இணை வசன வேதாகமம்

ஆதியாகமம் 6

                   
புத்தகங்களைக் காட்டு
1மண்ணில் மனிதர் பெருகத் தொடங்கி, அவர்களுக்குப் புதல்வியர் பிறந்தபொழுது,ஆதி 1:28
2மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப் புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களையெல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர்.ஆதி 4:26 யாத் 4:22 யாத் 4:23 உபா 14:1 சங் 82:6 சங் 82:7 ஏசா 63:16 மல்கி 2:11 யோவா 8:41 யோவா 8:42 ரோம 9:7 ரோம 9:8 2கொரி 6:18
3அப்பொழுது ஆண்டவர், “என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதில்லை.அவன் வெறும் சதைதானே! இனி அவன் நூற்றிருபது ஆண்டுகளே வாழ்வான்” என்றார்.எண் 11:17 நெகே 9:30 ஏசா 5:4 ஏசா 63:10 எரே 11:7 எரே 11:11 அப் 7:51 கலா 5:16 கலா 5:17 1தெச 5:19 1பேது 3:18-20 யூதா 1:14 யூதா 1:15
4தெய்வப் புதல்வர் மனிதரின் புதல்வியருடன் சேர்ந்து அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க, அக்காலத்திலும் அதற்குப் பின்னரும் மண்ணுலகில் அரக்கர் இருந்தனர். அவர்களே பெயர் பெற்ற பழங்காலப் பெருவீரர்கள் ஆவர்.எண் 13:33 உபா 2:20 உபா 2:21 உபா 3:11 1சாமு 17:4 2சாமு 21:15-22
5மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார்.ஆதி 13:13 ஆதி 18:20 ஆதி 18:21 சங் 14:1-4 சங் 53:2 ரோம 1:28-31 ரோம 3:9-19
6மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார்.அவரது உள்ளம் துயரமடைந்தது.யாத் 32:14 எண் 23:19 உபா 32:36 1சாமு 15:11 1சாமு 15:29 2சாமு 24:16 1நாளா 21:15 சங் 106:45 சங் 110:4 எரே 18:8-10 எரே 26:19 ஓசி 11:8 யோனா 3:10 மல்கி 3:6 ரோம 11:29 எபிரெ 6:17 எபிரெ 6:18 யாக் 1:17
7அப்பொழுது ஆண்டவர், “நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன்.மனிதர்முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள்வரை அனைத்தையும் அழிப்பேன்.ஏனெனில் இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்” என்றார்.சங் 24:1 சங் 24:2 சங் 37:20 நீதி 10:27 நீதி 16:4
8ஆனால் நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது.ஆதி 19:19 யாத் 33:12-17 சங் 84:11 சங் 145:20 நீதி 3:4 நீதி 8:35 நீதி 12:2 எரே 31:2 லூக் 1:30 அப் 7:46 ரோம 4:4 ரோம 11:6 1கொரி 15:10 கலா 1:15 2தீமோ 1:18 தீத் 2:11 தீத் 3:7 எபிரெ 4:16 2பேது 2:5
9நோவானின் வழி மரபினர் இவர்களே: தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார்.நோவா கடவுளோடு நடந்தார்.ஆதி 2:4 ஆதி 5:1 ஆதி 10:1
10நோவாவிற்கு சேம், காம், எப்பேத்து என்னும் மூன்று புதல்வர் பிறந்தனர்.ஆதி 5:32
11அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது, பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது.ஆதி 7:1 ஆதி 10:9 ஆதி 13:13 2நாளா 34:27 லூக் 1:6 ரோம 2:13 ரோம 3:19
