எதிர் பாலினத்தவர் (ஆண்) மீது ஒரு பெண்ணின் ஆடை ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படையாக விவாதித்து, எல்லாக் காரியங்களிலும் தேவனைப் பிரியப்படுத்த வேண்டும் என்று விரும்புவோருக்கு உதவியாக இருக்கக்கூடிய தெய்வீக ஆலோசனைகளையும், நாம் கொண்டிருக்க வேண்டிய புரிதலையும் இந்தக் கட்டுரை விரிவாக முன்வைக்கிறது. ஒரு பெண்ணின் மீது ஆண் இச்சை கொள்வது விபசாரம் என்று நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குக் கற்பித்தார். “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.” (மத்தேயு 5:28). அதாவது ஓர் ஆண் ஒரு பெண்ணின் உடலைத் தொடாமலேயே, அவள் மீது கொண்டிருக்கிற இச்சையினால் அவளைக் குறித்து தவறான நோக்கில் தன் சிந்தனையில் அசைபோட்டுக் கொண்டிருந்தாலே அது விபசாரம் ஆகிவிடும் என்பதே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கருத்தாகும். ஓர் ஆண் தனது இருதயத்தில் ஒரு பெண்ணின் மீது இச்சை கொண்டு செய்கிற பாவத்திற்கு அந்தப் பெண் அணிந்திருக்கிற ஆடையும் ஒரு காரணியாக அமைகிறது. இத்தகைய பாவத்திற்குப் பெண்ணின் அரைகுறையான ஆடை மட்டுமே காரணம் என்று கூறுவது முற்றிலும் உண்மையல்ல என்றாலும், பொதுவாக இருக்கக்கூடிய பல காரணங்களில் இதுவும் ஒன்றாகும். விபசார மயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடைய ஆண்கள் (2 பேதுரு 2:14) இந்தப் பூமியிலேயே மிகவும் அடக்கமான பெண்ணின் மீதும் தமது காமப் பார்வையை வீசுவர் என்பதில் சந்தேகமில்லை.
இருப்பினும், கிறிஸ்தவ விசுவாசத்தில் நிலைத்திருப்பதற்காகப் பாவத்திற்கு எதிராகப் போராடி, தனது பாவ உணர்ச்சிகளுக்கு எதிராக ஒரு நல்ல போராட்டத்தை நடத்துகிற ஒரு மனிதன், மோசமான ஆடை அணிந்த பெண்ணின் பார்வையைச் சமாளிப்பதற்காகக் கூடுதலான சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இவ்வாறு இந்த மனிதன் அடிக்கடி இத்தகைய சோதனைக்கு ஆளாகும் போது அவன் அதில் வெற்றிகொள்ள முடியாமல், தோல்வியுற்று விழுந்துவிடுகிறான். மிகச் சிறந்த பரிசுத்தவான்கள் கூட இத்தகைய சோதனைகள் வரும்போது எப்போதும் வெற்றி கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்பதே யதார்த்தமான உண்மையாகும். ஓர் ஆண் பெண்ணின் மீது இச்சை கொள்வது அவனுடைய சொந்த விருப்பப் பாவமேயன்றி, இதற்காக எதிர் பாலினத்தவராகிய ஒரு பெண்ணைக் குற்றம் சொல்லக் கூடாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். அதேவேளையில், ஓர் ஆணின் தடுமாற்றத்திற்கும் அவனது வீழ்ச்சிக்கும் ஒரு பெண்ணின் நாகரிகமற்ற உடைகளும், அவளுடைய இச்சையான பேச்சுகளும், அவளுடைய விகற்பமான நடத்தைகளுமே காரணமாக இருந்தால், தேவனுக்கு முன்பாக அவள் அந்த நடத்தையைக் குறித்துக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு பெண்ணும் நினைவில் கொள்வது அவசியமாகும்.
“இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் (அது பெண்ணாயிருந்தாலும்) இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!” (மத்தேயு 18:7) என்று ஆண்டவர் கூறியது மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.
இந்தக் கட்டுரையில் ஆசிரியர் தனது பெயரை வெளிப்படுத்தவில்லை. இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைப் பிரயோகங்களும், சொல்லப்பட்டிருக்கிற முறைகளும் ஆசிரியர் தனது அடையாளத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் என்னும் கட்டாயத்திற்கு அவரை உள்ளாக்கி இருக்கலாம். இருப்பினும், இதன் ஆசிரியர் எதையும் தவறான முறையில் எழுதாமல், பொதுவாக எல்லா எழுத்தாளர்களும் தங்களது கட்டுரையில் நடைமுறையில் என்ன வார்த்தைகளைக் கொண்டு எழுதுவார்களோ அவற்றைப் பயன்படுத்தியே இவரும் எழுதியுள்ளார். பாவத்தை அதன் அசலான பெயரில் குறிப்பிட்டு அம்பலப்படுத்துவது எந்த வகையிலும் பாவமாகக் கருதப்பட முடியாது என்று வெளியீட்டாளர்களாகிய நாங்களும் நினைக்கிறோம். ஆகவே இதன் ஆசிரியரின் கருத்தை நாங்கள் எவ்விதத்திலும் மாற்றி எழுதாமல், அவர் என்ன சொல்ல வருகிறாரோ அதன் கருத்தை நீர்த்துப் போகச் செய்யாத அளவிற்கு அதன் அசல் வடிவிலேயே கொடுத்திருக்கிறோம்.
சில விஷயங்களை இங்கே குறிப்பிடுவது ஆட்சேபனைக்குரியது என்று எந்த வாசகராவது கருதினால், அந்தச் செயல்களை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் கண்டிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். நடைமுறையில் இருக்கிற ஓர் அநாகரிகமான செயலைத் திருத்துவதற்காகவும், கண்டிப்பதற்காகவும் சற்றுக் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது எந்த வகையிலும் அந்தத் தவறைக் காட்டிலும் மோசமானது ஆகிவிடாது என்பதைக் கூறிக்கொள்கிறோம். சொல்வதற்குச் சங்கடமான காரியங்களை எவ்விதத்திலும் பூசிமெழுகாமல், உள்ளதை உள்ளபடியே நாங்கள் இங்கே குறிப்பிடுவதற்காகக் கிறிஸ்துவின் நாமத்தில் உங்களிடத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். கர்த்தருக்குள் இருக்கிற ஒவ்வொரு சகோதரியும் சரியான கிறிஸ்தவ நற்பண்புகளை வெளிப்படுத்தி, ஆடை அணியும் காரியத்திலும் கர்த்தரைக் கனப்படுத்த வேண்டும் என்னும் தூய நோக்கத்துடன் இக்கட்டுரையை நாங்கள் வெளியிடுகிறோம்.
“ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள்.” (2 சாமுவேல் 11:2)
தாவீதின் பாவத்தைக் குறித்து நாம் அடிக்கடியும் அதிகமாகவும் பேசுகிறோம். ஆனால், பத்சேபாளின் பாவத்தைப் பற்றி நாம் பேசுவதோ அல்லது அதைக் குறித்துக் கேள்விப்படுவதோ மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது. தாவீதின் பாவம் மிகப்பெரியது, பத்சேபாளின் பாவமோ மிகச்சிறியது என்பது நிதர்சனமான உண்மை. தாவீதின் பாவம் வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்று; தன்னைக் கேள்வி கேட்க எவருமில்லை என்ற அகந்தையில் செய்யப்பட்டது. ஆனால், பத்சேபாளின் பாவமோ கவனக்குறைவால் மட்டுமே நடைபெற்றது. தாவீது வேண்டுமென்றே பத்சேபாளுடன் விபசாரம் செய்தான்; மேலும், அவளுடைய கணவனைத் திட்டமிட்டுக் கொலை செய்தான். ஆனால், பத்சேபாளின் வாழ்விலோ இது எதிர்பாராமல் நடந்த ஒன்று; தாவீதின் கண்களுக்கு முன்பாகத் தன்னைத் தற்செயலாக வெளிப்படுத்திக் கொண்டாள். எனவே, தாவீதின் பாவம் பெரியது என்பதிலும், பத்சேபாளின் பாவம் சிறியது என்பதிலும் நமக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை.
ஆயினும், பத்சேபாளின் சிறிய பாவமே தாவீதின் பெரிய பாவத்திற்குக் காரணமாக அமைந்துவிட்டது என்பதும் உண்மையே. பத்சேபாளுடைய அறியாமையின் சிறிய பாவமானது—அதாவது, எவ்விதச் சிந்தனையுமின்றி கவனக்குறைவாகத் தாவீதுக்கு முன்பாகத் தன்னை வெளிப்படுத்திய அவளுடைய சிறிய செயலானது—“சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!” (யாக்கோபு 3:5) என்னும் வேதவசனத்திற்கு ஏற்ப, ஒரு பெரிய தீப்பிழம்பை உண்டாக்கி, காட்டையே எரித்த தீப்பொறியைப் போல மாறிவிட்டது.
ஒருபுறம் பார்த்தால், பத்சேபாளைப் பொறுத்தவரை அது தாவீதின் கண்களுக்கு முன்பாகச் சற்று கவனக்குறைவாக நடந்துகொண்ட செயலாகவும், சற்றுச் சிந்தனையற்ற மற்றும் தற்செயலாக நடைபெற்ற ஒரு நிகழ்வாகவுமே இருக்கிறது. ஆனால் மறுபுறம் பார்த்தால், தாவீதைப் பொறுத்தவரை அது விபசாரமாகவும், மனசாட்சியைக் குற்றப்படுத்தும் செயலாகவும் மாறிவிட்டது. மேலும், இது கொலைக்கும், அவளுடைய கணவனின் இழப்பிற்கும், ஏதும் அறியாத போர்வீரர்களின் மரணத்திற்கும் வழிவகுத்துவிட்டது.
இவை மட்டுமின்றி, தேவனுடைய சத்துருக்கள் அவரைத் தூஷிப்பதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது; முறையற்ற கர்ப்பம் தரித்த அவமானத்திற்கும், ஒன்றும் அறியாத குழந்தையின் மரணத்திற்கும் ஏதுவானது. பின்னாட்களில் அப்சலோம் தன் தந்தையை எதிர்த்துக் கலகம் செய்வதற்கும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போரில் அவன் மரணமடைவதற்கும் இதுவே காரணமாக அமைந்தது. மேலும், இஸ்ரவேல் மக்கள் அனைவருடைய கண்களுக்கு முன்பாகவும் தாவீதின் மனைவிகள் தீட்டுப்படுத்தப்பட்ட தவறான செயலுக்கும், தாவீதின் குடும்பத்தார் ஒருவரையொருவர் வெட்டிக் கொலை செய்யும் சூழல் உண்டானதற்கும் பத்சேபாளின் ஒரு சிறிய பாவமே காரணமாக அமைந்துவிட்டது (2 சாமுவேல் 12:11-18).
“ஒரு சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டை எரித்துவிடுகிறது!” என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பத்சேபாள் மட்டும் தன் உடலை ஆணின் பார்வையில் காட்டாமல் மிகக் கவனமாக இருந்திருந்தால் இந்தப் பெரிய தீமையான காரியங்கள் எதுவும் நடந்திருக்காது. நான் கூறுவதைச் சிரத்தையுடன் கவனிக்கவும்: அவள் இந்தக் காரியத்தை திட்டமிட்டுச் செய்யவுமில்லை, அல்லது இந்தவிதமான தீமையான காரியம் நடந்துவிடும் என்று முன்னதாக யோசித்தும் செய்யவில்லை. ஆனாலும் இவையெல்லாம் நடைபெறுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொடுத்துவிட்டாள். அவள் தன் உடலை உள்நோக்கத்துடனோ அல்லது வேண்டுமென்றோ காட்டவில்லை. அவள் அதை உணராமலும் சிந்தனையின்றியுமே செய்தாள். ஆயினும்கூட அவளுடைய அறியாமையினால் ஏற்பட்ட சிறிய பாவத்தின் விளைவு, நோக்கத்துடனும் விருப்பத்துடனும் செய்யப்பட்டால் என்னவிதமான விளைவை உண்டுபண்ணுமோ, அவ்விதமான விரும்பத்தகாத விளைவையே உண்டாக்கிவிட்டது.
நான் மேற்கண்ட அனைத்துக் காரியங்களையும் இப்பொழுது எழுதுவதற்கான காரணம், “பத்சேபாளைப் போலவே கவனக்குறைவான வகையில் குற்றங்களைச் செய்கிற பல கிறிஸ்தவப் பெண்கள் இன்றைக்கும் நம்மிடையே இருக்கிறார்கள்” என்பதாலேயே ஆகும்.
தேவபக்தியுள்ள பெண்கள் தங்களது உடலை விரும்பத்தகாத வகையில் காட்ட வேண்டும் என்று ஒருபோதும் எண்ணுவதில்லை. இத்தகைய எண்ணங்கள் தோன்றினாலும்கூட, அவர்கள் அந்த எண்ணத்திலிருந்து உடனடியாக அச்சத்துடன் வெளியே வந்துவிடுவார்கள்.
