1 | ஆதாமின் வழிமரபின் அட்டவணை பின்வருமாறு: கடவுள் மனிதரைப் படைத்தபொழுது அவர்களைத் தம் சாயலில் உருவாக்கினார். | ஆதி 2:4 ஆதி 6:9 ஆதி 10:1 1நாளா 1:1 மத் 1:1 லூக் 3:36-38 |
2 | ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, “மனிதர்” என்று பெயரிட்டார். | ஆதி 1:27 மல்கி 2:15 |
3 | ஆதாமுக்கு நூற்று முப்பது வயதானபோது, அவனுக்கு அவன் சாயலிலும் உருவிலும் மகன் ஒருவன் பிறந்தான்: அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டான். | யோபு 14:4 யோபு 15:14-16 யோபு 25:4 சங் 14:2 சங் 14:3 சங் 51:5 லூக் 1:35 யோவா 3:6 ரோம 5:12 1கொரி 15:39 எபே 2:3 |
4 | சேத்து பிறந்தபின் ஆதாம் எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான்.ஆதாமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். | 1நாளா 1:1-3 லூக் 3:36-38 |
5 | மொத்தம் தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் ஆதாம் இறந்தான். | ஆதி 5:8 ஆதி 5:11 ஆதி 5:14 ஆதி 5:17-32 உபா 30:20 சங் 90:10 |
6 | சேத்துக்கு நூற்றைந்து வயதானபோது அவனுக்கு ஏனோசு பிறந்தான். | ஆதி 4:26 |
7 | ஏனோசு பிறந்தபின் சேத்து எண்ணூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான்.சேத்துக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். |
8 | மொத்தம் தொள்ளாயிரத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தபின் சேத்து இறந்தான். |
9 | ஏனோசுக்குத் தொண்ணூறு வயதானபோது அவனுக்குக் கேனான் பிறந்தான். | 1நாளா 1:2 லூக் 3:37 |
10 | கேனான் பிறந்தபின் ஏனோசு எண்ணூற்றுப் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். |
11 | மொத்தம் தொள்ளாயிரத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தபின் ஏனோசு இறந்தான். |
12 | கேனானுக்கு எழுபது வயதான போது, அவனுக்கு மகலலேல் பிறந்தான். | லூக் 3:37 |
13 | மகலலேல் பிறந்த பின் கேனான் எண்ணூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். |
14 | மொத்தம் தொள்ளாயிரத்துப் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின் கேனான் இறந்தான். |
15 | மகலலேலுக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு எரேது பிறந்தான். | 1நாளா 1:2 |
16 | எரேது பிறந்தபின் மகலலேல் எண்ணூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். மகலலேலுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். |
17 | மொத்தம் எண்ணூற்றுத் தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் மகலலேல் இறந்தான். |
18 | எரேதுக்கு நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, அவனுக்கு ஏனோக்கு பிறந்தான். | ஆதி 4:17 1நாளா 1:3 |
19 | ஏனோக்கு பிறந்தபின் எரேது எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான்.எரேதுக்குப் புதல்வரும் புதல்வியரும்பிறந்தனர். |
20 | மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பின் எரேது இறந்தான். |
21 | ஏனோக்குக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு மெத்துசேலா பிறந்தான். | லூக் 3:37 |
22 | மெத்துசேலா பிறந்தபின், ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான்.ஏனோக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். | ஆதி 6:9 ஆதி 17:1 ஆதி 24:40 ஆதி 48:15 யாத் 16:4 லேவி 26:12 உபா 5:33 உபா 13:4 உபா 28:9 1இரா 2:4 2இரா 20:3 சங் 16:8 சங் 26:11 சங் 56:13 சங் 86:11 சங் 116:9 சங் 128:1 உன்ன 1:4 ஓசி 14:9 ஆமோ 3:3 மீகா 4:5 மீகா 6:8 மல்கி 2:6 லூக் 1:6 அப் 9:31 ரோம 8:1 1கொரி 7:17 2கொரி 6:16 எபே 5:15 கொலோ 1:10 கொலோ 4:5 1தெச 2:12 1தெச 4:1 எபிரெ 11:5 எபிரெ 11:6 1யோவா 1:7 |
23 | ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். |
24 | ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான்.பின்பு அவனைக் காணவில்லை.ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார். | ஆதி 37:30 ஆதி 42:36 எரே 31:15 மத் 2:18 |
25 | மெத்துசேலாவுக்கு நூற்று எண்பத்தேழு வயதானபோது அவனுக்கு இலாமேக்கு பிறந்தான். | ஆதி 4:18 |
26 | இலாமேக்கு பிறந்தபின், மெத்துசேலா எழுநூற்று எண்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான்.மெத்துசேலாவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். |
27 | மெத்துசேலா மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான். |
28 | இலாமேக்கிற்கு நூற்று எண்பத்திரண்டு வயதானபோது, அவனுக்கு மகன் ஒருவன் பிறந்தான். |
29 | அவன் “ஆண்டவரின் சாபத்திற்குள்ளான மண்ணில் நமக்கு உண்டான கடின வேலையிலும் உழைப்பிலும் நமக்கு ஆறதல் அளிப்பான்” என்று சொல்லி அவனுக்கு”நோவா” என்று பெயரிட்டான். | ஆதி 6:8 ஆதி 6:9 ஆதி 7:23 ஆதி 9:24 ஏசா 54:9 எசே 14:14 எசே 14:20 மத் 24:37 லூக் 3:36 லூக் 17:26 லூக் 17:27 எபிரெ 11:7 1பேது 3:20 2பேது 2:5 |
30 | நோவா பிறந்தபின் இலாமேக்கு ஐந்நூற்றுத்தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்தான்.இலாமேக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். |
31 | இலாமேக்கு மொத்தம் எழுநூற்று எழுபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான். |
32 | நோவாவிற்கு ஐந்நூறு வயதானபோது, அவருக்குச் சேம், காம், எப்பேத்து ஆகியோர் பிறந்தனர். | ஆதி 6:10 ஆதி 7:13 ஆதி 9:18 ஆதி 9:19 ஆதி 9:22-27 ஆதி 10:1 ஆதி 10:21 ஆதி 10:32 1நாளா 1:4-28 லூக் 3:36 |