2
அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், “ மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன “ என்றார்.
3
அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், “ இவன் கடவுளைப் பழிக்கிறான் “ என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர்.
4
அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, “ உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்?
5
“ உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன “ என்பதா, “ எழுந்து நட “ என்பதா, எது எளிது?
6
மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் “ என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ “ என்றார்.
7
அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.
8
இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.