இருப்பினும் கவனக்குறைவாகவும், அறியாமையினாலும் தங்கள் உடல் தெரியும்படி ஆடை அணிவதைத் தங்கள் பழக்கமாக வைத்திருக்கிறார்கள். நான் வேண்டுமென்றே அவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்காக இதை எழுதவில்லை. பத்சேபாளைப் போலவே இவர்களும் அப்பாவிகள் என்று நான் கருதுகிறேன். ஆயினும் இவ்விவகாரத்தில் அவர்களைக் குற்றஞ்சாட்டுவதில் இருந்து என்னால் முற்றிலும் விலக்கிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பெண்களின் சில வகையான உடைகள் ஒரு ஆணின் கண்களையும் இருதயத்தையும் கவர்ந்திழுக்கும் விதத்தில் ஆபாசமாக இருக்கின்றன என்பதை முழு உலகமும் நன்கு அறிந்து வைத்திருக்கிறது. ஆகவே கிறிஸ்தவப் பெண்கள் மட்டும் இதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் ஏதும் அறியாத அப்பாவிகளாகவும் அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது நம்பக்கூடியதாக இல்லை. அவ்வாறு இருந்தால் அது நிச்சயமாக அரிதான ஒன்றாகவே இருக்க முடியும் என்று கருதுகிறேன். இதை நான் அவர்கள்மீது குற்றஞ்சாட்டும் படி எழுதாமல், அவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கும், அவர்கள் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படும்படி அவர்களைத் தூண்டுவதற்குமே எழுதுகிறேன். மேலும் ஆவிக்குரிய போரில் ஈடுபட்டிருக்கிற, எளிதில் வீழ்ந்துவிடக்கூடிய நிலையில் இருக்கிற அவர்களது பெலவீனமான சகோதரர்களின் ஆன்மீக நலனில் அக்கறையுடன் இருப்பதற்காக, அவர்கள் முன்னதாக கவனக்குறைவாக இருந்த காரியத்தில் இப்பொழுது கவனமாய் இருக்கும்படியும், முன்பு அவர்கள் அலட்சியமாக இருந்த காரியத்தில் இப்பொழுது ஞானத்தோடு நடந்துகொள்ளும்படியாகப் புத்திசொல்லவுமே எழுதுகிறேன்.
ஒருவர் மற்றொருவருடைய பார்வையில் படும்படி நிர்வாணமாக இருப்பது தவறு என்பதை நாம் முதலாவது புரிந்துகொள்ள வேண்டும். இது ஆணுக்கும் பொருந்தும், பெண்ணுக்கும் பொருந்தும். இருவரில் யார் எதைச் செய்தாலும் அது தவறே. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, தேவன் “தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்” (ஆதி 3:21). தேவன் அவர்களுக்கு ஆடைகளை அணிவித்ததற்கான ஒரே காரணம் அவர்களின் நிர்வாணத்தை மறைக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். வேதத்தின் முதல் புத்தகமான ஆதியாகமம் நமக்குத் தெளிவாகக் கூறுகிறது, தேவன் அவர்களுக்கு மேலங்கிகளை அணிவித்தார். அவர்கள் ஏற்கனவே இலைகளால் ஆன ஆடைகளை அணிந்திருந்தார்கள். அதாவது இன்றைய நாட்களில் பலர் அணிந்திருக்கிறதைப் போலவே அவர்கள் தங்களது அந்தரங்க உறுப்புகளை மறைக்கும் அளவுக்கோ அல்லது அதைக் காட்டிலும் சற்றுக் கூடுதலாகவே அணிந்திருக்கலாம். அவர்கள் இத்தகைய ஆடைகளை அணிந்திருந்த போதிலும், அவர்கள் இன்னமும் தேவனுடைய பார்வையிலும், தங்களுடைய பார்வையிலும் நிர்வாணிகளாகவே இருந்தார்கள். அதாவது, தேவன் ஆதாமை அழைத்தபோது, “தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன்” என்றே ஆதாம் கூறினான். தேவன் அவர்களுடைய நிர்வாணத்தை மறைப்பதற்கு, ஒரு குட்டையான ஆடையையோ, அல்லது நீச்சல் உடையையோ, அரைக்கால் சட்டையையோ கொடுக்கவில்லை. மாறாக முழு நீள அங்கி போன்ற ஓர் ஆடையையே அணிவித்தார். அல்லது ஏவாளின் உடலை மூடி மறைக்கும் அளவுக்கு அங்கியைக் கொடுத்துவிட்டு, ஆதாமுக்கு ஒரு அரைக்கால் சட்டையையோ கொடுக்கவில்லை. இருவருக்குமே முழுநீள அங்கியையே அணிவித்தார். ஒரு பெண்ணின் நிர்வாணத்தில் தவறு இருப்பதைப் போலவே ஓர் ஆணின் நிர்வாணத்திலும் தவறு இருக்கிறது என்பதை இதன் மூலம் நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு பெண் ஆணின் முன்பாக தனது நிர்வாணத்தை வெளிப்படுத்துவது தவறாக இருப்பதைப் போலவே, ஓர் ஆண் தனது நிர்வாணத்தை ஒரு பெண்ணிடம் வெளிப்படுத்துவதும் தவறானதாகவே இருக்கிறது. இரண்டும் சம அளவில் தவறுடையவையாகவே இருக்கின்றன. ஆயினும் இரண்டும் சமமான ஆபத்தை விளைவிக்கக்கூடியவை அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஆணின் நிர்வாணத்தைப் பார்த்து பெண்கள் சோதிக்கப்படுவதைக் காட்டிலும், பெண்ணின் நிர்வாணத்தைப் பார்த்து ஆண்களே அதிகமாகச் சோதிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் தனது உடலை சிறிதளவு வெளிப்படுத்தினாலும், அவளைப் பார்க்கிற ஒவ்வொரு ஆணின் இருதயமும் கவர்ந்திழுக்கப்படுகிறது. அதாவது அந்த பெண்ணைப் பார்க்கும் ஒவ்வொரு ஆணின் இதயமும் கவர்ந்திழுக்கிற அக்கினி அம்புகளால் தாக்கப்படுகிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதான் நிதர்சனமான உண்மை. இது ஓர் யதார்த்தமான உண்மை என்பதால், நாம் ஒவ்வொருவரும் விரும்பும் விதத்தில் ஆடை அணிந்துகொள்வதற்கு எவ்விதத்திலும் சுதந்திரம் கிடையாது.
“உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்ல என்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1 கொரி. 6:19-20).
ஒரு பெண் தன்னைப் பார்க்கிற ஆண்களின் காமப் பார்வை தன்மீது விழும்படி தனது உடலையோ அல்லது உடலின் பாகங்களையோ வெளிப்படுத்தும் வகையில் ஆடை அணிந்திருந்தால், அவள் நிச்சயமாகவே தனது உடலின் மூலமாகத் தேவனை மகிமைப்படுத்தமாட்டாள். ஆகவே ஒரு பெண் தேவனுக்குப் பயந்தவளாக இருப்பாளானால், அவள் தன் அண்டை வீட்டாரின் ஆண்களை தேவன் அன்புகூருவது போல அன்புகூருவாளானால், அவள் தன் உடல் தெரியும் வண்ணம் ஒருபோதும் ஆடை அணியத் துணியமாட்டாள் என்பது நிச்சயம். மேலும் அவள் ஆண்களின் இதயங்களை இச்சைக்கு ஏதுவாகத் தூண்டுவதற்காகவும், அவர்களுடைய கண்களைக் கவருவதற்காகவும் தன் உடலை அநீதியின் ஆயுதமாகப் பயன்படுத்த அவள் துணியமாட்டாள்.
பல ஆண்கள் பொல்லாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுடைய பொல்லாத பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக பெண்கள் எதை அணிந்தாலும் அவர்கள் உற்றுப் பார்த்து பெண்களின் மீது இச்சை கொள்வார்கள். “விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்” (2 பேதுரு 2:14) என்று பேதுரு கூறுகிறார். எனவே அவர்களுடைய பார்வையை நம்மால் நிறுத்த முடியாது. இப்படியிருக்கிறபடியால் பெண்களாகிய நீங்கள் அவர்கள் பாவம் செய்வதற்கு உதவி செய்ய வேண்டுமா? ஏற்கனவே பாவவழியில் இருக்கிற அவர்களுக்கு மேலும் சோதனையைக் கொடுக்கும் வண்ணமாக நீங்கள் நடந்துகொள்ள வேண்டுமா? நீங்கள் இவ்வாறு செய்தால் தேவன் உங்களை மன்னிப்பாரா?
தேவபக்தியுள்ள மனிதர்கள் பிற மனிதர்களைப் போல பொல்லாத மனிதர்கள் அல்ல. ஆனால் அவர்களும் பெலவீனமான மனிதர்களே. தாவீது பொல்லாத மனிதர் அல்ல; அவர் தேவனுடைய இருதயத்துக்கு ஏற்ற ஒரு மனிதராக இருந்தார் என்று வேதம் சொல்கிறது. ஆனால் ஆடை அணியாத ஒரு பெண்ணுக்கு முன்பாக அவர் ஒரு பலவீனமான மனிதனாக இருந்தார். ஒரு பெண்ணின் நிர்வாணத்தைப் பார்த்தும் சலனம் அடையாத ஓர் ஆண் இருப்பானாகில் அவன் ஓர் அபூர்வமான மனிதனாகவே இருக்க வேண்டும். ஆகவே கிறிஸ்துவுக்குள் இருக்கிற சகோதரர்கள் ஒவ்வொருவரும் பொல்லாதவர்கள் இல்லையென்றாலும் அவர்கள் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள். இதுமட்டுமின்றி, அவர்களை மென்மேலும் பலவீனப்படுத்தும்படி பிசாசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறான். இத்தகைய கிறிஸ்தவ சகோதரர்கள், தொடர்ந்து தங்கள் ஆத்துமாவின் எதிரிகளால் ஒழுக்கத்தைச் சிதைத்து பலவீனப்படுத்த முயற்சிக்கிற உலகில் வாழ்கிறார்கள். மேலும் அவர்களது இதயத்தின் பரிசுத்தத்தை அழிக்கும்படி வடிவமைக்கப்பட்ட இத்தகைய காட்சிகளால் தொடர்ந்து குண்டு வீசப்பட்டுத் தாக்கப்படுகிற உலகில் வாழும்படியான கட்டாயத்திலும் உள்ளார்கள். பிசாசினுடைய இத்தகைய தந்திரமான வேலைகளுக்கு கிறிஸ்தவப் பெண்கள் உடந்தையாகச் செயல்பட்டு, உதவி செய்ய வேண்டுமா? அதுவும் தேவனுடைய சபையில், எல்லாருமாகக் கூடிவந்திருக்கும்போது, உங்களுடைய கிறிஸ்துவுக்குள்ளான உடன் சகோதரர்களுக்கு உங்களை ஒரு சோதனையின் கருவியாக ஆக்கிக்கொள்ள வேண்டுமா?
ஏதேச்சையாகவோ, அல்லது கவனக்குறைவாகவோ உங்கள் உடலின் பாகங்கள் தெரியும்படி நீங்கள் உடையணிந்து, உங்கள் சகோதரர்கள் முன்பாக வரும்போது, அவர்கள் அதைக் காணும்போது அவர்களுடைய ஆத்துமாக்களில் நடைபெறும் கடுமையானதும் கசப்பானதுமான மோதலை நீங்கள் புரிந்துகொண்டிருக்க முடியும். அந்த சோதனையின் வல்லமையிலிருந்து விடுபடுவதற்காகவும், அதிலிருந்து மனம் வெளியே வருவதற்கான உதவிக்காகவும் அவர்கள் தேவனிடம் மன்றாடுவதையும் நீங்கள் கேட்டிருக்கலாம். ஒருவேளை இந்தக் கடுமையான சோதனையில் அவர்கள் விழுந்து பாவம் அவர்களை வென்றபோது, தங்கள் கண்களாலும் இதயத்தாலும் மனத்தாலும் பாவம் செய்தபோது, அவர்களுடைய அவமானத்தின் கண்ணீரையும் அதிலிருந்து வெளியே வருவதற்கான மனந்திரும்புதலின் கண்ணீரையும் நீங்கள் பார்த்திருக்க முடியும். இவை எல்லாவற்றையும் பெண்களாகிய நீங்கள் மெய்யாகவே அறிந்திருப்பீர்களாயின், என் விருப்பப்படிதான் உடையை அணிவேன், அது என் உரிமை என்று நீங்கள் ஒருபோதும் போராடிக்கொண்டிருக்க மாட்டீர்கள்.
உண்மை என்னவென்றால், உங்களுக்கு அத்தகைய உரிமை இல்லை என்பதே ஆகும். கிறிஸ்துவுடனேகூட பாவத்துக்கு மரித்த ஒரு சகோதரனை, நீங்கள் அணிந்திருக்கிற கவனக்குறைவான ஆடையால் அழித்துப்போட உங்களுக்கு உரிமை இல்லை. நீங்களும் கிறிஸ்துவினால் கிரயம் செலுத்தி விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய சரீரம் உங்களுடையது அல்ல. உங்களது உடலின் வாயிலாக தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். ஆகவே அந்த உடலுக்கு, உங்கள் விருப்பப்படி அல்ல, தேவனின் விருப்பப்படியே உடை உடுத்த வேண்டும்.
