1நாளா 1:34 மத் 1:2 அப் 7:8 |
35 | நாகோர் செரூகின் மகன்: செரூகு இரகுவின் மகன்: இரகு பெலேகின் மகன்: பெலேகு ஏபெரின் மகன்: ஏபேர் சேலாவின் மகன்: | ஆதி 11:18-21 |
36 | சேலா காயனாமின் மகன்: காயனாம் அர்பகசாதின் மகன்: அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன்: நோவா இலாமேக்கின் மகன்: | ஆதி 5:32 ஆதி 7:13 ஆதி 9:18 ஆதி 9:26 ஆதி 9:27 ஆதி 10:21 ஆதி 10:22 ஆதி 11:10-26 1நாளா 1:17 |
37 | இலாமேக்கு மெத்துசேலாவின் மகன்: மெத்துசேலா ஏனோக்கின் மகன்: ஏனோக்கு எரேதின் மகன்: எரேது மகலலேலின் மகன்: மகலலேல் கேனானின் மகன்: கேனான் ஏனோசின் மகன்: | ஆதி 5:6-28 1நாளா 1:1-3 |
38 | ஏனோசு சேத்தின் மகன் : சேத்து ஆதாமின் மகன்: ஆதாம் கடவுளால் உண்டானவர். | ஆதி 4:25 ஆதி 4:26 ஆதி 5:3 |