சங்கீதம் 103:13-15 - WCV
13
தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.
14
அவர் நமது உருவத்தை அறிவார்: நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது.
15
மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது: வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள்.