உங்களுடைய சகோதரர்களின் ஆத்துமாக்களின்மீது நீங்கள் கொண்டிருக்கிற சிறிதளவு உண்மையான அன்பானது, விரும்பியபடி ஆடை அணிவதற்கான உங்களது வாஞ்சையை உங்கள் இதயத்திலிருந்து நிரந்தரமாக நீக்கிவிடும். “அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்” (ரோமர் 15:1-3) என்று வாசிக்கிறோம். ஏனெனில் கிறிஸ்து நமக்கு முன்மாதிரியான வகையில், அவர் பரலோகத்தின் தமது அனைத்து மகிமைகளையும் நமக்காகத் துறக்கவும், நம்முடைய ஆத்துமாக்களைக் காப்பாற்றுவதற்காக தேவபக்தியற்ற மனிதர்களின் நிந்தைகளைத் தாங்கிக்கொள்ளவும் ஆயத்தமாக இருந்தார். இதை எல்லாம் அறிந்திருக்கிற நீங்கள், உங்களது உடையின் மூலமாக, உங்களைப் பிரியப்படுத்த வேண்டும் என்னும் உரிமைக்காக நீங்கள் போராடுவீர்களா? இன்னொரு மனிதனின் ஆன்மாவைக் காப்பாற்றுவதற்காக, ஆடையின் மூலமாக உங்களுக்குக் கிடைக்கிற ஒரு சிறிய சந்தோஷத்தை உங்களால் விட்டுக்கொடுக்க முடியாதா? பாவத்திற்கு எதிரான போரில், உங்களுடைய சகோதரனுக்கு உதவுவதற்காக, “பழையபாணி உடைகளையும்” அல்லது “காலாவதியாகிப் போன உடைகளையும்” அணிவதால் ஏற்படுகிற சிறிதளவு அவமானத்தையோ அல்லது நிந்தையையோ உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதா?
நீங்கள் ஆண்களின் உணர்வுரீதியான மனோபாவத்தை எப்போதாவது புரிந்துகொள்ள வேண்டுமெனில், அதற்கு ஓர் ஆணின் வார்த்தையைத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதைப் பெண்கள் அனுபவிக்க முடியாது. மேலும் ஒரு தெளிவான உண்மை என்னவென்றால், கவனக்குறைவான வகையில் தன்னை வெளிப்படுத்துகிற ஒரு பெண்ணின் பார்வையால் ஓர் ஆணின் உணர்ச்சிகள் எளிதில் தூண்டப்படுகின்றன. பத்சேபாள் குளித்துக்கொண்டிருக்கும்போது தாவீதுக்கு அதுதான் நடந்தது. அவள் குளித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் அவன் எளிதில் உணர்ச்சி அடைந்துவிட்டான். தாவீதைக் காட்டிலும் பெரும்பாலான ஆண்களால் இத்தகைய உணர்ச்சிகளை எளிதாகக் கட்டுப்படுத்தி அதிலிருந்து வெளியே வந்துவிட முடியும் என்பது உண்மைதான். தாவீதைப் போல இந்த அளவுக்கு எல்லை மீற மாட்டார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் அவர்கள் எண்ணத்திலும் சிந்தையிலும் இத்தகைய காட்சியை ரசிக்காமல் இருந்தார்கள் என்று எவ்வாறு சொல்லமுடியும்? இந்தக் காட்சியை நினைத்துப் பார்க்க வேண்டாமென அவர்கள் எதிர்த்து நின்றார்கள் என்று எப்படித் தெரியும்? அவர்கள் தங்கள் சிந்தையோடு கண்களாலும் இதயத்தாலும் கற்பனையாலும் பாவம் செய்ய மாட்டார்கள் என்று நாம் எவ்வாறு உறுதிகூற முடியும்? ஓர் ஆண், தான் கண்ட பெண்ணின் காட்சியை விட்டு வெகு தொலைவு சென்ற பிறகும், அதைக் கற்பனை செய்து பார்ப்பதில் அல்லது அதை மீண்டும் நினைத்துப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான்.
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று” (மத்தேயு 5:28) என்று வேதாகமம் கூறுகிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இது ஒரு தீவிரமான விஷயம் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா? இது உண்மையில் தீவிரமானது, கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது ஆகும். ஏனென்றால் அது பாவம், பாவம் எப்போதும் தீவிரமானது. பாவம் அழிக்கக்கூடியது, சிதைக்கக்கூடியது, இடிக்கக்கூடியது அது தண்டனைக்குரியது. ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பது எவ்வளவு தீவிரமான விஷயம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமானால், நீங்கள் அடுத்த வசனத்தைப் படித்தால் புரிந்துகொள்ள முடியும். அவ்வசனத்தில், “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்” (மத்தேயு 5:29) என்று சொல்லப்பட்டுள்ளது. பாவத்தின் தீவிரத்தன்மையைப் பற்றி வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள மிகவும் ஆணித்தரமான அறிகுறியாகும் இது. இது பெண்கள் கவனக்குறைவான முறையில் அணிகிற ஆடையால், மிகவும் எளிதாகவும், ஏதேச்சையாகவும் ஏற்படக்கூடிய பாவத்தின் தீவிரத் தன்மையைப் பற்றிப் பேசுகிறது. எனவே இது ஓர் இலகுவான விஷயம் அல்ல, நீங்களும் அதை எளிதான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இதைக் கேட்கிற நீங்கள் (பெண்கள்), “நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான், நாங்கள் அதை ஒத்துக்கொள்கிறோம்; ஆனாலும் நான் கண்ணியமிக்க வகையில்தான் உடை உடுத்துகிறேன்; எனவே உங்களுடைய இந்தக் கருத்தை நான் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று கூறலாம். இதையெல்லாம் ஆமோதிக்கிற நீங்கள் ஆடை விஷயத்தில் அமைதியாய் இருந்துவிடப்போகிறீர்களா? ஆனால் ஒன்றை நான் கூறவிரும்புகிறேன், “இந்த நவீன யுகத்தின் நாகரிகங்களையும் நடைமுறைகளையும் நீங்கள் பின்பற்றினால், நீங்கள் அடக்கமாக உடை உடுத்தமாட்டீர்கள் என்பது உறுதி. ஏனெனில், இந்த நவநாகரிக உலகத்து மகளிரால் அடக்கமாயிருப்பது புறக்கணிக்கப்படுகிறது, கண்ணியமாக உடை உடுத்துவது வேண்டுமென்றே காற்றில் வீசப்படுகிறது”. நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பதால் ஓர் ஆணின் பார்வையின் மூலம் உங்களை நீங்களே பார்க்க முடியாமல் போகலாம். மேலும், நீங்கள் அணிந்திருக்கிற ஆடையில் எந்த அளவுக்கு கவர்ச்சி இருக்கிறது, அது எந்த அளவுக்கு ஆண்களைப் பாதிக்கிறது என்பதை உணர முடியாமல் இருக்கலாம். எனவே நீங்கள் ஆண்களின் கண்கள் கொண்டு பார்த்து கவனமாயிருக்க வேண்டியது அவசியம். “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்” (மத்.10:16) என்னும் வசனத்தின்படி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
இந்த உலக மக்கள் செய்வதைப் போலவே, நீங்களும் சிந்திக்காமல் ஆடை அணிந்தால், நீங்கள் நிச்சயமாக அறிவாளியோ அல்லது பாதிப்பை உண்டாக்காதவரோ அல்ல. நீங்கள் எத்தகைய அறியாமை உள்ளவர்களாகவும் அப்பாவியாகவும் இருந்தாலும், மனிதர்களின் நல்லொழுக்கத்தைக் கெடுக்கவும், அதைச் சீர்குலைக்கவும், அதைச் சிதைக்கவும் அழிக்கவும்படியான தீய மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு நாகரிக முறையை நீங்கள் பின்பற்றுவீர்களாயின், நீங்கள் ஒரு ஞானமுள்ள பெண்மணி அல்ல. அதிகப் பாதிப்பை உண்டாக்காதபடிக்கு ஒரு சிறிய அளவு கவர்ச்சியாக உடை உடுத்தினாலும், உங்களைக் காண்கிற ஆண்களின் உணர்வுகளைத் தூண்டுவதற்காகப் பயன்படும் துன்மார்க்கரின் கையில் இருக்கும் அக்கினி அம்பாக உங்களை ஆக்கிக்கொள்கிறீர்கள்.
நான் வெளிப்படையாகக் கூறுகிற உண்மைகளை நீங்கள் பொறுத்துக்கொள்வீர்களாயின், உங்களை ஞானவான்களாக்கும்படியாக நான் குறிப்பிட்ட சில முக்கியமான அறிவுரைகளை வழங்குகிறேன். இத்தகைய அறிவுரைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களாயின், உங்களுடைய சொந்த இருதயத்தின் தெய்வீகத்தன்மை உங்களை மற்றவர்களுக்குப் பாதிப்பில்லாதவர்களாக மாற்றும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
நான் முன்னரே கூறியது போல், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவன் வடிவமைத்த ஆடையானது அவர்களுடைய நிர்வாணத்தை முழுவதும் மறைக்கக்கூடியதாக இருந்தது. இந்த நோக்கத்தைச் செய்யத் தவறுகிற எந்தவோர் ஆடையும் சரியான ஆடையாக இருக்க முடியாது. முதுகு அதிக அளவில் தெரியும்படியான ஆடைகள், முதுகின் நடுவில் துணியில்லாமல் வடிவமைக்கப்பட்ட ஆடைகள், தொடைகள் தெரியும்படியாக அல்லது கால்களை முழுவதும் மறைக்காத ஆடைகள் யாவும் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் முழு நீள அளவில் வடிவமைத்துக் கொடுத்த தேவனுடைய பார்வையில் அவரது நோக்கத்தை நிறைவேற்றாத தவறான ஆடைகளே ஆகும். குட்டையான உடைகளும், வயிறு தெரியப் போடும் மேலாடைகளும் அல்லது உடல் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே அணியும் அரைகுறை ஆடைகளுக்கும் தேவபக்தியுள்ள பெண்களின் ஆடைகள் வரிசையில் இடமில்லை.
உலகிலுள்ள மக்கள் எதைச் செய்தாலும், என்ன செய்தாலும், எப்படிச் செய்தாலும் நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்வதற்குக் கடமைப்பட்டுள்ளீர்கள். ஆடைகளைக் குறித்த காரியத்தில் பிற சபை மக்கள் என்ன செய்தாலும், நீங்கள் கண்ணியமாக உடை உடுத்துவதற்குக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் இப்போது குறிப்பிட்டுள்ள காரியங்கள் மிகவும் வெளிப்படையானவை. இதில் எது சரி, எது தவறு என்ற கேள்விக்கு இடமே இருக்கக்கூடாது. இவ்வாறு கேள்வி கேட்பது தேவனின் நோக்கங்களை அப்பட்டமாக மீறுவதாகும். இன்றைய நாட்களில் திருச்சபைகள் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளன. உண்மையைச் சொல்வதென்றால், இன்றைய கிறிஸ்தவர்களும் பிரசங்கிமார்களும், அரைகுறையான ஆடைகளை அணிவோரின் உரிமைகளைப் பாதுகாக்கும்படி செயல்படுகிறார்கள்.
இன்றைய பிரசங்கியார்கள் ஆண்களும் பெண்களும் சேர்ந்து செய்யும் காரியங்களை ஊக்குவிக்கிறார்கள். பொழுதுபோக்கு பூங்காக்களிலும், கடற்கரைகளிலும், நீச்சல் குளங்களிலும் ஆண் பெண் பேதமின்றி இருப்பதை இவர்கள் ஆதரிக்கிறார்கள். இப்படிச் செய்வது அவர்களுக்கு வெட்கமாகத் தோன்றவில்லையா? இப்படிச் செய்வதற்கு அவர்களுக்கு உணர்வு இல்லாமல் போனதென்ன? இவர்கள் கிறிஸ்துவின் நியாயாசனத்தின் முன்பாக நிற்கும்போது இதுபோன்ற விஷயங்களுக்கு ஆதரவாக இருந்ததை நியாயப்படுத்துவார்கள் என்று நான் நம்பவில்லை. இப்பொழுது அவர்களுக்கு வெட்கமாக இல்லை என்றால் பின்னர் இதைப் போன்ற வேறு பெரிய காரியங்களைச் செய்வார்கள். இதற்கிடையில், தேவனின் நோக்கங்களை மிகவும் வெளிப்படையாக முறியடிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் ஆடைகளைப் பற்றி நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. சிறிதளவே உடல் தெரியும்படி அணிகிற ஆடைகளே தேவனின் தெளிவான நோக்கத்தை மீறுகிறபடியால் இது தொடர்பான காரியங்களுக்கு நமது சிந்தனையைத் திருப்புவோம்.
