ரோமர் 3:9-19 - WCV
9
அப்படியானால், மற்றவர்களைவிட யூதர்களாகிய நாம் மேலானவர்களா? இல்லவே இல்லை. ஏனெனில் யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்துக்கு உட்பட்டிருப்பதாக ஏற்கெனவே எடுத்துரைத்தாயிற்று.
10
அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது: “நேர்மையாளரே இல்லை, ஒருவர் கூட இல்லை:
11
மதிநுட்பம் உள்ளவர் ஒருவருமில்லை: கடவுளைத் தேடுபவர் எவராவது உண்டோ?
12
எல்லாரும் நெறிபிறழ்ந்தனர்: ஒருமிக்கக் கெட்டுப்போயினர். நல்லது செய்பவர் யாருமில்லை: ஒருவர்கூட இல்லை.”
13
“அவர்களது தொண்டை திறந்த பிணக்குழி: அவர்களது நாக்கு வஞ்சகமே பேசும். அவர்கள் உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சு.”
14
“அவர்கள் வாயில் சாபமும் கொடுமையும் நிறைந்துள்ளது.”
15
“இரத்தம் சிந்துவதற்கு அவர்கள் கால்கள் விரைகின்றன:
16
பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன:
17
அமைதி வழியை அவர்கள் அறியார்.”
18
“அவர்களது மனக்கண்களில் இறையச்சம் இல்லை.”
19
திருச்சட்டம் சொல்வதெல்லாம் அந்தச் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குப் பொருந்தும் என நமக்குத் தெரியும். ஆகவே இவர்களும் உலக மக்கள் அனைவரும் சாக்குப்போக்குச் சொல்ல வழியின்றி இருக்கிறார்கள்.