யாத்திராகமம் 33:12-17 - WCV
12
மோசே ஆண்டவரிடம், “ இம்மக்களை நடத்திச்செல்”என்று நீரே என்னிடம் கூறியிருந்தும் என்னோடு அனுப்பப்போகும் ஆளைப்பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை.பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்”என்றும்நீ என் பார்வையில் தயை பெற்றுள்ளாய்”என்றும் கூறியுள்ளீர்.
13
இப்போதும் உம் பார்வையில் நான் தயைபெற்றிருந்தால், உம்வழிகளை எனக்குக் காட்டியருளும்.உம்மை இதனால் அறிந்துகொள்வேன்.உம் பார்வையிலும் தொடர்ந்து தயைபெறுவேன்.மேலும் இந்த இனம் உம்மக்கள் என்பதையும் கருத்தில் கொள்ளும்” என்றார்.
14
அதற்கு ஆண்டவர், “எனது பிரசன்னம் உன்னோடு செல்லும்.நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்” என்று கூற,
15
மோசே அவரிடம், “உமது பிரசன்னம் கூடவரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச்செய்யாதீர்.
16
நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்? நீர் எங்களோடு வருவதாலும் நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினங்களினின்றும் வேறுபட்டு நிற்பதாலும் அன்றோ?” என்றார்.
17
அதற்கு ஆண்டவர் மோசேயிடம், “நீ கூறியபடியே நான் செய்வேன்.ஏனெனில் நீ என் பார்வையில் தயைபெற்றுள்ளாய்.மேலும் பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்” என்றார்.