குட்டையான ஆடைகளை அணிவது தவறானது என்று எவரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்விதமான ஆடைகள் ஆண்களின் கண்களுக்குப் பாலியல் இச்சையைத் தூண்டக்கூடியதாக இருக்கின்றன என்பது முழு உலகத்திற்குமே தெரிந்த உண்மை. தங்களைத் தேவபக்தியுள்ள பெண்கள் என்று அழைத்துக்கொள்பவர்களும், 'எங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்' என்று எண்ணிக்கொள்பவர்களும், இது தகுதியானதா அல்லது தகாததா என்று யோசிக்காமலேயே, தற்காலத்தில் பிரபலமாயிருக்கும் நாகரிகத்தின்படி, அது குட்டையான உடையாயினும் அல்லது நீளமான உடையாயினும் தொடர்ந்து அணிந்து வருகிறார்கள். 'இது இவ்வளவு குட்டையாக இருக்கிறதே' என்று பிறர் விமர்சிக்கும் அளவுக்கு இந்த ஆடைகள் சிறியதாக இருக்கின்றன. இவர்கள் தங்களது ஆடைகள் போதுமான நீளத்துடன் இருப்பதை உறுதிசெய்வதற்குப் பதிலாக, தங்கள் உடல் தோற்றத்தை மெச்சிக்கொண்டு இத்தகைய ஆடைகளைத் தைரியமாக அணிந்து வருகிறார்கள்.
இத்தகைய ஆடைகளை அணிந்துகொண்டு, உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது, 'என்னுடைய உடலின் எந்தப் பாகமும் வெளியே தெரியவில்லை' என்று உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் உட்காரும்போதோ, குனியும்போதோ, வாகனங்களில் ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ என்ன நிகழும் என்பதை நீங்களே அறிவீர்கள். அப்பொழுது தெரிகின்றவை அநாகரிகத்தின் உச்சகட்டம் என்றே சொல்ல வேண்டும். இத்தகைய உடைகளை நீங்கள் வடிவமைத்தாலும் இல்லாவிட்டாலும், அல்லது அவற்றை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உங்கள் தொடைகளும் கால்களும் வெளியே தெரிந்து ஆண்களின் கண்களுக்கு இச்சையைத் தூண்டுகின்றன என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
குட்டையான பாவாடைகளோ அல்லது அரைக்கால் சட்டைகளோ எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்துமோ, அதே விளைவுகளையே பக்கவாட்டில் திறப்புள்ள (கிழித்துவிடப்பட்டுள்ள) நீளமான பாவாடைகளும் ஏற்படுத்துகின்றன. இந்த வகையான ஆடைகளுடன் உங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இருக்கக்கூடாது. இத்தகைய ஆடைகளை அணியும்போது, உங்கள் தொடைகளை மற்றவர்கள் பார்க்காமல் இருக்க முடியுமா? நடப்பதற்கு வசதியாகவே அவ்வாறு கிழித்துவிடப்பட்டிருக்கிறது என்று நீங்கள் நியாயப்படுத்தலாம்; ஆனால், ஆடையை அவ்வளவு இறுக்கமாக அணிந்தால், அவ்வாறு கிழித்துவிடாமல் நடக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா? இவ்விதமான ஆடைகளையெல்லாம் களைந்துவிட்டு, நீளமானதும் தளர்வானதுமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். இத்தகைய இறுக்கமான ஆடைகளைக் குறித்து இன்னும் சில காரியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
உங்கள் ஆடைகள் எவ்வளவு நீளமாக இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? நீங்கள் குனியும்போதோ அல்லது உட்காரும்போதோ உங்கள் கால்கள் வெளியே தெரியாதவண்ணம், முழங்காலுக்குக் கீழேயும், முன்புறமும் பின்புறமும் முழுவதுமாக மூடப்பட்டிருக்கும்படியான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் போதுமான அளவு பாதுகாப்பாக இருப்பதை உணருவீர்கள். நீங்கள் விழிப்புடன் இருப்பதற்காக மற்றொரு காரியத்தையும் கூறுகிறேன். உங்களுடைய கால்கள் உங்கள் பார்வைக்கு மறைக்கப்பட்டிருந்தால் மட்டும் போதாது; பிறருடைய பார்வைக்கும் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது, நீங்கள் குனியும்போதும் உட்காரும்போதும் ஆடையின் முன்புறம் இயல்பாகவே தாழ்வாகத் தொங்கி முன்புறக் கால்களை முழுவதுமாக மறைத்துவிடும்; ஆனால், அதே நேரத்தில் கால்களின் பின்புறம் அதிகமாக வெளியே தெரியும்படியாகவே நவீன ஆடைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். பெண்கள் அமரும்போது தங்களது கால்களின் முன்பக்கம் வெளியே தெரியாதவாறு கவனமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்; ஆனால் கால்களின் பின்பகுதியும் தொடைகளின் பக்கவாட்டுப் பகுதியும் அருகில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். உங்களது ஆடை போதுமான அளவு நீளமாக இல்லாவிட்டால் மட்டுமே இத்தகைய பிரச்சினைகள் ஏற்படும். உங்களது கால்கள் எந்த வகையிலும் வெளியே தெரியாதவாறு இருக்க வேண்டுமாயின், நீங்கள் அணியும் ஆடைகள் முழங்கால்களுக்குக் கீழே எல்லாப் பக்கங்களிலும் உங்களை மறைக்கும்படி இருக்க வேண்டும்.
கீழிறங்கிய கழுத்துள்ள மேலாடைகள் அல்லது அகலமான கழுத்துள்ள மேலாடைகளை அணிவது ஆண்களின் கண்களுக்கு ஒரு மிகப்பெரிய சோதனை என்று முழு உலகத்துக்கும் நன்றாகவே தெரியும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நீங்கள் ஒரு தேவபக்தியுள்ள பெண்ணாக இருந்தால், வேண்டுமென்றே கீழிறங்கிய கழுத்துள்ள அல்லது அகலக் கழுத்துள்ள மேலாடைகளை அணிவதைக் குறித்து நீங்கள் எண்ணிக்கூடப் பார்க்க மாட்டீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நீங்கள் கவனக்குறைவாகவோ அல்லது ஏதேச்சையாகவோ இத்தகைய ஆடைகளை அணிந்துகொண்டிருக்கலாம். இது கீழிறங்கிய கழுத்துள்ள மேலாடைகளுக்கு மட்டுமின்றி, அளவுக்கு மீறிய தளர்வான (Loose) மேலாடைகளுக்கும் பொருந்தும். இத்தகைய ஆடைகளை அணிந்துகொண்டு உங்கள் கண்ணாடியின் முன் நிமிர்ந்து நின்று பார்க்கும்போது, இவை அடக்கமான ஆடைகளைப் போன்று தோன்றலாம். ஆனால் சற்றுக் குனிந்த நிலையில் பாருங்கள், உங்கள் மேலாடை உங்கள் உடலிலிருந்து சற்று விலகுவதைக் காண்பீர்கள். மறைக்கப்பட வேண்டிய உங்கள் உடலின் கவர்ச்சியான பகுதி அதன் வழியாக வெளியே தெரியும். அது உங்கள் முன் நிற்கும் எந்த ஆணின் பார்வைக்கும் வெளிப்பட்டு அவர்களைச் சோதனைக்குள்ளாக்கும்.
உங்கள் ரவிக்கையின் இரண்டு அல்லது மூன்று பொத்தான்களைத் திறந்துவிட்டு ஆடை அணியும் போதும் இவ்விதமான நிலையே உண்டாகும். உண்மையில் நீங்கள் வேண்டுமென்றே எதையும் வெளிப்படுத்தாவிட்டாலும்கூட, இது கவர்ச்சியாகவும் ஆபாசமாகவும் தெரியும். உங்களது உடல் பாகத்தை வெளிப்படுத்தி, ஒருவனுடைய உணர்வுகளைத் தூண்டி, அவனை ஏக்கத்துள்ளாக்குவதற்காகவே இத்தகைய ஆடைகள் வடிவமைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை இது அவனுக்கு ஏற்படுத்தும்.
இதைக் காட்டிலும் அவன் வேறு எவ்வாறு யோசிக்க முடியும்? வேறு எந்த நோக்கத்திற்காக உங்கள் மேலாடை அல்லது ரவிக்கையின் இரண்டு, மூன்று பொத்தான்களைத் திறந்து விட்டிருக்கிறீர்கள்? இவ்வாறு செய்தால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா? இறுக்கமாக இருந்தால் மூச்சு முட்டுகிறதா? ஆண்கள் தங்களது கட்டுமஸ்தான மார்புப் பகுதியை வெளியே காட்டும் வண்ணமாக உடை அணிவதைப் பார்த்து, நீங்களும் அவ்வாறு செய்ய முயற்சிக்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
உங்கள் வசதிக்காக ரவிக்கையின் கழுத்துப் பகுதியில் சற்று திறந்து வைப்பது முறையானதாக இருக்கலாம் அல்லது ஒரு பொத்தானை மட்டும் திறந்துவிட்டால் அது அடக்கமாகவும் இருக்கலாம் (இது ஆடையின் தன்மையைப் பொறுத்தது). ஆனால், இரண்டு அல்லது மூன்று பொத்தான்களைத் திறந்து வைப்பதற்கு என்னவிதமான காரணம் இருக்க முடியும் அல்லது அதற்கான சாத்தியம் என்ன? இது நிச்சயமாக உங்கள் வசதிக்காக அல்ல; இது ஒரு பொல்லாத உலகத்தின், பொல்லாத நாகரீகத்தைப் பின்பற்றுவது மட்டுமே ஆகும். ஆடையின் கழுத்துப் பகுதியிலுள்ள மூன்று பொத்தான்களைத் திறப்பதைக் காட்டிலும், ஒரு பொத்தானைத் திறந்தால் அது உங்களை மூச்சுமுட்ட வைக்காது. ஒரு பொத்தானைத் திறந்தாலே அது நீங்கள் எதிர்பார்க்கிற வசதியைக் காட்டிலும் அதிக வசதியைக் கொடுக்கும். உங்கள் மேலாடையின் மேல் பொத்தானைத் திறந்து வைத்திருக்கும்போது, நீங்கள் குனிய நேரிட்டால் ஆடைக்கும் உடலுக்கும் இடைவெளி ஏற்பட்டு, உடலின் பாகங்கள் வெளியே தெரியாவண்ணம் இருந்தால் அதுவே நல்லது. இது உங்களது ரவிக்கையின் தன்மை மற்றும் உடல்வாகைப் பொறுத்தது. ஆயினும், இவ்வாறு இருப்பதை அசௌகரியமாக உணர்ந்தாலோ அல்லது பாதுகாப்பின்மையாக உணர்ந்தாலோ, அனைத்துப் பொத்தான்களையும் போட்டுக்கொள்வதே சிறந்தது. இன்னும் உங்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், மேலாடையின் முதல் பொத்தானை ஒரு அங்குல அளவுக்குக் கீழே இறக்கி வைத்துத் தைத்துக்கொள்ளுங்கள்; இது உங்களுக்குச் சௌகரியத்தையும் தரும், கண்ணியமான வகையில் உடை அணிந்த வசதியையும் ஏற்படுத்தித் தரும்.
இது சிறிய காரியம்தானே என்று நீங்கள் அலட்சியமாக இருந்துவிட முடியாது. ஒரு பெரிய நெருப்பைப் பற்றவைப்பதற்கு ஒரு சிறிய பொறி மட்டுமே போதுமானது. எனவே, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரண்டு மூன்று பொத்தான்கள் திறந்திருக்கும் ஒரு மேலாடையை அணிந்திருக்கிற பெண்ணை ஓர் ஆண் காணும்போது, ஆண்களைக் கவர்ந்திழுப்பதும் அவர்களது உணர்ச்சியைத் தூண்டிவிடுவதுமே இப்பெண்ணின் நோக்கமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு அவன் வந்துவிடுவான். உங்களைக் குறித்து நீங்கள் அவனிடத்தில் உண்டுபண்ண விரும்புகிற தாக்கம் இதுதானா? இவ்வாறு நீங்கள் விரும்பவில்லையெனில், ஆடையின் பொத்தான் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பொத்தானாக இருக்கட்டும்; ஆடையின் கொக்கி உங்கள் ஆளுகையின் கீழ் இருக்கும் கொக்கியாக இருக்கட்டும்; ஆடையின் ஜிப்பின் (Zip) திறப்பு உங்கள் வசமாக இருக்கட்டும். நீங்கள் கீழிறங்கிய, தளர்வான, அகலக் கழுத்துள்ள மேலாடையை அணிந்திருக்கும்போது, ஓர் ஆணுக்கு முன்பாக நீங்கள் குனிய நேரிட்டால், அவன் அதீத நல்லொழுக்கமுள்ள ஒரு நபராக இல்லாவிட்டால், உங்களுடைய நோக்கம் அதுவாக இல்லாவிட்டாலும்கூட, உங்கள் சரீரத்தின் மறைவான அவயவத்தைப் பார்த்து அவன் மிகுந்த உணர்ச்சிக்குள்ளாகி, பாவ சோதனைக்கு ஆட்படுவான் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, உலகத்தார் செய்வது போல விசுவாசிகளாகிய நீங்கள் செய்ய முடியாது. உங்கள் மேலாடையின் கழுத்துப் பகுதி போதுமான அளவு உயரமாகவும், சரியானதாகவும் இருக்கட்டும். உங்கள் மேலாடையின் கழுத்துத் திறப்பு, உண்மையிலேயே கழுத்துத் திறப்பாகவே இருக்கட்டும்; அது மார்பகத்தின் திறப்பாகவோ, தோள்பட்டையின் திறப்பாகவோ இருக்க வேண்டாம். அப்பொழுது நீங்களும் மிகுந்த பாதுகாப்பாக இருப்பீர்கள். நன்றாகக் கவனியுங்கள்: உங்கள் மேலாடை கழுத்து வழியாகப் போடும்படியானதாக இருக்க வேண்டாம்; அப்படி இருந்தால் அதனுடைய திறப்பு பெரியதாக இருக்கும். ஆகவே, உங்கள் மேலாடையை அணிந்த பின்னர், பொத்தான்கள், கொக்கிகள், ஜிப்பால் மூடக்கூடியதாக இருக்கட்டும். அப்பொழுது அது சிறிய கழுத்துத் திறப்பைக் கொண்டதாகவும் உங்களுக்குச் சௌகரியமானதாகவும் இருக்கும்.
