இணை வசன வேதாகமம்

லூக்கா 4

                   
புத்தகங்களைக் காட்டு
1இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.மத் 4:1-11
2அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார்.யாத் 24:18 யாத் 34:28 உபா 9:9 உபா 9:18 உபா 9:25 1இரா 19:8 மத் 4:2
3அப்பொழுது அலகை அவரிடம் , “நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்” என்றது.லூக் 3:22 மத் 4:3
4அதனிடம் இயேசு மறுமொழியாக, “மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை” என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.லூக் 4:8 லூக் 4:10 ஏசா 8:20 யோவா 10:34 யோவா 10:35 எபே 6:17
5பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,மாற் 4:8 மாற் 4:9 1கொரி 7:31 எபே 2:2 எபே 6:12 1யோவா 2:15 1யோவா 2:16
6அவரிடம், “இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன: நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன்.யோவா 8:44 2கொரி 11:14 வெளிப் 12:9 வெளிப் 20:2 வெளிப் 20:3
7நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்” என்றது.லூக் 8:28 லூக் 17:16 சங் 72:11 ஏசா 45:14 ஏசா 46:6 மத் 2:11 வெளிப் 4:10 வெளிப் 5:8 வெளிப் 22:8
8இயேசு அதனிடம் மறுமொழியாக, “உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக" என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.மத் 4:10 மத் 16:23 யாக் 4:7 1பேது 5:9
9பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்:யோபு 2:6 மத் 4:5
10“உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்” என்றும்லூக் 4:3 லூக் 4:8 2கொரி 11:14
11“உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்” என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றது.
12இயேசு அதனிடம் மறுமொழியாக, “உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம” என்றும் சொல்லியுள்ளதே” என்றார்.உபா 6:16 சங் 95:9 சங் 106:14 மல்கி 3:15 மத் 4:7 1கொரி 10:9 எபிரெ 3:8 எபிரெ 3:9
13அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.மத் 4:11 யோவா 14:30 எபிரெ 4:15 யாக் 4:7
14பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.மத் 4:12 மாற் 1:14 யோவா 4:43 அப் 10:37
15அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.லூக் 4:16 லூக் 13:10 மத் 4:23 மத் 9:35 மத் 13:54 மாற் 1:39
16இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.லூக் 1:26 லூக் 1:27 லூக் 2:39 லூக் 2:51 மத் 2:23 மத் 13:54 மாற் 6:1
17இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:லூக் 20:42 அப் 7:42 அப் 13:15 அப் 13:27
18“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது: ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்சங் 45:7 ஏசா 11:2-5 ஏசா 42:1-4 ஏசா 50:4 ஏசா 59:21
19ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”லூக் 19:42 லேவி 25:8-13 லேவி 25:50-54 எண் 36:4 ஏசா 61:2 ஏசா 63:4 2கொரி 6:1
20பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.லூக் 4:17 மத் 20:26-28
21அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார்.லூக் 10:23 லூக் 10:24 மத் 13:14 யோவா 4:25 யோவா 4:26 யோவா 5:39 அப் 2:16-18 அப் 2:29-33 அப் 3:18
22அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?”எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.லூக் 2:47 லூக் 21:15 சங் 45:2 சங் 45:4 நீதி 10:32 நீதி 16:21 நீதி 25:11 பிரச 12:10 பிரச 12:11 உன்ன 5:16 ஏசா 50:4 மத் 13:54 மாற் 6:2 யோவா 7:46 அப் 6:10 தீத் 2:8
23அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்” எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.லூக் 6:42 ரோம 2:21 ரோம 2:22
24ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.மத் 13:57 மாற் 6:4 மாற் 6:5 யோவா 4:41 யோவா 4:44 அப் 22:3 அப் 22:18-22
25உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது: நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.லூக் 10:21 ஏசா 55:8 மத் 20:15 மாற் 7:26-29 ரோம 9:15 ரோம 9:20 எபே 1:9 எபே 1:11
26ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை: சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெணண்ணிடமே அனுப்பப்பட்டார்.1இரா 17:9-24
27மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்: ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார்.1இரா 19:19-21
28தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்:லூக் 6:11 லூக் 11:53 லூக் 11:54 2நாளா 16:10 2நாளா 24:20 2நாளா 24:21 எரே 37:15 எரே 37:16 எரே 38:6 அப் 5:33 அப் 7:54 அப் 22:21-23 1தெச 2:15 1தெச 2:16
29அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர்.யோவா 8:37 யோவா 8:40 யோவா 8:59 யோவா 15:24 யோவா 15:25 அப் 7:57 அப் 7:58 அப் 16:23 அப் 16:24 அப் 21:28-32
30அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.யோவா 8:59 யோவா 10:39 யோவா 18:6 யோவா 18:7 அப் 12:18
31பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார்.மத் 4:13 மாற் 1:21
32அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார்.லூக் 4:36 எரே 23:28 எரே 23:29 மத் 7:28 மத் 7:29 மாற் 1:22 யோவா 6:63 1கொரி 2:4 1கொரி 2:5 1கொரி 14:24 1கொரி 14:25 2கொரி 4:2 2கொரி 10:4 2கொரி 10:5 1தெச 1:5 தீத் 2:15 எபிரெ 4:12 எபிரெ 4:13
33தொழுகைக் கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.மாற் 1:23
34அவரைப் பிடித்திருந்த பேய், “ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று உரத்த குரலில் கத்தியது.லூக் 8:37 அப் 16:39
35“வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச்செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரைவிட்டு வெளியேறிற்று.லூக் 4:39 லூக் 4:41 சங் 50:16 சகரி 3:2 மத் 8:26 மத் 17:18 மாற் 3:11 மாற் 3:12 அப் 16:17 அப் 16:18
36எல்லாரும் திகைப்படைந்து, “எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்: அவையும் போய்விடுகின்றனவே!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர்.மத் 9:33 மத் 12:22 மத் 12:23 மாற் 1:27 மாற் 7:37
37அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.லூக் 4:14 ஏசா 52:13 மத் 4:23-25 மத் 9:26 மாற் 1:28 மாற் 1:45 மாற் 6:14
38பின்பு இயேசு தொழுகைக் கூடத்தைவிட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள்.மத் 8:14 மத் 8:15 மாற் 1:29-31 1கொரி 9:5
39இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவரைவிட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.லூக் 4:35 லூக் 8:24
40கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டிவந்தார்கள். அவர் ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார்.மத் 8:16 மத் 8:17 மாற் 1:32-34
41பேய்களும், “நீர் இறைமகன்” என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.லூக் 4:34 லூக் 4:35 மாற் 1:25 மாற் 1:34 மாற் 3:11
42பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்: அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களைவிட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர்.லூக் 6:12 மாற் 1:35 யோவா 4:34
43அவரோ அவர்களிடம், “நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்: இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார்.மாற் 1:14 மாற் 1:15 மாற் 1:38 மாற் 1:39 யோவா 9:4 அப் 10:38 2தீமோ 4:2
44பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிவந்தார்.லூக் 4:15 மத் 4:23 மாற் 1:39

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.