1இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைக் குறித்துப் பார்ப்போம். நம் அனைவருக்கும் அறிவு உண்டு. இது நமக்குத் தெரிந்ததே. இவ்வறிவு இறுமாப்படையச் செய்யும்: ஆனால் அன்பு உறவை வளர்க்கும்.1கொரி 8:10 1கொரி 10:19-22 1கொரி 10:28-22 எண் 25:2 அப் 15:10 அப் 15:19 அப் 15:20 அப் 15:29 அப் 21:25 வெளிப் 2:14 வெளிப் 2:20 2தமக்கு ஏதோ அறிவு இருக்கிறது என்று நினைக்கிறவர் அறிய வேண்டிய முறையில் எதையும் அறிந்து கொள்ளவில்லை.நீதி 26:12 நீதி 30:2-4 ரோம 11:25 கலா 6:3 1தீமோ 1:5-7 1தீமோ 6:3 1தீமோ 6:4 3கடவுளிடம் அன்பு செலுத்துகிறவரைக் கடவுள் அறிவார்.1கொரி 2:9 ரோம 8:28 யாக் 1:12 யாக் 2:5 1பேது 1:8 1யோவா 4:19 1யோவா 5:2 1யோவா 5:3 4இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்பதைக் குறித்துப் பார்ப்போம்: “இவ்வுலகில் சிலை என்பது ஒன்றுமேயில்லை “, “கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை “ என்று நமக்குத் தெரியும்.1கொரி 10:19 1கொரி 10:20 சங் 115:4-8 ஏசா 41:24 ஏசா 44:8 ஏசா 44:9 எரே 10:14 எரே 51:17 எரே 51:18 ஆபகூ 2:19 ஆபகூ 2:20 அப் 19:26 5விண்ணிலும் மண்ணிலும் தெய்வங்கள் என்று சொல்லப்படுபவை பல இருக்கலாம்: தெய்வங்கள் பலவும் ஆண்டவர்கள் பலரும் உளர்.உபா 10:17 எரே 2:11 எரே 2:28 எரே 11:13 தானி 5:4 யோவா 10:34 யோவா 10:35 கலா 4:8 2தெச 2:4 6ஆனால் நமக்குக் கடவுள் ஒருவரே: அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன: அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே, நமக்கு ஆண்டவரும் ஒருவரே: அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன: அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம்.1கொரி 8:4 யோனா 1:9 மல்கி 2:10 யோவா 10:30 யோவா 14:9 யோவா 14:10 யோவா 17:3 யோவா 20:17 எபே 1:3 எபே 3:14 எபே 4:6 1பேது 1:2 1பேது 1:3 7ஆனால் இவ்வறிவு எல்லாரிடமும் இல்லை. இதுவரை சிலைகளை வழிபட்டுப் பழக்கப்பட்ட சிலர் அவற்றிற்குப் படைக்கப்பட்டவற்றைப் படையல் பொருள் என எண்ணி உண்கிறார்கள். அவர்களின் மனச் சான்று வலுவற்றதாயிருப்பதால் அது கறைப்படுகிறது.1கொரி 1:10 1கொரி 1:11 8நாம் உண்ணும் உணவு நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்காது. உண்ணாதிருப்பின் அதனால் ஒரு குறையுமில்லை. உண்போமாயின் அதனால் ஒரு நிறைவுமில்லை.1கொரி 6:13 ரோம 14:17 கொலோ 2:20-23 எபிரெ 13:9 9ஆனால் உங்களுக்கிருக்கும் உரிமை மனவலிமையற்றவர்களுக்குத் தடைக்கல்லாயிராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.1கொரி 8:10 1கொரி 10:24 1கொரி 10:29 மத் 18:6 மத் 18:7 மத் 18:10 லூக் 17:1 லூக் 17:2 ரோம 14:20 ரோம 14:21 கலா 5:13 1பேது 2:16 2பேது 2:19 10“அறிவு “ கொண்டுள்ள நீங்கள் சிலைவழிபாட்டுக் கோவிலில் பந்தியமர்ந்திருப்பதை வலுவற்ற மனச்சான்று உடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் காண்பாரானால் அவரும் சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்ணத் தூண்டப் பெறுவாரல்லவா?1கொரி 8:1 1கொரி 8:2 11இவ்வாறு இந்த “அறிவு “ வலுவற்றவரின் அழிவுக்குக் காரணமாகிறது. அவர் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் அல்லவா? அவருக்காகவும் கிறிஸ்து இறந்தார் அல்லவா?1கொரி 8:13 1கொரி 10:33 1கொரி 11:1 ரோம 14:15 ரோம 14:20 ரோம 14:21 ரோம 15:1-3 12இவ்வாறு நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.ஆதி 20:9 ஆதி 42:22 யாத் 32:21 1சாமு 2:25 1சாமு 19:4 1சாமு 19:5 1சாமு 24:11 மத் 18:21 13ஆகையால் என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நான் உண்ணும் உணவு ஒரு தடைக்கல்லாக இருக்குமானால், இறைச்சியை ஒரு நாளும் உண்ணமாட்டேன். அவர் பாவத்தில் விழ நான் காரணமாய் இருக்கமாட்டேன்.1கொரி 6:12 1கொரி 9:12 1கொரி 9:19-23 1கொரி 10:33 1கொரி 11:1 1கொரி 13:5 ரோம 14:21 2கொரி 11:29 2தீமோ 3:8 2தீமோ 3:9