கையற்ற மேலாடைகள் எப்போதும் உங்களுடைய உடல் பாகங்களை அதிகமாக வெளியே தெரிய வைக்கின்றன. நீங்கள் அறிந்தபடி, உங்கள் கைகளுக்குக் கீழே உள்ள பகுதி, உங்கள் மார்பகப் பகுதிகள் அல்லது முதுகுப் பகுதிகள் ஆகியவை ஒரு ஆணின் கவனத்தை ஈர்க்கக்கூடியவை. கையற்ற மேலாடைகளை அணியும்போது இந்தப் பகுதிகள் வெளியே தெரிவதைத் தவிர்க்க இயலாது. பிறர் உங்களை எல்லாக் கோணங்களிலும், எல்லாத் திசைகளிலிருந்தும் பார்ப்பார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், கையற்ற மேலாடையின் கைப்பகுதித் திறப்புகள் பெரும்பாலும் ஒரு மனிதனை ஆடைக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கத் தூண்டும் விதத்தில் அமைந்துவிடுகின்றன. குறிப்பாக, உங்களது கைகளை உயர்த்தும்போதோ அல்லது நீட்டும்போதோ, இந்தக் கையற்ற மேலாடைகள் உடலின் மார்பகப் பகுதியை வெளிப்படுத்திவிடும்.
கையற்ற மேலாடைகளைப் போலவே, தளர்வான குட்டைக் கை ரவிக்கைக்கும் இது பொருந்தும். உங்கள் கைகளைத் தாழ்த்திப் பக்கவாட்டில் வைத்திருக்கும் வரை இது மிகவும் கண்ணியமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கைகளை உயர்த்தும்போது, ரவிக்கையின் திறப்பு பெரிதாகி ஒரு மனிதன் பார்க்கக்கூடிய அளவுக்கு வழிவகுக்கிறது. இது அவருடைய இருதயத்திற்கு ஒரு பெரிய கண்ணியாக அமைந்துவிடும். நீங்கள் ஒரு பெண் என்பதை நினைவில் கொள்ளுங்கள்; ஒரு ஆண் உங்களைப் பார்ப்பது போன்ற அதே கண்ணோட்டத்தில் உங்களால் உங்களைப் பார்க்க முடியாது. உங்களுடைய கையற்ற அல்லது தளர்வான குட்டைக் கை ரவிக்கைகளால், உங்கள் சகோதரர்களில் பலவீனமான ஒருவர் சோதிக்கப்பட்டால், அந்த ஆடையினால் நீங்கள் பெறுகிற சிறிய சௌகரியத்தையும், நாகரிகத்தையும் தவிர்த்துவிட்டு, அவருடைய நன்மைக்காக உங்கள் உடலைக் கொஞ்சம் கண்ணியமாக மறைக்கக் கூடாதா?
உடலின் அங்கங்கள் வெளியே தெரியும் அளவுக்கு கண்ணாடி இழை போன்ற மெல்லிய துணியால் ஆன ஆடைகளைப் பற்றி எதாவது கூறுவது தேவையற்ற ஒன்றதாக நமக்கு இருக்க வேண்டும். அப்பட்டமான முறையில் மிகவும் மோசமானதாக இருக்கிற இத்தகைய ஆடைகளின் வடிவமைப்பானது, ஆடை அணிவதன் நோக்கங்களை மறுத்து, உடலை மறைப்பதற்குப் பதிலாக அதை அம்பலப்படுத்துகிறது. இதை நீங்கள் உணராமல் இருக்க முடியாது. ஒரு மனிதன் இத்தகைய உடை அணிந்திருக்கிற ஒரு பெண்ணைப் பார்க்கும்போது, உங்கள் உடலைக் காட்டுவதுதான் உங்களது நோக்கம் என்பதைத் தவிர வேறு என்ன அவனால் சிந்திக்க முடியும். இது அவன் மட்டுமல்ல அனைவருமே இவ்வாறுதான் அறிந்துகொள்வார்கள்.
இன்று சபைகளில் பெண்களின் ஆடை பற்றிய தரநிலைகள் மிகவும் கீழாக உள்ளன. கிறிஸ்தவ பெண்கள் இத்தகைய மெல்லிய ஆடைகளை அணிவதைப் பார்ப்பது அசாதாரணமானது அல்ல. நான் கூறுவது உங்களைக் குற்றப்படுத்தினால் உங்கள் முதல் வேலை மனந்திரும்புவது மட்டும்தான். கண்ணாடி போன்று மிகவும் மெல்லியதாக இருக்கிற ஆடைகள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, அவற்றை இனிமேலும் அணியாமல் இருப்பதுதான் உங்களது முதல் காரியம். சன்னலிருந்து வரும் சூரிய வெளிச்சத்தில் உங்களது அங்கங்களைப் பார்க்கிற அளவுக்கு மெல்லியதாக இருக்கிற அனைத்து உடைகளையும் நீங்கள் அணியாமல் இருக்க வேண்டும். இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன்: நூல்களுக்கு இடையே மிகுந்த இடைவெளி விட்டும், ஒரே சீராக இல்லாமல் ஆங்காங்கே தடிமனாகவும் மெல்லியதாகவும் நெய்யப்படுகிற எந்தவொரு துணியால் செய்யப்படுகிற ஆடைகளை கட்டாயமாக நிராகரியுங்கள். நீங்கள் வலையினால் செய்யப்பட்ட ஆடைகளை அல்ல, நல்ல துணியால் செய்யப்பட்ட ஆடைகளை அணியுங்கள்.
உங்களுடைய நிர்வாணத்தை வெளிப்படுத்துவது போன்று மோசமானதே உங்கள் உருவத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் ஆடை அணிவதும் ஆகும். இத்தகைய இறுக்கமான ஆடைகள் பாலியல் உணர்வுகளைத் தூண்டுகின்றன என்பது ஊரறிந்த உண்மையாகும். இதை இந்த உலகம் நன்றாக அறிந்திருக்கிறது; இதை இல்லை என்று அது மறுக்கவும் செய்யாது. இறுக்கமான ஆடை அணிந்திருக்கும் ஒரு பெண், தன் உடலின் வளைவு நெளிவுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தும்போது, அதைக் காண்கிற ஓர் ஆணின் ஆன்மாவைத் துன்புறுத்துகிறாள். இத்தகைய இறுக்கமான ஆடைகள் நிர்வாணத்தையே வெளிப்படுத்துகின்றன என்று கூறுவது மிகையல்ல. இந்த உலகம் எதை இறுக்கமான ஆடை என்று அழைக்கிறது? எந்த ஆடை உடலின் அங்க வடிவமைப்பை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறதோ, அதையே இறுக்கமான ஆடை என்று அழைக்கிறது. இத்தகைய ஆடைகள் நிச்சயமாகவே தேவனின் நோக்கத்தை மீறுகின்றன. எனவே, தங்களை வேதபக்தியுள்ளவர்கள் என்று அழைத்துக்கொள்கிற ஒவ்வொரு பெண்ணும், தனது உருவமைப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தும் இறுக்கமான ஆடைகளை, 'எங்களுடைய வேதம் இதைத் தடை செய்கிறது' என்று கூறி தவிர்த்துவிட வேண்டும்.
இறுக்கமான ஸ்வெட்டர்கள், பனியன்கள், பின்னலாடைகள், உடலோடு ஒட்டிக் கொள்ளும் மெல்லிய துணியிலான ஆடைகள் ஆகியவற்றைப் பெண்கள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். உடலோடு ஒட்டிக்கொள்ளும்படி இல்லாமல் தளர்வான ஆடைகளாக இருந்தால், இவ்விதமான ஆடைகளை அணிவதில் பிரச்சினை இல்லை.
தறிகளில் நெய்யப்பட்ட துணியால் செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் சற்றுத் தடிமனான துணியால் செய்யப்பட்ட ஆடைகள் உங்களுக்குப் பொருத்தமாக இருப்பது மட்டுமின்றி, உங்கள் உடலின் வடிவத்தையும் மிகவும் சிறப்பாக மறைக்கும். குறிப்பாக, மார்பகங்கள் பெரியதாக இருக்கிற பெண்களுக்கு இத்தகைய ஆடைகள் மிகவும் பாதுகாப்பானவை என்பதை கவனத்தில் வைத்துக்கொள்வது மிகவும் சிறந்ததாகும். ஒரு பெண் தனது கவனக்குறைவால் இறுக்கமாக அணிகிற ஆடையானது, ஓர் ஆணை வரம்புமீறிய பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய வழிகளில் ஒன்றாகும். மேலும் அவள் உண்மையாகவே தனது உடலை வெளிப்படுத்துவதற்காக அணிகிறாளா அல்லது அறியாமல் மெல்லிய துணியால் ஆன இறுக்கமான ஆடைகளை அணிகிறாளா என்பது முக்கியமல்ல; ஏனெனில் இவ்விதமாக ஆடை அணிவது நிச்சயமாகவே பிறரைப் பாதிக்கும் என்பது உலகம் அறிந்த உண்மை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்வெட்டரும் இறுக்கமான பாவாடையும் அணிந்த பெண்ணைப் பார்ப்பதால் கிடைக்கிற இன்பத்தைப் பற்றி இந்த உலகம் ஒரு பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டிருந்தது. இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தபின்னரும், இப்போதும் இத்தகைய ஆடை அணியும் பெண்களைக் கண்டு ஆண்கள் உணர்ச்சிப் பெருக்கால் பாடுகிற பாடல்களுக்குப் பஞ்சமேயில்லை. மனிதனின் இயல்பு இன்றளவும் மாறவில்லை என்பதே உண்மை.
ஒரு மனிதன் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது, அவன் அவளுடைய ஆடையைப் பார்க்க வேண்டுமே தவிர, அந்த ஆடைகளுக்குள் இருக்கும் உருவத்தையும் வடிவத்தையும் பார்க்கக்கூடாது. ஸ்வெட்டர்கள், பனியன்கள் மற்றும் பின்னலாடைகள் ஆகியவற்றின் இயல்பான தன்மையே உங்கள் உடலோடு ஒட்டிக்கொண்டு, உங்களது வடிவத்தையும் உருவத்தையும் வெளிப்படுத்திக் காண்பிப்பதுதான். ஒரு பெண்ணுடைய உடலின் வடிவமும் அமைப்பும் ஆடையால் மூடப்பட்டிருந்தாலும்கூட, அவை ஓர் ஆணின் கண்களை ஈர்க்கக்கூடியவை. மேலும், ஒரு பெண் ஆடையின்றி இருக்கும்போது எவ்விதமான உணர்வுகளைத் தூண்டுகிறாளோ, அவ்விதமான இயல்புக்கு மாறான உணர்வுகளையே இறுக்கமான ஆடை அணிந்திருக்கும்போதும் தூண்டிவிடுகிறாள் என்று ஆண்களே கூறுகிறார்கள். ஒரு பெண்ணானவள் ஸ்வெட்டரோ அல்லது பனியனோ அல்லது பின்னலாடையோ அணிவது கூடவே கூடாது என்று நான் கூறவில்லை. அவை இறுக்கமாகவும் உடலமைப்பை வெளிப்படுத்தும் விதமாகவும் இல்லாவிட்டால், இவ்விதமான ஆடைகளை அணிவதில் தவறில்லை.