12கடவுள் மண்ணுலகை உற்று நோக்கினார்.இதோ! அது சீர்கெட்டுப் போயிருந்தது.மண்ணுலகில் ஒவ்வொரு வரும் தீய வழியில் நடந்துவந்தனர்.ஆதி 6:8 ஆதி 18:21 யோபு 33:27 சங் 14:2 சங் 33:13 சங் 33:14 சங் 53:2 சங் 53:3 நீதி 15:3
13அப்பொழுது கடவுள் நோவாவிடம் பின்வருமாறு கூறினார்: “எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப்போகிறேன்.ஏனெனில், அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது.இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன்.எரே 51:13 எசே 7:2-6 ஆமோ 8:2 1பேது 4:7
14உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய்: அதில் அறைகள் அமைத்து அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு.மத் 24:38 லூக் 17:27 1பேது 3:20
15பேழையை நீ செய்யவேண்டிய முறையாவது: நீளம் முந்நூறு முழம்: அகலம் ஐம்பது முழம்: உயரம் முப்பது முழம்.ஆதி 7:20 உபா 3:11
16பேழைக்குமேல் கூரை அமைத்து அந்தக் கூரை பேழைக்கு ஒரு முழம் வெளியே தாழ்வாக இருக்கும்படி கட்டி முடி: பேழையின் கதவை ஒரு பக்கத்தில் அமை.பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்கள் அமை.ஆதி 8:6 2சாமு 6:16 2இரா 9:30
17நானோ, வானுலகின்கீழ் உயிருள்ள எல்லாவற்றையும் அழிப்பதற்காக மண்ணுலகின் மேல் வெள்ளப்பெருக்கு வரச் செய்வேன்.மண்ணுலகில் உள்ளவையெல்லாம் மடிந்துபோம்.ஆதி 6:13 ஆதி 7:4 ஆதி 7:21-23 ஆதி 9:9 யாத் 14:17 லேவி 26:28 உபா 32:39 சங் 29:10 ஏசா 51:12 எசே 5:8 எசே 6:3 எசே 34:11 எசே 34:20 ஓசி 5:14 2பேது 2:5
18உன்னுடனோ, என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்.உன் புதல்வர், உன் மனைவி, உன் புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் நீ பேழைக்குள் செல்.ஆதி 9:9 ஆதி 9:11 ஆதி 17:4 ஆதி 17:7 ஆதி 17:21
19உன்னுடன் உயிர் பிழைத்துக்கொள்ளுமாறு, சதையுள்ள எல்லா உயிரினங்களிலிருந்தும் வகைக்கு இரண்டைப் பேழைக்குள் கொண்டு வா.அவை ஆணும் பெண்ணுமாக இருக்கட்டும்.ஆதி 7:2 ஆதி 7:3 ஆதி 7:8 ஆதி 7:9 ஆதி 7:15 ஆதி 7:16 ஆதி 8:17 சங் 36:6
20வகை வகையான பறவைகள், கால்நடைகள், நிலத்தில் ஊர்வன ஆகியவற்றிலிருந்து வகைக்கு இரண்டு உயிர் பிழைத்துக்கொள்ள உன்னிடம் வரட்டும்.ஆதி 1:20-24 அப் 10:11 அப் 10:12
21உண்பதற்கான எல்லா வகை உணவுப் பொருள்களையும் நீ எடுத்துச் சென்று சேர்த்து வைத்துக்கொள்.அவை உனக்கும் அவற்றிற்கும் உணவாகட்டும்.”ஆதி 1:29 ஆதி 1:30 யோபு 38:41 யோபு 40:20 சங் 35:6 சங் 104:27 சங் 104:28 சங் 136:25 சங் 145:16 சங் 147:9 மத் 6:26
22கடவுள் தமக்குக் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்.ஆதி 7:5 ஆதி 7:9 ஆதி 7:16 ஆதி 17:23 யாத் 40:16 யாத் 40:19 யாத் 40:21 யாத் 40:23 யாத் 40:25 யாத் 40:27 யாத் 40:32 உபா 12:32 மத் 7:24-27 யோவா 2:5 யோவா 15:14 எபிரெ 11:7 எபிரெ 11:8 1யோவா 5:3 1யோவா 5:4

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.