1அவர் என்னை நோக்கி, “மானிடா! எழுந்து நில், உன்னோடு பேசுவேன்” என்றார்.எசே 2:3 எசே 2:6 எசே 2:8 எசே 3:1 எசே 3:4 எசே 3:10 எசே 3:17 எசே 4:1 எசே 5:1 எசே 7:2 எசே 12:3 எசே 13:2 எசே 14:3 எசே 14:13 எசே 15:2 எசே 16:2 எசே 17:2 எசே 20:3 எசே 37:3 சங் 8:4 தானி 8:17 மத் 16:13-16 யோவா 3:13 யோவா 3:16 2அவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது: அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன்.எசே 3:12 எசே 3:14 எசே 3:24 எசே 36:27 எண் 11:25 எண் 11:26 நியா 13:25 1சாமு 16:13 நெகே 9:30 யோவே 2:28 யோவே 2:29 வெளிப் 11:11 3அவர் என்னிடம், “மானிடா! எனக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர்” என்றார்.எசே 3:4-8 2நாளா 36:15 2நாளா 36:16 ஏசா 6:8-10 எரே 1:7 எரே 7:2 எரே 25:3-7 எரே 26:2-6 எரே 36:2 மாற் 12:2-5 லூக் 24:47 லூக் 24:48 யோவா 20:21 யோவா 20:22 ரோம 10:15 4“வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று சொல்.எசே 3:7 உபா 10:16 உபா 31:27 2நாளா 30:8 2நாளா 36:13 சங் 95:8 ஏசா 48:4 எரே 3:3 எரே 5:3 எரே 6:15 எரே 8:12 மத் 10:16 5கலக வீட்டாராகிய அவர்கள், செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.எசே 2:7 எசே 3:10 எசே 3:11 எசே 3:27 மத் 10:12-15 அப் 13:46 ரோம 3:3 2கொரி 2:15-17 6மானிடா! நீ அவர்களுக்கு அஞ்சாதே. அவர்களின் சொற்களைக் கேட்டு நடுங்காதே. முட்புதர்களும் நெருஞ்சில்களும் உன்னைச் சூழ்ந்திருந்தாலும், தேள்களுடன் நீ வாழ்ந்தாலும், அவர்களின் சொற்களுக்கு அஞ்சாதே. அவர்கள் கலகம் செய்யும் வீட்டாராய் இருப்பினும் அவர்களின் பார்வையைக் கண்டு நடுங்காதே.எசே 3:8 எசே 3:9 2இரா 1:15 ஏசா 51:12 எரே 1:8 எரே 1:17 மீகா 3:8 மத் 10:28 லூக் 12:4 அப் 4:13 அப் 4:19 அப் 4:29 எபே 6:19 பிலிப் 1:28 2தீமோ 1:7 7அவர்கள் செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும் நீ என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு. அவர்களோ கலகம் செய்வோர்.எசே 3:10 எசே 3:17 எரே 1:7 எரே 1:17 எரே 23:28 எரே 26:2 யோனா 3:2 மத் 28:20 8நீயோ மானிடா! நான் உனக்குச் சொல்வதைக் கேள். அந்தக் கலக வீட்டாரைப் போல் நீயும் கலகக்காரனாய் இருந்துவிடாதே. உன் வாயைத் திறந்து நான் உனக்குத் தருவதைக் தின்று விடு” என்றார்.லேவி 10:3 எண் 20:10-13 எண் 20:24-13 1இரா 13:21 1இரா 13:22 ஏசா 50:5 1பேது 5:3 9அப்போது என்னை நோக்கி ஒரு கை நீள்வதைக் கண்டேன். அதில் சுருளேடு ஒன்று இருந்தது.எசே 8:3 எரே 1:9 தானி 5:5 தானி 10:10 தானி 10:16-18 10அவர் அச்சுருளேட்டை என்முன் விரித்தார். உள்ளும் புறமும் எழுதப்பட்டிருந்த அதில் கதறல்களும் புலம்பல்களும், கேடுகளும் எழுதப்பட்டிருந்தன.ஏசா 30:8-11 ஆபகூ 2:2