நான் சொல்ல வருவது என்னவென்றால், பெரும்பாலான அமெரிக்கப் பெண்கள் (இன்றைய நாட்களில் உலகம் முழுவதும் உள்ள பெண்கள்) வழக்கமாக அணியக்கூடிய ஸ்வெட்டர்கள் மற்றும் பின்னலாடையால் ஆன மேல் சட்டைகள் எப்போதும் மிகவும் இறுக்கமாகவே இருக்கின்றன. அவர்கள் தற்போது அணிகிற அல்லது வழக்கமாக அணிகிற ஆடையின் அளவைக் காட்டிலும் சற்றுப் பெரிய அளவுகளில் தங்கள் ஸ்வெட்டரை அணிந்தால் அது அவர்களுக்குச் சிறப்பாக அமையும். மிகவும் சிறிய மார்பகங்களைக் கொண்டிருக்கிற பெண்கள் தங்கள் உருவத்தை மறைக்கும் அளவுக்குத் தளர்வான ஸ்வெட்டர்களை அணிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் மார்பகங்கள் பெரிதாக இருந்தால் இது பார்ப்பதற்குச் சற்றுச் சங்கடத்தை உருவாக்கிவிடும். பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்டிருக்கிற பெண்கள், துளைகள் கொண்ட அல்லது பின்னல் துணிகளால் ஆன மேலாடைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இத்தகைய பெண்கள் ஸ்வெட்டர்களை அணியாமல் தங்கள் உருவத்தை மறைத்துக்கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே இந்தக் காரியங்களைக் குறித்து நான் இன்னும் கடினமாக வலியுறுத்த விரும்பவில்லை. இதைக் குறித்த காரியங்களில் அவர்களே விவேகத்துடன் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
பெண்கள், குறிப்பாக பெரிய மார்பகங்களைக் கொண்டிருக்கிற பெண்கள், ஓர் ஆணின் பார்வையிலிருந்து அல்லது ஓர் ஆணின் விமர்சனப் பார்வையோடு தங்களை உற்றுநோக்க வேண்டும். பெண்களின் பெரிய மார்பகங்கள் ஒரு சிறிய கணப்பொழுதில் ஆண்களின் சிந்தையைக் கவர்ந்துவிடும். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெண் தேவனைப் பிரியப்படுத்தி, ஆண்களிடம் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்றால், அவள் தனது உருவத்தையும் வடிவத்தையும் மறைக்கும் விதத்தில் ஆடை அணிந்துகொள்ள வேண்டும். எனவே, பெண்கள் நெசவுத் துணியால் ஆன, சற்று தடிமனான பொருத்தமான மேலாடைகளை அணிய வேண்டும். குளிர்காலங்களில் ஸ்வெட்டரை அணிய விரும்பினால், அதற்கு மேலாகப் பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ளலாம். இது உடலுக்குச் சற்று கதகதப்பைக் கொடுக்கும். இது பகட்டாகவோ அல்லது ஆடம்பரமாகவோ இராது என்பது உண்மைதான்; ஆயினும், இவை நமக்கு முக்கியமல்ல, கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். நான் இந்த ஆலோசனைகளை தேவனைப் பிரியப்படுத்த விரும்புகிற தேவபக்தியுள்ள பெண்களுக்காக எழுதுகிறேன்; மாறாக உலகத்தைப் பிரியப்படுத்த விரும்புகிற பெண்களுக்காக எழுதவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இறுக்கமான ஸ்வெட்டர்களுக்குப் பதிலாக இறுக்கமான ரவிக்கைகளைப் போட்டுக் கொள்வதன் மூலமாக, உங்கள் உடலின் வடிவமைப்பை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தை நீங்கள் சிறிதளவே அடைகிறீர்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். பின்னலாடைகளைக் காட்டிலும் தறியில் நெய்யப்பட்ட துணியால் ஆன ரவிக்கைகள் உங்கள் வடிவத்தைச் சிறப்பாக மறைக்கும் என்பது உண்மைதான். ஆனால், துணியால் ஆன ரவிக்கைகளும் மிகவும் இறுக்கமாக இருந்தால், அது இன்னும் மோசமான வகையில் உணர்வைத் தூண்டக்கூடியதாக இருக்கும் என்பதையும் நினைத்துக்கொள்ளுங்கள். அதிக எடை கொண்ட குண்டான பெண்கள், தங்களது எடைக்கு அல்லது உருவத்துக்கு ஏற்ற உடையை அணியாமல், தங்களது எடையைக் காட்டிலும் பத்து அல்லது பதினைந்து கிலோ குறைவாக இருப்போர் அணிகிற உடையை அணியும்போதும் இதே விதமான பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். இவர்கள் தங்களை மெலிதான உடல் வாகுடையவர்களாகக் கருதிக்கொள்வது, பெரிய அளவிலான பொருத்தமான ஆடைகளை அணிவதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. இது முட்டாள்தனமான ஒரு பெருமையைத் தவிர வேறொன்றுமில்லை. பெண்களுடைய ரவிக்கை அல்லது மேலாடையின் கீழ்ப்பக்கம் இடுப்பு வரையிலும் இறுக்கமாக இருக்கக்கூடாது. அது போதுமான அளவுக்குத் தளர்வாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும். ஓர் ஆண் உங்களைப் பார்க்கும்போது, உங்களுடைய ஆடையைப் பார்க்க வேண்டுமே தவிர, ஆடைக்குள் இருக்கிற உடலின் வடிவமைப்பைப் பார்க்கக் கூடாது. ஆகவே நீங்கள் சரியான அளவிலான ஆடையை அணிவதன் மூலமாக, உணர்ச்சிகளைத் தூண்டுகிற வண்ணமாக உங்களது உடலின் அங்க அசைவுகளையும் தோரணையையும் பிறர் காணாதவாறு தவிர்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் நான் கூறுவது என்னவென்றால், உங்களது மார்பகங்கள் பிரத்யேகமாகத் தெரியும்படியான தோரணையில் நீங்கள் நிற்க வேண்டாம். அதாவது, மார்பகங்கள் மீது உடைகளை இறுக்கமாக ஆக்குவது, இரு கரங்களையும் இடுப்பில் வைத்து நிற்பது, இரு கரங்களையும் மேலே தூக்குவது, அல்லது கொட்டாவி விடும்போது பின்பக்கமாக வளைவது போன்ற காரியங்களைச் செய்ய வேண்டாம். இது மட்டுமின்றி, அந்தக் காலத்து அரசிகள் அணிகிற ஆடைகளின் பாணியிலான, அதாவது மார்பு முதல் இடுப்பு வரையிலும் மிகவும் இறுக்கமாகவும் அதற்குக் கீழே மிகவும் அகலமாகவும் இருக்கிற ஆடைகளை அணிவதையும் நீங்கள் தவிர்த்துவிட வேண்டும்.
இவ்விதமான ஆடைகள் பெண்களின் பிற அழகைக் காட்டிலும் மார்பழகையே அதிகமாகக் காட்டும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பெண்ணின் எத்தகைய காட்சிகளால் ஒரு மனிதன் கவர்ந்திழுக்கப்படுகிறான் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். மேலும் இத்தகைய காட்சிகளால் அவனது இதயமோ அல்லது கற்பனையோ தவறான வழியில் கொண்டு செல்லப்படுவதற்குச் சில விநாடிகள் மட்டுமே போதுமானது என்பதை நான் மீண்டும் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நாம் ஒரு விவாதத்திற்குரிய காரியத்தைப் பற்றிப் பேசப் போகிறோம். இந்தக் காரியத்தைக் குறித்துப் பல்வேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன. இத்தகைய கருத்து மோதல்களால் சபைகள், குடும்பங்கள் மற்றும் நட்பு வட்டாரங்களுக்குள் பல பிரிவினைகள் தோன்றியுள்ளன. ஆண், பெண் ஆடைகளைப் பற்றிய வரலாற்றுப் பின்னணியைப் பார்க்கும்போது, நமது கலாச்சாரத்தில் ஆண்கள் முழுநீளக் கால்சட்டையையும் (Pants), பெண்கள் கழுத்து முதல் பாதம் வரையிலான முழுநீள ஆடையையும் அணிவதே தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்து வந்துள்ளது எனலாம்.
இது விவாதத்திற்கு அப்பாற்பட்ட, மறுக்க முடியாத ஒரு உண்மையாகும். இவ்வுண்மையைப் பழங்காலப் பழமொழி ஒன்று தெளிவுபடுத்துகிறது. “இல்லத்தை நடத்தும் மனைவி, குடும்பத்துக்குள் முழுநீளக் கால்சட்டையை அணிந்திருக்கிறாள்” (She wears the pants in the family) என்பதே அப்பழமொழி. இப்பழமொழியில் ஒரு உண்மை பொதிந்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இருந்து வருகிற “பெண்ணிய விடுதலை இயக்கம்”, பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்களே என்பதை அடையாளப்படுத்துவதற்காக, எல்லாப் பெண்களையும் முழுநீளக் கால்சட்டைகளை அணிந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்று போராடி வருகிறது. தேவன் பெண்களுக்கு நியமித்த, ‘ஆண்களுக்குக் கீழ்ப்படிந்திருத்தல்’ என்னும் ஸ்தானத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காகவே இது செயல்படுகிறது. மேலும், ஓர் ஆண் என்ன செய்கிறானோ, அவை எல்லாவற்றையும் பெண்களையும் செய்ய வலியுறுத்துவதன் வாயிலாக, பெண்களுக்குச் சம உரிமை என்னும் வாய்ப்பை வழங்கவும் முயன்று வருகிறது.
இந்த இயக்கத்தின் ஆவி பெண்களின் சிந்தையையும் பற்றிக்கொண்டது. இதனால்தான் ஆண்களின் உடையாகிய முழுநீளக் கால்சட்டைகளைப் பெண்களும் அணிந்துகொள்வதில் மும்முரம் காட்டுகிறார்கள். இந்த உலகம் என்ன செய்கிறதோ, அதையே திருச்சபையும் பின்பற்றி வருகிறது. தேவபக்தியுள்ள முன்னோர்களும், வேதவசனத்தில் வைராக்கியம் காட்டிய திருச்சபைத் தலைவர்களும், தங்களது வாழ்க்கையில் மிகக் குறைந்த அளவே இந்த உலக முறைமைகளுக்கு இடம் கொடுத்திருந்த காரணத்தால், “பெண்கள் ஆண்களின் ஆடையாகிய முழுநீளக் கால்சட்டையை அணியக்கூடாது” என்னும் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள். ஆடை பற்றிய வரலாற்றுப் பின்னணி எதையும் அறியாத இளந்தலைமுறைக் கிறிஸ்தவர்கள், தங்களது தேவபக்தியுள்ள முன்னோர்களின் நிலைப்பாட்டை அர்த்தமற்றது என்று கருதி, அதைக் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதுமட்டுமின்றி, தாங்கள் அணிகிற முழுநீளக் கால்சட்டைகள் பெண்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டவை அன்றி, ஆண்களுக்காக உருவாக்கப்பட்டவை அல்ல என்னும் நிலைப்பாட்டையும் கொண்டிருக்கிறார்கள்.
மறுபுறம், தேவன் ஆதாமுக்கு ஒருவிதமான ஆடையையோ, ஏவாளுக்கு வேறுவிதமான ஆடையையோ உருவாக்கவில்லை; இருவருக்கும் அங்கி (Tunic) போன்ற ஒரேவிதமான ஆடையையே உருவாக்கினார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆயினும், “புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்” (உபாகமம் 22:5) என்று வேதம் ஒரே ஆடையை ஆண்களும் பெண்களும் அணியக்கூடாது என்று உறுதியுடன் கூறுகிறது. வரலாற்று ரீதியாக நாம் பார்க்கும்போது, உலக அளவில் பொதுவாக ஆண்களே முழுநீளக் கால்சட்டைகளை அணிந்து வந்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. இன்றைக்குக் கலாச்சாரம் மாறிவிட்டது, எனவே இத்தகைய முழுநீளக் கால்சட்டைகளைப் பெண்களும் அணியலாம் என்று வலியுறுத்தப்படுகிறது.
ஆயினும், கலாச்சாரத்தை மாற்றியமைப்பதில் மாயையை விரும்பும் அந்தகார சக்திகளுக்குப் பெரும்பங்கு இருக்கிறது என்பது உண்மையாகும். இதைக் கருத்தில் கொள்ளும்போது, தீய சக்திகளால் ஏற்படுகிற இத்தகைய மாற்றம் தேவனால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆடைகளில் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள் தேவனுக்கு அருவருப்பானவை என்றே நம்மால் கூறமுடியும். “பெண்கள் ஓர் ஆணுக்குரிய (அல்லது அதைப் போன்ற) ஆடைகளை அணியக் கூடாது... ஏனெனில் அவ்வாறு செய்கிற அனைத்தும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவை” என்று வேதவசனம் கூறுகிறது. ஆகவே, இதற்கு மேல் நான் வேறு எதுவும் கூற விரும்பவில்லை. இந்தக் கட்டுரையின் நோக்கமே சர்ச்சையை உண்டாக்க வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, பிரச்சினைகளைச் சுமூகமாகத் தீர்ப்பதே ஆகும். பெண்கள் முழுநீளக் கால்சட்டைகளை அணிவது தேவனுக்கு முன்பாகப் பாவம் என்று நான் கூறவரவில்லை. மாறாக, அதை அணிந்திருக்கிற ஒரு பெண்ணைப் பார்க்கிற ஓர் ஆணின் கண்களில் அது எத்தகைய மாற்றத்தை உண்டுபண்ணுகிறது, எத்தகைய இச்சையைத் தூண்டுகிறது என்பதையே நான் கேட்க விரும்புகிறேன்.
முதலாவதாக, முழுநீளக் கால்சட்டைகள் அதனை அணியும் பெண்களின் இடுப்புக்குக் கீழேயுள்ள சரீரத்தின் வடிவத்தை வெளிப்படுத்திக் காட்டும் தன்மையுடையவை. பொதுவாக, பெண்கள் அடக்கமான உடைகள் வேண்டும் என்று வாதிடுகிறார்கள். ஆனால், அத்தகைய ஆடைகளை யார் அணிகிறார்கள்? முழுநீளக் கால்சட்டைகளின் தன்மையே சரீர உருவத்தை அப்பட்டமாகக் காண்பிக்கக்கூடியதாக இருக்கிறபடியால், அதை எப்படி அடக்கமான அல்லது கண்ணியமான முறையில் உருவாக்க முடியும்? இது மிகக் கடினமான ஒன்றாகும். குறிப்பாகச் சற்றே பருமனாக இருக்கிற பெண்களுக்கு இத்தகைய ஆடைகளை உருவாக்குவது இன்னும் கடினமானது. உண்மை என்னவெனில், உடலோடு இறுக்கமாக இல்லாமல் சற்றுத் தளர்வாக இருக்கிற முழுநீளக் கால்சட்டைகளை அணிகிற பெண்களைப் பார்ப்பதே அரிதான ஒன்றாகிவிட்டது.
