இணை வசன வேதாகமம்

மாற்கு 1

                   
புத்தகங்களைக் காட்டு
1கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்:லூக் 1:2 லூக் 1:3 லூக் 2:10 லூக் 2:11 அப் 1:1 அப் 1:2
2“இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்: அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.சங் 40:7 மத் 2:5 மத் 26:24 மத் 26:31 லூக் 1:70 லூக் 18:31
3பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.ஏசா 40:3-5 மத் 3:3 லூக் 3:4-6 யோவா 1:15 யோவா 1:19-34 யோவா 3:28-36
4இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.மத் 3:1 மத் 3:2 மத் 3:6 மத் 3:11 லூக் 3:2 லூக் 3:3 யோவா 3:23 அப் 10:37 அப் 13:24 அப் 13:25 அப் 19:3 அப் 19:4
5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்: தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.மத் 3:5 மத் 3:6 மத் 4:25
6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்: தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்: வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.2இரா 1:8 சகரி 13:4 மத் 3:4
7அவர் தொடர்ந்து, “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.மத் 3:11 மத் 3:14 லூக் 3:16 லூக் 7:6 லூக் 7:7 யோவா 1:27 யோவா 3:28-31 அப் 13:25
8நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறைசாற்றினார்.மத் 3:11
9அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.மத் 3:13-15 லூக் 3:21
10அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.மத் 3:16 யோவா 1:31-34
11அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.மத் 3:17 யோவா 5:37 யோவா 12:28-30 2பேது 1:17 2பேது 1:18
12உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.மத் 4:1-11 லூக் 4:1-4
13பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்: அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்: அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.யாத் 24:18 யாத் 34:28 உபா 9:11 உபா 9:18 உபா 9:25 1இரா 19:8
14யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.மத் 4:12 மத் 11:2 மத் 14:2 லூக் 3:20 யோவா 3:22-24
15காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது: மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.தானி 2:44 தானி 9:25 கலா 4:4 எபே 1:10
16அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.மத் 4:18-22 லூக் 5:1 லூக் 5:4-11
17இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்: நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார்.எசே 47:10 மத் 4:19 மத் 4:20 லூக் 5:10 அப் 2:38-41
18உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.மாற் 10:28-31 மத் 19:27-30 லூக் 5:11 லூக் 14:33 லூக் 18:28-30 பிலிப் 3:8
19பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.மாற் 3:17 மாற் 5:37 மாற் 9:2 மாற் 10:35 மாற் 14:33 மத் 4:21 அப் 1:13 அப் 12:2
20உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.மாற் 10:29 உபா 33:9 1இரா 19:20 மத் 4:21 மத் 4:22 மத் 8:21 மத் 8:22 மத் 10:37 லூக் 14:26 2கொரி 5:16
21அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.மாற் 2:1 மத் 4:13 லூக் 4:31 லூக் 10:15
22அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.எரே 23:29 மத் 7:28 மத் 7:29 மத் 13:54 லூக் 4:32 லூக் 21:15 யோவா 7:46 அப் 6:10 அப் 9:21 அப் 9:22 2கொரி 4:2 எபிரெ 4:12 எபிரெ 4:13
23அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.மாற் 1:34 மாற் 5:2 மாற் 7:25 மாற் 9:25 மத் 12:43 லூக் 4:33-37
24அவரைப் பிடித்திருந்த ஆவி, “நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று கத்தியது.மாற் 5:7 யாத் 14:12 மத் 8:29 லூக் 8:28 லூக் 8:37 யாக் 2:19
25“வாயை மூடு: இவரை விட்டு வெளியோ போ” என்று இயேசு அதனை அதட்டினார்.மாற் 1:34 மாற் 3:11 மாற் 3:12 மாற் 9:25 சங் 50:16 லூக் 4:35 லூக் 4:41 அப் 16:17
26அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.மாற் 9:20 மாற் 9:26 லூக் 9:39 லூக் 9:42 லூக் 11:22
27அவர்கள் அனைவரும் திகைப்புற்று, “இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்: அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.மாற் 7:37 மத் 9:33 மத் 12:22 மத் 12:23 மத் 15:31
28அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.மாற் 1:45 மீகா 5:4 மத் 4:24 மத் 9:31 லூக் 4:17 லூக் 4:37
29பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.மத் 8:14 மத் 8:15 லூக் 4:38 லூக் 4:39 லூக் 9:58
30சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.1கொரி 9:5
31இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.மாற் 5:41 அப் 9:41
32மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்.மாற் 1:21 மாற் 3:2 மத் 8:16 லூக் 4:40
33நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.மாற் 1:5 அப் 13:44
34பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்: அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.மாற் 1:25 மாற் 3:12 லூக் 4:41 அப் 16:16-18
35இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.மாற் 6:46-48 சங் 5:3 சங் 109:4 லூக் 4:42 லூக் 6:12 லூக் 22:39-46 யோவா 4:34 யோவா 6:15 எபே 6:18 பிலிப் 2:5 எபிரெ 5:7
36சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள்.
37அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள்.மாற் 1:5 சகரி 11:11 யோவா 3:26 யோவா 11:48 யோவா 12:19
38அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்: ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார்.லூக் 4:43
39பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.மாற் 1:21 மத் 4:23 லூக் 4:43 லூக் 4:44
40ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்.மத் 8:2-4 லூக் 5:12-14
41இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார்.மாற் 6:34 மத் 9:36 லூக் 7:12 லூக் 7:13 எபிரெ 2:17 எபிரெ 4:15
42உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.மாற் 1:31 மாற் 5:29 சங் 33:9 மத் 15:28 யோவா 4:50-53 யோவா 15:3
43பிறகு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்.மாற் 3:12 மாற் 5:43 மாற் 7:36 மத் 9:30 லூக் 8:56
44நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.லேவி 14:2-32 மத் 23:2 மத் 23:3 லூக் 5:14 லூக் 17:14
45ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை: வெளியே தன்மையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.சங் 77:11 மத் 9:31 லூக் 5:15 தீத் 1:10

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.