24
“ ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.
25
மழை பெய்தது: ஆறு பெருக்கெடுத்து ஓடியது: பெருங்காற்று வீசியது: அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
26
நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.
27
மழை பெய்தது: ஆறு பெருக்கெடுத்து ஓடியது: பெருங் காற்று வீசியது: அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது: இவ்வாறு பேரழிவு நேர்ந்தது. “