ஆண்கள் தளர்வாகவும் கண்ணியமான முறையிலும் முழுநீளக் கால்சட்டைகளை அணியும்போது, பெண்கள் மட்டும் இடுப்பு முதல் கணுக்கால் வரை உடலோடு இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும்படியான கால்சட்டைகளை அணிவது ஏன்? ஏனெனில், பெண்களுக்கான இந்தப் பாணியிலான உடைகளை உருவாக்கும்படி ஊக்குவிப்பவன் இந்த உலகத்தின் அதிபதியாகிய பிசாசு. அவனுக்குக் கீழாக இருக்கிற வணிகர்களுக்கு அவர்களுடைய இலாபமும் சம்பாத்தியமும் மட்டுமே முக்கியம். ஒரு பெண்ணின் இடுப்புக்குக் கீழாக உள்ள பகுதியை முன்னும் பின்னும் காண்பிப்பதும், தொடைமுதல் கால் வரையிலான வடிவத்தை வெளிப்படுத்துவதும் ஓர் ஆணின் இதயத்திற்கு ஒரு கண்ணியாக அமையும் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, ஒரு பெண் தனது உடலின் அங்கங்களை எல்லா நேரங்களிலும் கவனத்துடன் மறைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மறைத்துக் கொள்வதற்கு நீளமான பாவாடை அல்லது நீளமான ஒரு கவுன் (Gown) அணிவது மிகவும் சிறப்பானதாகும். இந்த வகை ஆடைகளே ஒரு பெண்ணின் உடல் அவயவங்களைச் சரியான விதத்தில் மறைப்பதற்கு ஏற்ற ஆடைகளாகும்.
சில பெண்கள், தாங்கள் அணிகிற முழுநீளக் கால்சட்டை தோலோடு ஒட்டி இறுக்கமாக இல்லாமல் சற்றுத் தளர்வாக இருந்தால், அது ஒரு கண்ணியமான ஆடை என்று நினைக்கிறார்கள். இத்தகைய கால்சட்டைகள் உங்களுடைய உடலோடு ஒட்டிக்கொண்டிராமல் போதுமான அளவு இடைவெளியுடன் இருந்தால் நல்லதுதான். ஆயினும், இத்தகைய கால்சட்டைகள் உங்கள் கால்கள் மற்றும் இடுப்புகளின் வடிவத்தைக் காட்டுகிற இயல்பைக் கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இப்படிக் காட்டுவதுதான் இந்த ஆடையின் இயல்பே. சரீர வடிவத்தைக் காட்டாத முழுநீளக் கால்சட்டைகளை உருவாக்குவது சாத்தியமற்றது. நீங்கள் எவ்வளவு தளர்வாக முழுநீளக் கால்சட்டைகளை அணிந்திருந்தாலும், ஏதாவது ஒரு சூழ்நிலையில் குனிய நேரிட்டால், மற்ற இறுக்கமான ஆடைகளைப் போலவே இதுவும் உங்கள் பின்பகுதியின் உருவத்தைக் காட்டிவிடும். நீங்கள் மெலிதான உடல் அமைப்புடன் இருந்தால் நீங்கள் குனிந்தாலும் பிரச்சினை இல்லை; அது பின்பக்கத்தின் வடிவத்தைக் காட்டாது. ஆனால் அதேவேளையில், நீங்கள் சற்றே பருமனான ஒரு பெண்மணியாக இருந்தால், அது பார்ப்பவரின் புருவத்தை உயர்த்தச் செய்யும். ஆகவே சிறந்த வழி என்னவென்றால், முழுநீளக் கால்சட்டைகள் தளர்வாக இருந்தாலும் அவற்றை அணியாமல் தவிர்த்துவிடுவதே ஆகும்.
ஒருவேளை உங்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் (அதாவது, முழுநீளக் கால்சட்டை அணிந்திருக்கிற ஓர் ஆணின் உடலமைப்பைப் பார்க்கும் ஒரு பெண்ணுக்கு, அது எவ்விதப் பாதிப்பையும் உண்டாக்காது என்றாலும்), இத்தகைய ஆடை அணிந்திருக்கிற ஒரு பெண்ணின் உடல் வடிவமைப்பைப் பார்க்கிற ஓர் ஆணுக்கு அது ஒருவிதமான இச்சையைத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஓர் ஆணின் தொடுதல் ஒரு பெண்ணுக்கு எவ்விதமான கிளர்ச்சியை உண்டுபண்ணுமோ, அதேவிதமான தூண்டுதலை ஓர் ஆணுக்கு உண்டுபண்ணுவதற்கு ஒரு பெண்ணின் பார்வையே போதுமானது. தாவீது மற்றும் பத்சேபாளைக் குறித்த சம்பவத்தில் இது உண்மையாயிருந்தது என வேதாகமம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது. உண்மையை மறைக்காத எந்தவொரு நேர்மையான மனிதனும் இதை ஒப்புக்கொள்வான். ஆகவே பெண்களாகிய நீங்கள், ஆண்களின் இத்தகைய மனோபாவத்தை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதை உங்களுடைய அனுபவத்திலிருந்து உங்களால் அறிந்துகொள்ள முடியாது. உங்களது இடுப்பின் பின்பக்கமும் தொடைகளும் ஓர் ஆணின் இதயத்தில் ஆபாசமான இச்சையைத் தூண்டிவிடுவதற்குப் போதுமானவை. நீங்கள் அணிகிற முழுநீளக் கால்சட்டைகள் உங்களுடைய இந்த அவயவங்களின் வடிவத்தை நன்றாகக் காட்டும் வேலையைச் செய்கின்றன.
பெண்கள் முழுநீளக் கால்சட்டை அணிவது தவறு என்று சிலர் நம்புகிறார்கள். ஆயினும் இவ்வாறு கூறுகிறவர்களே, தங்கள் வீட்டுப் பெண்களுக்கு முழங்கால் வரையிலான பாவாடைகளை அணிந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்தி, ஆண்கள் செய்யக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஊக்கமளிக்கிறார்கள். இவ்வாறு உற்சாகப்படுத்துகிறவர்களைப் பார்த்து ஒரேயொரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்: இத்தகைய ஆடைகளை அணிந்திருக்கும்போது அவர்கள் கண்ணியமாகத் தோன்றுகிறார்களா, இல்லையா? இதற்கான பதில் பல காரியங்களைச் சார்ந்திருக்கலாம். இத்தகைய ஆடைகள் தளர்வான பாவாடைகளைப் போலத் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, நீளமாக இருந்தால் அவை பாவாடையைப் போலவே கண்ணியமான உடையாக இருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய ஆடைகளில் பல, ஆண்களின் முழுநீளக் கால்சட்டைகளைப் போலவோ அல்லது அரைக்கால் சட்டைகளைப் (Shorts) போலவோதான் இருக்கின்றன. ஆனால், இத்தகைய ஆடைகள் போதுமான அளவு நீளமாகவும், தளர்வாகவும், உடலை நன்றாக மூடி மறைத்து வைத்துக்கொள்ளும் வகையிலும் அமைந்திருந்தால், இவற்றை நிச்சயமாகவே நீளமான பாவாடைகளைப் போன்றே நல்ல உடையாக ஏற்றுக்கொள்ளலாம்.
விசுவாசப் பெண்கள் ஆடை அணிகிற காரியத்தில் நாம் இதுவரை கொடுத்த ஆலோசனைகள் போதுமானவை. அடுத்து, இது தொடர்பாக அவர்கள் எழுப்புகிற சில ஆட்சேபனைகளுக்கும் (சந்தேகங்களுக்கும்) எதிர்கேள்விகளுக்கும் நாம் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும்.
1. முதலாவது எதிர்கேள்வி அல்லது ஆட்சேபனை: > “பெண்களுடைய ஆடை விஷயத்தில், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென இதுபோன்ற கடுமையான நிபந்தனைகளைக் கொண்ட ஆலோசனைகளைப் பெண்களுக்குப் பரிந்துரைக்க இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?”
பதில்: நாம் ஏதேன் தோட்டத்தில் பாவம் இல்லாதவர்களாக வாழ்ந்து கொண்டிருந்தால், நீங்கள் விரும்பியபடி உடை உடுத்திக்கொள்ளலாம் அல்லது உடுத்தாமலும் இருக்கலாம். அவ்வாறு இருப்பது யாரையும் காயப்படுத்தாது. ஆனால், இந்த உலகில் உங்களால் அவ்வாறு வாழ முடியாது. இங்கே உங்கள் விருப்பப்படி வாழ்ந்து, உங்கள் விருப்பப்படி ஆடை அணிந்தால், நீங்கள் பாவத்தின் அலையை இன்னும் அதிகரிக்க மட்டுமே காரணமாக இருப்பீர்கள். நான் இந்த ஆலோசனைகளை, சரியான ஆடை அணிய வேண்டும் என்று விரும்புகிற தேவபக்தியுள்ள பெண்களுக்காக எழுதுகிறேன். ஏனெனில், அவர்கள் சரியான விதத்தில் ஆடை அணிய வேண்டும் என்று விரும்புகிறார்கள்; ஆனால் ஓர் ஆணிடமிருந்து சரியான சில ஆலோசனைகள் அல்லது அறிவுரைகள் இல்லாமல் அவர்களால் சரியானதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை.
மேலும், ஒரு பெண் அணியும் ஆடைகளைப் பார்க்கும் ஆண்களின் மனதில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி, ஓர் ஆண்மகனால் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை இந்தக் கட்டுரையில் உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். நல்விதமாக ஆடை அணிய வேண்டும் என்ற விருப்பத்துடன் இருக்கிற தேவபக்தியுள்ள பெண்கள் இத்தகைய அறிவுறுத்தலைப் பெற்றுக்கொள்வதில் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவார்கள் என்று நான் நினைக்கிறேன். பொதுவாக, 'எந்த விலை கொடுத்தாயினும் சரியானதைச் செய்யக்கூடாது' என்று கங்கணம் கட்டிக்கொண்டு, சரியான உடை உடுத்த விரும்பாத பெண்களே, "இத்தகைய விதிமுறைகள் அல்லது நிபந்தனைகள் எங்களுக்குத் தேவையில்லை" என்னும் முழக்கத்தை எழுப்புகிறார்கள்.
2. இரண்டாவது எதிர்கேள்வி அல்லது ஆட்சேபனை: > “பெண்களுக்கான ஆடை என்பது ஓர் அற்ப காரியம், இவ்வளவு பெரிய அளவில் அறிவுரை கூறுவதற்கு ஏற்ப இது தகுதியானது அல்ல. இது வெறும் வெளிப்புறமான காரியம்; நாங்கள் இருதயம் தொடர்பான முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்த விரும்புகிறோம்.”
பதில்: ஆடை அணிதல் என்பது ஒரு வெளிப்புற விஷயமாக இருக்கலாம்; ஆனால் இது சிறிய காரியமல்ல. வேதத்திலுள்ள கீழ்க்கண்ட வசனங்களை நீங்கள் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்” (மத்தேயு 5:28-29).
இந்த வசனங்களைப் படித்த பின்னரும், இது ஒரு சிறிய விஷயம் என்று நீங்கள் வாதிடுகிறீர்களா? உங்களுடைய கூற்றுப்படி இதையே ஒரு சிறிய காரியம் என்றே வைத்துக்கொள்வோம். அவ்வாறாயின், இந்த வசனங்கள் கூறும் கருத்தை உங்களால் எளிதாகக் கடந்து செல்லவோ அல்லது புறக்கணிக்கவோ முடியுமா? அவ்வாறு முடியாதே. ஏனென்றால், “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்” (லூக்கா 16:10). சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தியதற்காகக் கர்த்தர் யூதர்களைக் கடிந்துகொள்ளவில்லை; மாறாக, அவர்கள் முக்கியமான காரியங்களை அலட்சியப்படுத்தியதாலேயே அவர்களைக் கடிந்துகொண்டார்.
3. மூன்றாவது எதிர்கேள்வி அல்லது ஆட்சேபனை: > “பெண்களை இச்சையோடு பார்க்கிற எந்த ஓர் ஆணும் நிச்சயமாகக் கெட்டவனாகத்தான் இருக்க வேண்டும், அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?”
