1 | இப்போது, நீங்கள் எழுதிக் கேட்டிருந்தவற்றைக் குறித்துப் பார்ப்போம். ஆம், பெண்ணைத் தொடாமல் இருப்பதே நல்லது. | 1கொரி 7:8 1கொரி 7:26 1கொரி 7:27 1கொரி 7:37 1கொரி 7:38 மத் 19:10 மத் 19:11 |
2 | எனினும் எங்கும் பரத்தைமை காணப்படுவதால் ஆண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த மனைவியோடேயே வாழ வேண்டும்: பெண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்தக் கணவரோடேயே வாழ வேண்டும். | 1கொரி 7:9 1கொரி 6:18 நீதி 5:18 நீதி 5:19 1தீமோ 4:3 |
3 | கணவர் தம் மனைவிக்கு மண வாழ்க்கைக்குரிய உரிமைகளைக் கொடுக்க வேண்டும்: அதுபோல மனைவியும் தம் கணவருக்குக் கொடுக்க வேண்டும். | யாத் 21:10 1பேது 3:7 |
4 | மனைவிக்குத் தம் உடலின்மேல் அதிகாரம் இல்லை: கணவனுக்கே அந்த அதிகாரம் உண்டு. அப்படியே கணவருக்குத் தம் உடலின்மேல் அதிகாரம் இல்லை: மனைவிக்கே அந்த அதிகாரம் உண்டு. | ஓசி 3:3 மத் 19:9 மாற் 10:11 மாற் 10:12 |
5 | மணவாழ்க்கைக்குரிய உரிமைகளை ஒருவருக்கொருவர் மறுக்காதீர்கள். இருவரும் ஒத்துக் கொண்டால் இறைவேண்டலில் ஈடுபடுவதற்காகச் சிறிது காலம் பிரிந்து வாழலாம். ஆனால் உணர்ச்சிகளை அடக்க முடியாத நிலையில் சாத்தான் உங்களைச் சோதிக்காதபடி பிரிந்த நீங்கள் மீண்டும் கூடி வாழுங்கள். | யாத் 19:15 1சாமு 21:4 1சாமு 21:5 யோவே 2:16 சகரி 7:3 சகரி 12:12-14 |
6 | இதை நான் கட்டளையாகச் சொல்லவில்லை: ஆனால் உங்கள் நிலைமையைக் கருதியே இப்படிச் சொல்கிறேன். | 1கொரி 7:12 1கொரி 7:25 2கொரி 8:8 2கொரி 11:17 |
7 | எல்லாரும் என்னைப்போலவே இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். எனினும், ஒவ்வொருவருக்கும் கடவுள் தரும் தனிப்பட்ட அருள்கொடை உண்டு. இது ஒருவருக்கு ஒருவகையாகவும், வேறொருவருக்கு வேறு வகையாகவும் இருக்கிறது. | 1கொரி 9:5 1கொரி 9:15 அப் 26:29 |
8 | இப்போது மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்வது இதுவே: அவர்களும் என்னைப்போலவே இருந்துவிட்டால் மிகவும் நல்லது. | 1கொரி 7:26 1கொரி 7:27 1கொரி 7:32 1கொரி 7:34 1கொரி 7:35 |
9 | எனினும் அவர்கள் தன்னடக்கமில்லாதவர்கள் என்றால் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், காமத்தீயில் உருகுவதைவிடத் திருமணம் செய்து கொள்வதே நல்லது. | 1கொரி 7:2 1கொரி 7:28 1கொரி 7:36 1கொரி 7:39 1தீமோ 5:11 1தீமோ 5:14 |
10 | திருமணமானவர்களுக்கு நான் கட்டளையாகச் சொல்வது இதுவே: “மனைவி கணவரிடமிருந்து பிரிந்து வாழக்கூடாது. “ இது என்னுடைய கட்டளையல்ல: | 1கொரி 7:12 1கொரி 7:25 1கொரி 7:40 |
11 | மாறாக ஆண்டவருடையது. அப்படிப் பிரிந்து வாழ்ந்தால் மறுமணம் செய்யாமலிருக்க வேண்டும். அல்லது கணவருடன் ஒப்புரவாக வேண்டும். கணவரும் மனைவியை விலக்கிவிடக் கூடாது. | நியா 19:2 நியா 19:3 எரே 3:1 |
12 | மற்றவர்களுக்கு நான் சொல்வது இதுவே: இதை ஆண்டவரல்ல, நானே சொல்கிறேன்: சகோதரர் ஒருவரின் மனைவி நம்பிக்கை கொள்ளாதவரானாலும் தொடர்ந்து அச்சகோதரரோடு வாழ உடன்பட்டால், அவர் அவரை விலக்கிவிடக் கூடாது. | 1கொரி 7:6 1கொரி 7:25 2கொரி 11:17 |
13 | அப்படியே, சகோதரி ஒருவரின் கணவர் நம்பிக்கை கொள்ளாதவரானாலும் தொடர்ந்து அச்சகோதரியோடு வாழ உடன்பட்டால், தம் கணவரை அவர் விலக்கிவிடக் கூடாது. |
14 | நம்பிக்கை கொள்ளாத கணவர், நம்பிக்கை கொண்ட தம் மனைவியால் தூயவராகிறார். அப்படியே, நம்பிக்கை கொள்ளாத மனைவி, நம்பிக்கை கொண்ட கணவரால் தூயவராகிறார். அப்படி இல்லையெனில் உங்கள் பிள்ளைகள் தூய்மையற்றவர்களாய் இருப்பார்களே! ஆனால் அவர்கள் தூயவர்களாய் இருக்கிறார்கள். | 1கொரி 6:15-17 எஸ்றா 9:1 எஸ்றா 9:2 1தீமோ 4:5 தீத் 1:15 |
