வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 64

                   
புத்தகங்களைக் காட்டு
1கடவுளே! என் விண்ணப்பக் குரலைக் கேட்டருளும்: என் எதிரியினால் விளையும் அச்சத்தினின்று என் உயிரைக் காத்தருளும்.
2பொல்லாரின் சூழ்ச்சியினின்றும் தீயோரின் திட்டத்தினின்றும் என்னை மறைத்துக் காத்திடும்.
3அவர்கள் தங்கள் நாவை வாளைப் போலக் கூர்மையாக்குகின்றார்கள்: நஞ்சுள்ள சொற்களை அம்புபோல் எய்கின்றார்கள்:
4மறைவிடங்களில் இருந்துகொண்டு மாசற்றோரைக் காயப்படுத்துகின்றார்கள்: அச்சமின்றி அவர்களைத் திடீரெனத் தாக்குகின்றார்கள்:
5தீங்கு இழைப்பதில் உறுதியாய் இருக்கின்றார்கள்: 'நம்மை யார் பார்க்க முடியும்' என்று சொல்லி மறைவாகக் கண்ணிகளை வைப்பதற்குச் சதித்திட்டம் தீட்டுகின்றார்கள்:
6நேர்மையற்ற செயல்களைச் செய்யத் திட்டமிடுகின்றார்கள்: “எங்கள் திறமையில் தந்திரமான சூழ்ச்சியை உருவாக்கியுள்ளோம்” என்கின்றார்கள்: மனிதரின் உள்ளமும் உள்நோக்கமும் மிக ஆழமானவை.
7ஆனால், கடவுள் அவர்கள்மேல் அம்புகளை எய்ய, அவர்கள் உடனே காயமுற்று வீழ்வார்கள்.
8தங்களது நாவினாலேயே அவர்கள் அழிவார்கள்: அவர்களைப் பார்ப்போர் அனைவரும் எள்ளி நகைப்பார்கள்.
9அப்பொழுது எல்லா மனிதரும் அச்சம் கொள்வர்: கடவுளின் செயல்களை எடுத்துரைப்பர்: அவரது அருஞ்செயலைப்பற்றிச் சிந்திப்பர்.
10நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்: அவரிடம் அடைக்கலம் புகுவர்: நேரிய உள்ளத்தோர் அவரைப் போற்றிடுவர்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.