1 | கடவுளே! என் கூக்குரலைக் கேளும்: என் விண்ணப்பத்திற்குச் செவிசாயும். |
2 | பூவுலகின் கடைமுனையினின்று உம்மைக் கூப்பிடுகின்றேன்: என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது: உயரமான குன்றுக்கு என்னை அழைத்துச் செல்லும். |
3 | ஏனெனில் நீரே என் புகலிடம்: எதிரியின்முன் வலிமையான கோட்டை. |
4 | நான் உமது கூடாரத்தில் எந்நேரமும் தங்கியிருப்பேன்: உமது இறக்கைகளின் பாதுகாப்பில் தஞ்சம் புகுவேன். (சேலா) |
5 | ஏனெனில், கடவுளே! நான் செய்த பொருத்தனைகளை நீர் அறிவீர்: உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரிய உடைமையை எனக்குத் தந்தீர். |
6 | அரசரைப் பல்லாண்டு வாழச் செய்யும்: அவரது ஆயுள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்! |
7 | கடவுள் முன்னிலையில் அவா என்றென்றும் வீற்றிருப்பாராக! பேரன்போடும் உண்மையோடும் அவரைக் காத்தருளும்! |
8 | உமது பெயரை என்றென்றும் புகழ்ந்து பாடுவேன்: நாள்தோறும் என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். |