15 | கணவன் மனைவி ஆகிய இருவருள் நம்பிக்கை கொள்ளாத ஒருவர் பிரிந்து வாழ விரும்பினால், பிரிந்து வாழட்டும். இத்தகைய சூழ்நிலையில் நம்பிக்கை கொண்ட கணவனுக்கோ மனைவிக்கோ எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால் கடவுள் உங்களை அமைதியுடன் வாழவே அழைத்துள்ளார். | மத் 12:50 யாக் 2:15 |
16 | மணமான சகோதரியே, ஒருவேளை உம்மால் உம் கணவர் மீட்படையலாம். மணமான சகோதரரே, ஒருவேளை உம்மால் உம் மனைவி மீட்படையலாம். இது உங்களுக்குத் தெரியாதா? | 1கொரி 9:22 நீதி 11:30 லூக் 15:10 1தீமோ 4:16 யாக் 5:19 யாக் 5:20 1பேது 3:1 1பேது 3:2 |
17 | எது எப்படியிருந்தாலும், ஒவ்வொருவரும் ஆண்டவர் அவரவருக்குப் பகிர்ந்தளித்த கொடையின்படியும் அவர் விடுத்த அழைப்பின்படியும் வாழட்டும். இதுவே நான் எல்லாத் திருச்சபைகளிலும் கொடுத்துவரும் கட்டளை. | 1கொரி 7:7 மத் 19:12 ரோம 12:3-8 1பேது 4:10 1பேது 4:11 |
18 | விருத்தசேதனம் செய்யப்பட்ட நிலையில் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தால் அவர் அந்நிலையிலேயே இருக்கட்டும். ஒருவேளை விருத்தசேதனம் செய்யப்படாத நிலையில் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தால் அவர் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டாம். | அப் 15:1 அப் 15:5 அப் 15:19 அப் 15:24 அப் 15:28 கலா 5:1-3 கொலோ 3:11 |
19 | விருத்த சேதனம் செய்வதிலும் பயனில்லை: செய்யாமல் இருப்பதிலும் பயனில்லை: கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்தலே பயன்தரும். | 1கொரி 8:8 ரோம 2:25-29 ரோம 3:30 கலா 5:6 கலா 6:15 |
20 | ஒவ்வொருவரும் எந்நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அந்நிலையிலேயே நிலைத்திருக்கட்டும். | 1கொரி 7:17 1கொரி 7:21-23 நீதி 27:8 லூக் 3:10-14 1தெச 4:11 2தெச 3:12 |
21 | அடிமை நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறீர்களா? அதுபற்றிக் கவலைப் பட வேண்டாம். எனினும், அந்நிலையிலிருந்து விடுதலை பெற முடியுமானால் அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். | 1கொரி 12:13 கலா 3:28 கொலோ 3:11 1தீமோ 6:1-3 1பேது 2:18-24 |
22 | அடிமை நிலையில் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர் ஆண்டவர் வழியாய் விடுதலை பெற்றவர் ஆகிறார். அப்படியே விடுதலை நிலையில் அழைக்கப்பபட்டவர் கிறிஸ்துவின் அடிமையாய் இருக்கிறார். | லூக் 1:74 லூக் 1:75 யோவா 8:32-36 ரோம 6:18-22 கலா 5:1 கலா 5:13 எபே 6:5 எபே 6:6 கொலோ 3:22-24 பிலேமோ 1:16 1பேது 2:16 |
23 | நீங்கள் ஆண்டவரால் விலைகொடுத்து மீட்கப்பட்டீர்கள். எனவே மனிதருக்கு அடிமையாக வேண்டாம். | 1கொரி 6:20 லேவி 25:42 அப் 20:28 தீத் 2:14 1பேது 1:18 1பேது 1:19 1பேது 3:18 வெளிப் 5:9 |
24 | சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிற நிலையிலேயே கடவுள்முன் நிலைத்திருங்கள். | 1கொரி 7:17 1கொரி 7:20 |
25 | இனி, மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றி ஆண்டவரின் கட்”டளை எதுவும் என்னிடமில்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாயிருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன். | 1கொரி 7:28 1கொரி 7:34 1கொரி 7:36-38 சங் 78:63 |
26 | மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன். | 1கொரி 7:1 1கொரி 7:8 1கொரி 7:28 1கொரி 7:35-38 எரே 16:2-4 மத் 24:19 லூக் 21:23 லூக் 23:28 லூக் 23:29 1பேது 4:17 |
27 | மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழிதேடக் கூடாது: மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது. | 1கொரி 7:12-14 1கொரி 7:20-14 |
