வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 141

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவரே! நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்: விரைவாய் எனக்குத் துணைசெய்யும். உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.
2தூபம்போல் என் மன்றாட்டை உம் திருமுன் ஏற்றுக்கொள்ளப்படுவதாக! மாலைப் பலிபோல் என் கைகள் உம்மை நோக்கி உயர்வனவாக!
3ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்: என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும்.
4என் இதயம் தீயது எதையும் நாடவிடாதேயும்: தீச்செயல்களை நான் செய்யவிடாதேயும்: தீச்செயல் செய்யும் மனிதரோடு என்னைச் சேரவிடாதேயும்: அவர்களோடு இனிய விருந்தினை நான் உண்ணவிடாதேயும்.
5நீதிமான் என்னைக் கனிவோடு தண்டிக்கட்டும்: அது என் தலைக்கு எண்ணெய்போல் ஆகும்: ஆனால், தீயவரின் எண்ணெய் என்றுமே என் தலையில் படாமல் இருக்கட்டும்: ஏனெனில், அவர்கள் செய்யும் தீமைகளுக்கு எதிராய் நான் என்றும் வேண்டுதல் செய்வேன்.
6அவர்கள் நீதிபதிகளிடம் தண்டனைக்கென ஒப்புவிக்கப்படும் பொழுது, நான் சொன்னது எவ்வளவு உண்மையானது என்று ஏற்றுக் கொள்வார்கள்:
7'ஒருவரால் பாறை பிளந்து சிதறடிக்கப்படுவதுபோல், எங்கள் எலும்புகளும் பாதாளத்தின் வாயிலில் சிதறடிக்கப்படும் என்பார்கள்.
8ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன: உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்: என் உயிரை அழியவிடாதேயும்.
9அவர்கள் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்து என்னைக் காத்தருளும்: தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்து என்னைப் பாதுகாத்தருளும்.
10தீயோர் தாங்கள் வைத்த கண்ணிகளில் ஒருங்கே வந்து விழுவார்களாக! நானோ தடையின்றிக் கடந்து செல்வேனாக!
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.