ஆதியாகமம் 9:22-27 - WCV
22
கானானின் தந்தையாகிய காம் தன் தந்தைதிறந்த மேனியாராய்க் கிடப்பதைக் கண்டு, வெளியே இருந்த தன் இரு சகோதரரிடம் அதைத் தெரிவித்தான்.
23
அப்பொழுது சேமும், எப்பேத்தும் ஒரு துணியை எடுத்துத் தங்கள் இருவரின் தோள்மேல் போட்டுக்கொண்டு பின்னோக்கி நடந்து தங்கள் தந்தையின் திறந்த மேனியை மூடினர்.அவர்கள் முகம் எதிர்ப்பக்கம் நோக்கி இருந்ததால் தங்கள் தந்தையின் திறந்த மேனியை அவர்கள் பார்க்கவில்லை.
24
நோவாவிற்குப் போதை தெளிந்ததும், தம் இளைய மகன் தமக்குச் செய்ததை அறிந்தார்.
25
அப்பொழுது அவர், “கானான் சபிக்கப்பட்டவன்:தன் சகோதரருக்கு அவன் அடிமையிலும் அடிமையாக இருப்பான்.
26
சேமின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! அவனுக்குக் கானான் அடிமையாக இருப்பான்.
27
கடவுள் எப்பேத்து குடும்பத்தைப் பெருகச் செய்யட்டும்.அவன் சேமின் கூடாரத்தில் வாழட்டும்.அவனுக்கும் கானான் அடிமையாக இருக்கட்டும்” என்றார்.