1 | ஆகவே, கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது. | ரோம 4:7 ரோம 4:8 ரோம 5:1 ரோம 7:17 ரோம 7:20 ஏசா 54:17 யோவா 3:18 யோவா 3:19 யோவா 5:24 கலா 3:13 |
2 | ஏனெனில், கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்துவிட்டது. | ரோம 3:27 யோவா 8:36 |
3 | ஊனியல்பின் காரணமாய் வலுவற்றிருந்த திருச்சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார். அதாவது, ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு கட்டினார். | ரோம 3:20 ரோம 7:5-11 அப் 13:39 கலா 3:21 எபிரெ 7:18 எபிரெ 7:19 எபிரெ 10:1-10 எபிரெ 10:14-10 |
4 | ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவ்வாறு செய்தார். | கலா 5:22-24 எபே 5:26 எபே 5:27 கொலோ 1:22 எபிரெ 12:23 1யோவா 3:2 யூதா 1:24 வெளிப் 14:5 |
5 | ஏனெனில், ஊனியல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின்மீதே இருக்கும்: ஆனால் ஆவிக்குரிய இயல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டம் ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும். | ரோம 8:12 ரோம 8:13 யோவா 3:6 1கொரி 15:48 2கொரி 10:3 2பேது 2:10 |
6 | ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே: ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும். | ரோம 8:7 ரோம 8:13 ரோம 6:21 ரோம 6:23 ரோம 7:5 ரோம 7:11 ரோம 13:14 கலா 6:8 யாக் 1:14 யாக் 1:15 |
7 | ஏனெனில் ஊனியல் மனநிலை கடவுளுக்குப் பகையானது: அது கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதில்லை, இருக்கவும் முடியாது. | ரோம 1:28 ரோம 1:30 ரோம 5:10 யாத் 20:5 2நாளா 19:2 சங் 53:1 யோவா 7:7 யோவா 15:23 யோவா 15:24 எபே 4:18 எபே 4:19 கொலோ 1:21 2தீமோ 3:4 யாக் 4:4 1யோவா 2:15 1யோவா 2:16 |
8 | ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. | ரோம 8:9 ரோம 7:5 யோவா 3:3 யோவா 3:5 யோவா 3:6 |
9 | ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. | ரோம 8:2 எசே 11:19 எசே 36:26 எசே 36:27 யோவா 3:6 |
10 | பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்: அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். | யோவா 6:56 யோவா 14:20 யோவா 14:23 யோவா 15:5 யோவா 17:23 2கொரி 13:5 எபே 3:17 கொலோ 1:27 |
11 | மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார். | ரோம 8:9 ரோம 4:24 ரோம 4:25 அப் 2:24 அப் 2:32 அப் 2:33 எபே 1:19 எபே 1:20 எபிரெ 13:20 1பேது 1:21 |
12 | ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை: அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. | ரோம 6:2-15 சங் 116:16 1கொரி 6:19 1கொரி 6:20 1பேது 4:2 1பேது 4:3 |
13 | நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்: ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள். | ரோம 8:1 ரோம 8:4-6 ரோம 6:21 ரோம 6:23 ரோம 7:5 கலா 5:19-21 கலா 6:8 எபே 5:3-5 கொலோ 3:5 கொலோ 3:6 யாக் 1:14 யாக் 1:15 |
14 | கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். | ரோம 8:5 ரோம 8:9 சங் 143:10 நீதி 8:20 ஏசா 48:16 ஏசா 48:17 கலா 4:6 கலா 5:16 கலா 5:18 கலா 5:22-25 எபே 5:9 |
15 | மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை: மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். | யாத் 20:19 எண் 17:12 லூக் 8:28 லூக் 8:37 யோவா 16:8 அப் 2:37 அப் 16:29 1கொரி 2:12 2தீமோ 1:7 எபிரெ 2:15 எபிரெ 12:18-24 யாக் 2:19 1யோவா 4:18 |
16 | நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். | ரோம 8:23 ரோம 8:26 2கொரி 1:22 2கொரி 5:5 எபே 1:13 எபே 4:30 1யோவா 4:13 |
17 | நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்: அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம். | ரோம 8:3 ரோம 8:29 ரோம 8:30 ரோம 5:9 ரோம 5:10 ரோம 5:17 லூக் 12:32 அப் 26:18 கலா 3:29 கலா 4:7 எபே 3:6 தீத் 3:7 எபிரெ 1:14 எபிரெ 6:17 யாக் 2:5 1பேது 1:4 |
18 | இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். | மத் 5:11 மத் 5:12 அப் 20:24 2கொரி 4:17 2கொரி 4:18 எபிரெ 11:25 எபிரெ 11:26 எபிரெ 11:35 1பேது 1:6 1பேது 1:7 |
19 | இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. | ரோம 8:23 பிலிப் 1:20 |
20 | ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது: தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை: அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று: எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. | ரோம 8:22 ஆதி 3:17-19 ஆதி 5:29 ஆதி 6:13 யோபு 12:6-10 ஏசா 24:5 ஏசா 24:6 எரே 12:4 எரே 12:11 எரே 14:5 எரே 14:6 ஓசி 4:3 யோவே 1:18 |
