இணை வசன வேதாகமம்

மாற்கு 2

                   
புத்தகங்களைக் காட்டு
1சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.மாற் 1:45 மத் 9:1 லூக் 5:18
2பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.மாற் 2:13 மாற் 1:33 மாற் 1:37 மாற் 1:45 மாற் 4:1 மாற் 4:2 லூக் 5:17 லூக் 12:1
3அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.மத் 9:1 மத் 9:2-8 லூக் 5:18-26
4மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.உபா 22:8 லூக் 5:19
5இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.ஆதி 22:12 யோவா 2:25 அப் 11:23 அப் 14:9 எபே 2:8 1தெச 1:3 1தெச 1:4 யாக் 2:18-22
6அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?மாற் 8:17 மத் 16:7 மத் 16:8 லூக் 5:21 லூக் 5:22 2கொரி 10:5
7இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.மாற் 14:64 மத் 9:3 மத் 26:65 யோவா 10:33 யோவா 10:36
8உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு கண்ணுவதை இயேசு தமமுள் உணர்ந்து, அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?1நாளா 29:17 மத் 9:4 லூக் 5:22 லூக் 6:8 லூக் 7:39 லூக் 7:40 யோவா 2:24 யோவா 2:25 யோவா 6:64 யோவா 21:17 எபிரெ 4:13 வெளிப் 2:23
9முடக்குவாதமுற்ற இவனிடம் “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்பதா?”எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?மத் 9:5 லூக் 5:22-25
10மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,தானி 7:13 தானி 7:14 மத் 9:6-8 மத் 16:13 யோவா 5:20-27 அப் 5:31 1தீமோ 1:13-16
11“நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார்.மாற் 1:41 யோவா 5:8-10 யோவா 6:63
12அவரும் எழுந்து உடனே தம்முடைய படுககையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், “இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.மாற் 1:27 மத் 9:8 மத் 12:23 லூக் 7:16
13இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார்.மத் 9:9 மத் 13:1
14பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்: அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.மாற் 3:18 மத் 9:9 லூக் 5:27
15பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள்.மத் 9:10 மத் 9:11 மத் 21:31 மத் 21:32 லூக் 5:29 லூக் 5:30 லூக் 6:17 லூக் 15:1
16அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர்.மாற் 2:7 ஏசா 65:5 லூக் 15:2-7 லூக் 18:11 லூக் 19:7 லூக் 19:10 1கொரி 2:15 எபிரெ 12:3
17இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.மத் 9:12 மத் 9:13 லூக் 5:31 லூக் 5:32 லூக் 15:7 லூக் 15:29 லூக் 16:15 யோவா 9:34 யோவா 9:40
18யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்துவந்தனர். சிலர் இயேசுவிடம், “யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?” என்று கேட்டனர்.மத் 9:14-17 லூக் 5:33-39
19அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது.ஆதி 29:22 நியா 14:10 நியா 14:11 சங் 45:14 உன்ன 6:8 மத் 25:1-10
20ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.சங் 45:11 உன்ன 3:11 ஏசா 54:5 ஏசா 62:5 யோவா 3:29 2கொரி 11:2 வெளிப் 19:7 வெளிப் 21:9
21எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்? கிழிசலும் பெரிதாகும்.சங் 103:13-15 ஏசா 57:16 1கொரி 10:13
22அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்: மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது” என்றார்.யோசு 9:4 யோசு 9:13 யோபு 32:19 சங் 119:80 சங் 119:83 மத் 9:17 லூக் 5:37 லூக் 5:38
23ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர்.மத் 12:1-8 லூக் 6:1-5
24அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?” என்று கேட்டனர்.மாற் 2:7 மாற் 2:16 மத் 7:3-5 மத் 15:2 மத் 15:3 மத் 23:23 மத் 23:24 எபிரெ 12:3
25அதற்கு அவர் அவர்களிடம், “தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா?மாற் 12:20 மாற் 12:26 மத் 19:4 மத் 21:16 மத் 21:42 மத் 22:31 லூக் 10:26
26அபியத்தார் தலைமைக் குரவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குரக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்றார்.1சாமு 22:20-22 1சாமு 23:6 1சாமு 23:9 2சாமு 8:17 2சாமு 15:24 2சாமு 15:29 2சாமு 15:35 2சாமு 20:25 1இரா 1:7 1இரா 2:22 1இரா 2:26 1இரா 2:27 1இரா 4:4
27மேலும் அவர் அவர்களை நோக்கி, “ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது: மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை.யாத் 23:12 உபா 5:14 நெகே 9:13 நெகே 9:14 ஏசா 58:13 எசே 20:12 எசே 20:20 லூக் 6:9 யோவா 7:23 1கொரி 3:21 1கொரி 3:22 2கொரி 4:15 கொலோ 2:16
28ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.மாற் 3:4 மத் 12:8 லூக் 6:5 லூக் 13:15 லூக் 13:16 யோவா 5:9-11 யோவா 5:17-11 யோவா 9:5-11 யோவா 9:14-11 யோவா 9:16-11 எபே 1:22 வெளிப் 1:10

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.