28 | நீங்கள் திருமணம் செய்துகொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். | 1கொரி 7:36 எபிரெ 13:4 |
29 | அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். | யோபு 14:1 யோபு 14:2 சங் 39:4-7 சங் 90:5-10 சங் 103:15 சங் 103:16 பிரச 6:12 பிரச 9:10 ரோம 13:11 ரோம 13:12 எபிரெ 13:13 எபிரெ 13:14 1பேது 4:7 2பேது 3:8 2பேது 3:9 1யோவா 2:17 |
30 | அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். | சங் 30:5 சங் 126:5 சங் 126:6 பிரச 3:4 ஏசா 25:8 ஏசா 30:19 லூக் 6:21 லூக் 6:25 லூக் 16:25 யோவா 16:22 வெளிப் 7:17 வெளிப் 18:7 |
31 | உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது. | 1கொரி 9:18 பிரச 2:24 பிரச 2:25 பிரச 3:12 பிரச 3:13 பிரச 5:18-20 பிரச 9:7-10 பிரச 11:2 பிரச 11:9 பிரச 11:10 மத் 24:48-50 மத் 25:14-29 லூக் 12:15-21 லூக் 16:1 லூக் 16:2 லூக் 19:17-26 லூக் 21:34 1தீமோ 6:17 1தீமோ 6:18 யாக் 5:1-5 |
32 | நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்கவேண்டுமென்றே நான் விரும்புகிறேன், மணமாகாதவர் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார்: எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். | சங் 55:22 மத் 6:25-34 மத் 13:22 பிலிப் 4:6 |
33 | ஆனால் மணமானவர் உலகுக்குரியவற்றில் அக்கறைகொள்கிறார்: எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். | நெகே 5:1-5 லூக் 12:22 1தெச 4:11 1தெச 4:12 1தீமோ 5:8 |
34 | இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப்பெண்ணும் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோராகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். | லூக் 2:36 லூக் 2:37 2கொரி 7:11 2கொரி 7:12 2கொரி 8:16 2கொரி 11:28 1தீமோ 3:5 தீத் 3:8 |
35 | உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன். | 1கொரி 7:2 1கொரி 7:5-9 1கொரி 7:28-9 1கொரி 7:36-9 மத் 19:12 |
36 | ஒருவர் காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல், தாம் மண ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணுடன் தவறாக நடக்க எண்ணங்கொண்டால், வேறு வழி இல்லையென்றால் அவர் திருமணம் செய்து கொண்டு தம் விருப்பத்தை நிறைவேற்றட்டும். அது பாவமல்ல. | 1சாமு 2:33 |
37 | ஆனால் தம் உள்ளத்தில் உறுதியாயிருந்து எந்தக் கட்டாயத்திற்கும் உட்படாமல், தம் சொந்த விருப்பப்படி செயல்படும் ஆற்றல் கொண்ட ஒருவர் தாம் மண ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணை அந்நிலையிலேயே வைத்திருக்கத் தம் உள்ளத்தில் தீர்மானம் செய்திருந்தால் அவர் செய்வதில் தவறில்லை. |
38 | ஆகவே தாம் ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணைத் திருமணம் செய்பவர் நல்லதையே செய்கிறார். எனினும் திருமணம் செய்யாமல் இருப்பவர் அதைவிட நல்லதையே செய்கிறார். | 1கொரி 7:2 எபிரெ 13:4 |
39 | கணவர் உயிரோடு இருக்கும் காலம்வரை மனைவி அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார். கணவர் இறந்துவிட்டால் தாம் விரும்புபவரைத் திருமணம் செய்து கொள்ள அவருக்கு உரிமையுண்டு. ஆனால் அவர் திருமணம் யெ”து கொள்பவர் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவராய் இருத்தல் வேண்டும். | 1கொரி 7:10 1கொரி 7:15 ரோம 7:2 ரோம 7:3 |
40 | அவர் கைம்பெண்ணாகவே இருந்துவிட்டால் அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். இதுவே என் கருத்து. நானும் கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப் பெற்றிருக்கிறேன் எனக் கருதுகிறேன். | 1கொரி 7:1 1கொரி 7:8 1கொரி 7:26 1கொரி 7:35 |