21 | அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது. | 2பேது 3:13 |
22 | இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். | ரோம 8:20 மாற் 16:15 கொலோ 1:23 |
23 | படைப்பு மட்டும் அல்ல: முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். | ரோம 8:15 ரோம 8:16 ரோம 5:5 2கொரி 5:5 கலா 5:22 கலா 5:23 எபே 1:14 எபே 5:9 |
24 | நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா? | ரோம 5:2 ரோம 12:12 ரோம 15:4 ரோம 15:13 சங் 33:18 சங் 33:22 சங் 146:5 நீதி 14:32 எரே 17:7 சகரி 9:12 1கொரி 13:13 கலா 5:5 கொலோ 1:5 கொலோ 1:23 கொலோ 1:27 1தெச 5:8 2தெச 2:16 தீத் 2:11-13 எபிரெ 6:18 எபிரெ 6:19 1பேது 1:3 1பேது 1:21 1யோவா 3:3 |
25 | நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காக தளராமனத்தோடு காத்திருக்கிறோம். | ரோம 8:23 ரோம 2:7 ரோம 12:12 ஆதி 49:18 சங் 27:14 சங் 37:7-9 சங் 62:1 சங் 62:5 சங் 62:6 சங் 130:5-7 ஏசா 25:9 ஏசா 26:8 புலம் 3:25 புலம் 3:26 லூக் 8:15 லூக் 21:19 கொலோ 1:11 1தெச 1:3 2தெச 3:5 எபிரெ 6:12 எபிரெ 6:15 எபிரெ 10:36 எபிரெ 12:1-3 யாக் 1:3 யாக் 1:4 யாக் 5:7-11 வெளிப் 1:9 வெளிப் 13:10 வெளிப் 14:12 |
26 | இவ்வாறு தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்: ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது: தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். | ரோம 15:1 2கொரி 12:5-10 எபிரெ 4:15 எபிரெ 5:2 |
27 | உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார். | 1நாளா 28:9 1நாளா 29:17 சங் 7:9 சங் 44:21 நீதி 17:3 எரே 11:20 எரே 17:10 எரே 20:12 மத் 6:8 யோவா 21:17 அப் 1:24 அப் 15:8 1தெச 2:4 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
28 | மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். | ரோம 8:35-39 ரோம 5:3 ரோம 5:4 ஆதி 50:20 உபா 8:2 உபா 8:3 உபா 8:16 சங் 46:1 சங் 46:2 எரே 24:5-7 சகரி 13:9 2கொரி 4:15-17 2கொரி 5:1 பிலிப் 1:19-23 2தெச 1:5-7 எபிரெ 12:6-12 யாக் 1:3 யாக் 1:4 1பேது 1:7 1பேது 1:8 வெளிப் 3:19 |
29 | தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்: அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார். | ரோம 11:2 யாத் 33:12 யாத் 33:17 சங் 1:6 எரே 1:5 மத் 7:23 2தீமோ 2:19 1பேது 1:2 வெளிப் 13:8 |
30 | தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்: தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்: தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார். | ரோம 8:28 ரோம 1:6 ரோம 9:23 ரோம 9:24 ஏசா 41:9 1கொரி 1:2 1கொரி 1:9 எபே 4:4 எபிரெ 9:15 1பேது 2:9 2பேது 1:10 வெளிப் 17:14 வெளிப் 19:9 |
31 | இதற்குமேல் நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? | ரோம 4:1 |
32 | தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? | ரோம 5:6-10 ரோம 11:21 ஆதி 22:12 ஏசா 53:10 மத் 3:17 யோவா 3:16 2கொரி 5:21 2பேது 2:4 2பேது 2:5 1யோவா 4:10 |
33 | கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. | ரோம 8:1 யோபு 1:9-11 யோபு 2:4-6 யோபு 22:6-30 யோபு 34:8 யோபு 34:9 யோபு 42:7-9 சங் 35:11 ஏசா 54:17 சகரி 3:1-4 வெளிப் 12:10 வெளிப் 12:11 |
34 | அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ! | ரோம 8:1 ரோம 14:13 யோபு 34:29 சங் 37:33 சங் 109:31 எரே 50:20 |
35 | கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? | ரோம 8:39 சங் 103:17 எரே 31:3 யோவா 10:28 யோவா 13:1 2தெச 2:13 2தெச 2:14 2தெச 2:16 வெளிப் 1:5 |
36 | “உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம், வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம்” என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! | சங் 44:22 சங் 141:7 யோவா 16:2 1கொரி 15:30 2கொரி 4:11 |
37 | ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். | 2நாளா 20:25-27 ஏசா 25:8 1கொரி 15:54 1கொரி 15:57 2கொரி 2:14 2கொரி 12:9 2கொரி 12:19 1யோவா 4:4 1யோவா 5:4 1யோவா 5:5 வெளிப் 7:9 வெளிப் 7:10 வெளிப் 11:7-12 வெளிப் 12:11 வெளிப் 17:14 வெளிப் 21:7 |
38 | ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, | ரோம 4:21 2கொரி 4:13 2தீமோ 1:12 எபிரெ 11:13 |
39 | உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை. | எபே 3:18 எபே 3:19 |