வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 61

                   
புத்தகங்களைக் காட்டு
1கடவுளே! என் கூக்குரலைக் கேளும்: என் விண்ணப்பத்திற்குச் செவிசாயும்.
2பூவுலகின் கடைமுனையினின்று உம்மைக் கூப்பிடுகின்றேன்: என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது: உயரமான குன்றுக்கு என்னை அழைத்துச் செல்லும்.
3ஏனெனில் நீரே என் புகலிடம்: எதிரியின்முன் வலிமையான கோட்டை.
4நான் உமது கூடாரத்தில் எந்நேரமும் தங்கியிருப்பேன்: உமது இறக்கைகளின் பாதுகாப்பில் தஞ்சம் புகுவேன். (சேலா)
5ஏனெனில், கடவுளே! நான் செய்த பொருத்தனைகளை நீர் அறிவீர்: உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரிய உடைமையை எனக்குத் தந்தீர்.
6அரசரைப் பல்லாண்டு வாழச் செய்யும்: அவரது ஆயுள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்!
7கடவுள் முன்னிலையில் அவா என்றென்றும் வீற்றிருப்பாராக! பேரன்போடும் உண்மையோடும் அவரைக் காத்தருளும்!
8உமது பெயரை என்றென்றும் புகழ்ந்து பாடுவேன்: நாள்தோறும் என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.