பதில்: ஆம், ஆண்கள் கெட்டவர்கள்தான். ஆண்கள் வக்கிரமான சுபாவம் கொண்டவர்கள் என்னும் உண்மையை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். இது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும். ஆண்கள் மட்டுமின்றி, நான் மற்றும் நீங்கள் உட்பட எல்லா மனிதர்களும் பாவிகளே. தேவனால் படைக்கப்பட்ட நமது இருதயத்தின் தூய்மையை நாம் இழந்துவிட்டோம். மேலும், நமது இருதயங்கள் இப்பொழுது பாவ சுபாவத்தையே கொண்டுள்ளன. குறிப்பாக, சிற்றின்ப மோகத்தால் நமது இருதயம் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே, பாவம் நம்மை எளிதில் வீழ்த்திவிடும். பாவம் நம்மைச் சுற்றி நெருங்கிக்கொண்டிருக்கிறது (எபிரெயர் 12:1).
ஆயினும் ஒரு காரியத்தைப் புரிந்துகொள்ளுங்கள். மனிதர்கள் அனைவரும் பாவம் செய்யக்கூடாதபடி இருந்த நமது அசலான தூய்மையிலிருந்து நெறிதவறிப் போயிருக்கிறபடியினால், பெண்கள் தொடர்பான காரியங்களில் அனைத்து மனிதர்களின் காம உணர்ச்சிகளும் (மோசமான வழியில் மாறிய சிலரைத் தவிர) ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. எல்லா ஆண்களின் பலவீனங்களும் ஒரே மாதிரியானவையாகவே இருக்கின்றன அல்லது அவர்களால் எளிதாகக் கடந்து செல்லக்கூடாத நிலையிலேயே அவர்கள் அனைவருடைய எண்ண அலைகளும் இருக்கின்றன என்னும் உண்மையை நான் உங்களிடத்தில் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். ஆண்கள் எல்லாரும் நல்லவர்கள் என்று கூறி உங்களுடைய குற்றச்சாட்டிலிருந்து நான் தப்பிக்க விரும்பவில்லை.
நீங்கள் சரியான விதத்தில் உடை அணிந்து, சரியான விதத்தில் நடந்துகொண்டு, சரியான மனிதர்களுடன், சரியான சூழ்நிலைகளில் இருக்கப் பழகிக்கொண்டால், நீங்கள் சங்கடமாகவோ அல்லது அசௌகரியமாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும். ஆயினும், சிறந்த மனிதர்களின் முன்னிலையில்கூட நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய சந்தர்ப்பங்களே அதிகமாக இருக்கின்றன. ஏனெனில் இவர்கள் தேவபக்தியுள்ளவர்களாக இருந்தாலும், “தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருந்தாலும்” (கலாத்தியர் 5:24), வேதவசனத்திற்குப் புறம்பான ஆசை இச்சைகளின் மீதுள்ள ஈடுபாட்டை வெறுத்திருந்தாலும், அவர்களுடைய உள்ளத்தில் பாவ சுபாவங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. தேவபக்தியுள்ள மனிதர்களிடத்திலும், “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும்” தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறது (கலாத்தியர் 5:17).
ஆண்கள் தங்களது மாம்ச இச்சைகளை அழிக்கக் கடுமையாக முயற்சி செய்யலாம்; ஆயினும் அது அவ்வளவு எளிதான காரியமன்று. இத்தகைய உணர்வுகளை அழிப்பதற்காக மிகவும் நேர்மையான முறையிலும், விடாமுயற்சியுடனும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் கூட முழுமையாக வெற்றிகரமாக அமையவில்லை என்பதே பலரது அனுபவங்களின் வாயிலாக வெளிப்படும் யதார்த்தமான உண்மை. வரலாற்று உண்மையும் இதுவே; இத்தகைய அனுபவங்களைக் கடந்துவந்த பலர் இதற்குச் சான்றளித்திருக்கிறார்கள். பெரும்பாலான பக்தியுள்ள சிறந்த ஆண்களும்கூட இத்தகைய மாம்ச இச்சைகளால் வெல்லப்பட வாய்ப்புள்ளது. “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போலப் பூமியில் ஒருவனும் இல்லை என்றார்” (யோபு 1:8). அதே யோபு, “என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” (யோபு 31:1) என்கிறார். மிகச் சிறந்த தேவமனிதனாகிய தாவீதுகூட பத்சேபாளின் வசீகரத்தால் தோற்கடிக்கப்பட்டான். மேலும், இத்தகைய மாம்ச இச்சைகள், “வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்” (1 கொரிந்தியர் 7:2) என்னும் தேவனுடைய பொதுவான சட்டத்தை அழித்துப்போட்டுவிடக் கூடாது.
திருமணமானவர்கள் உட்பட தேவபக்தியுள்ள ஆண்கள், பெண்களை நேரடியாகக் கண்டோ, அல்லது சிந்தனையிலோ தார்மீக ஒழுக்க நெறிகளுக்கு மாறாக ஏற்படக்கூடிய மாம்ச இச்சை என்னும் உணர்வுகளுக்கு எதிராக மிகவும் கடினமான போராட்டத்தையே கொண்டிருந்தார்கள் என்பதை அவர்களுடைய அனுபவங்களும் வரலாறும் இணைந்து சான்றளிக்கின்றன. ஒளிவுமறைவில்லாத திறந்த கண்களுடன் நம்முடைய வாழ்க்கையைக் கடந்து செல்வோமாயின், தேவபக்தியுள்ள மற்றும் தேவபக்தியற்றோரின் குடும்ப வாழ்க்கையில் இத்தகைய இச்சைகளின் மூலம் விரும்பத்தகாத முடிவுகள் ஏற்பட்டு, விரக்தியையும் வெறுமையையும் அனுபவிப்பதைத் தெளிவாகக் கண்டுகொள்ள முடியும். ஆகவேதான், “ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்” (1 கொரிந்தியர் 7:9) என்னும் வசனத்திற்கு ஏற்றபடி, இது சில தம்பதியினர் தங்களது இல்லற வாழ்க்கையில் நுழைய வழிவகுத்தது. சிலர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட திருமண வாழ்வின் ஊடாக இதற்கான வழியைக் கண்டுகொண்டனர். ஆயினும் இது முழுமையான தீர்வாக அமைவதில்லை. நீங்கள் இத்தகைய நபர்கள்மீது பரிதாபப்பட விரும்பினாலும், அல்லது கோபப்பட விரும்பினாலும், அல்லது இரண்டையும் செய்ய விரும்பினாலும், பல தம்பதியினர் இத்தகைய காரியங்களில் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மையாகும். மாம்ச இச்சையோடு போராடிக்கொண்டிருக்கிற ஒரு மனிதன், அவன் உண்மையாகவே தன் நிலையை உணர்ந்தவனாக இருந்தாலும், தனக்கான தேவைகளைத் திருமண பந்தத்திற்குள் தீர்த்துக்கொண்டாலும், மாம்ச உணர்ச்சிகளுக்கு எதிரான போராட்டத்தில் கசப்பான அனுபவத்தையே சந்தித்திருக்கிறான் என்பதும் மற்றோர் உண்மையாகும்.
இந்தப் போர் மிகவும் கடினமானது. ஆவிக்குரிய ரீதியில் மிகவும் வலிமையான மனிதனாயினும், தன்னுடைய ஆசையைத் தன் குடும்பத்திற்குள் அனுபவித்து மகிழ்வதை நிறைவேற்றத் தவறுகிற ஒரு மனிதராக இருப்பாராகில், தனது மனதின் விருப்பத்தையெல்லாம் தன்னுடைய வழியில் நிறைவேற்றுகிற மிகவும் பலவீனமான ஒரு மனிதரைக் காட்டிலும் போர்க்களத்தில் மிகவும் மோசமான தோல்வியைச் சந்திக்கக்கூடும். தாவீது ஒரு தேவனுடைய மனிதனாக விளங்கினான் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். பழைய ஏற்பாட்டு வரலாறு முழுவதிலும் தேவபக்தியுள்ள மனிதன் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதற்கான ஓர் அளவுகோலாக விளங்கினான். தாவீதினுடைய சந்ததியினரை தேவன் நியாயந்தீர்ப்பதற்காக இவனுடைய தேவபக்தியையே முன்னுதாரணமாகப் பயன்படுத்தினார். ஆயினும் அவன் பலதார மணம் புரிந்ததற்கான காரணம் என்னவெனில், எல்லா மனிதருக்கும் இருக்கிற ஆசையையும் விருப்பத்தையும் ஒரே மனைவியினிடத்தில் திருப்தி அடையாமல் இருந்ததே ஆகும். இந்தக் காரியத்தில் ஓர் ஆவிக்குரிய பலமான மனிதனுக்கு இருக்க வேண்டிய திருப்தி அவனுக்கு இல்லாமல் போனதால், அவனும் ஒரு பலவீனமான மனிதனாகவே காணப்பட்டான்.
நாம் அந்தப் பழைய கேள்விக்கு நேராக மீண்டும் நம்முடைய கவனத்தைத் திருப்புவோம். ஆண்கள் ஒழுக்கக்கேடானவர்களா இல்லையா என்பது நாம் இதுவரை சிந்தித்துக்கொண்டிருக்கும் கருத்துடன் தொடர்பில்லாதது ஆகும். ஆண்களுடைய விருப்பங்கள், எல்லாருக்கும் இருக்க வேண்டிய சராசரியைக் காட்டிலும் அல்லது சரியானதைக் காட்டிலும் எவ்வளவு தூரமாக இருந்தாலும், அவன் பாவத்தினால் வரக்கூடிய விளைவுகளுக்கு அப்பாற்பட்டவனாக இருந்தாலும், அவனுடைய குணாதிசயத்தை அளவிடுவது என்பது மிகவும் கடினமான காரியமாகும். இது எத்தகைய வேறுபாட்டை அவனில் உருவாக்கும்? அவன் எப்படி இருக்கிறான் அல்லது அவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்னும் உண்மையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதோடு தொடர்புடையது ஆகும். ஆண்கள் பலவீனமானவர்கள் என்பதும், அவர்கள் பெண்களின் உருவத்தையோ அல்லது மறைவான அவயவங்களையோ பார்ப்பதன் வாயிலாக உணர்வுபூர்வமாகத் தூண்டப்படுகிறார்கள் என்பதும் யதார்த்தமான உண்மையாகும். விதிவிலக்காக சில மனிதர்கள் ஆவிக்குரிய வலிமையுடையவர்களாகவும், தங்களது சொந்த வாழ்க்கையிலே தமது ஆசைகளைத் திருப்தியாக்கிக்கொள்கிறவர்களாகவும், நீங்கள் நினைத்தாலும் உணர்ச்சிவசப்படாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சிலருடைய வாழ்க்கையில் இது உண்மையாக இருந்தாலும்கூட, பொதுவான ஆண்கள் பலவீனமானவர்களாகவும், பாவத்தில் எளிதாக விழுந்துவிடக்கூடியவர்களாகவுமே இருக்கிறார்கள்.
சோதனைக்கு ஆளாகாத ஒரு பலமான மனிதனுடன் இருப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் பலவீனமான மனிதர்களைப் பொறுத்தவரை நீங்கள் அன்பினால் தூண்டப்படுகிற கடமைக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும். “அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்... ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்” (ரோமர் 15:1; 14:13).
4. நான்காவது எதிர்கேள்வி அல்லது ஆட்சேபனை: > “ஓர் ஆண் பெண்களாகிய எங்களை இச்சையோடு பார்த்தால் அது அவனுடைய பாவமேயன்றி, அது எங்களுடைய பாவமல்லவே?”
பதில்: “போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே... மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது, பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்” (ரோமர் 14:15, 21). பத்சேபாளின் அறியாமையால் அவள் தன் உடலை ஏதேச்சையாகக் காண்பித்ததால், தாவீது பலவீனமாக்கப்பட்டார்; தடுமாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டார். ஆகவே, உங்களது பெண்மையின் அழகைக் காட்டும் ஆடை உங்களது சகோதரர்களுக்கும் அதேவிதமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தக் கட்டுரையைப் படித்த பிறகும், இந்த உண்மை எனக்குத் தெரியாது என்று உங்களால் சாக்குப்போக்கு சொல்ல முடியாது. “ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” (யாக்கோபு 4:17) என்று அப்போஸ்தலன் கூறியிருக்கிறார்.
உங்களது ஆடை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைப் பற்றி நீங்கள் முற்றிலும் அறியாதவராக இருந்தால், உங்கள் விருப்பப்படி நீங்கள் உடை அணியலாம்; அது பாவமன்று. ஆனால், அது எத்தகைய விளைவுகளை உண்டாக்குகிறது என்று நீங்கள் அறிந்துவிட்டால், நீங்கள் முன்போல இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் அவனுடைய பாவத்திற்கு அவனே முழுவதும் பொறுப்பாளியாக இருக்கிறான். ஆனால், நீங்கள் வேண்டுமென்றே அவனது உணர்வுகளைத் தூண்டிவிட்டால், அவனது பாவத்திற்கு நீங்களும் நிச்சயமாக ஏதோவொரு வகையில் பொறுப்பாளியாவீர்கள்.
கர்த்தர் எசேக்கியேலிடம் இவ்விதமாகச் சொன்னார்: “நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்தில் இராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்” (எசேக்கியேல் 33:8). இவ்வசனத்தில் துன்மார்க்கன் தனது பாவத்திற்கு அவனே முழுப் பொறுப்பாளியாக இருக்கிறான்; அதற்காக அவன் மரணமடைவான். ஆனால் இங்கே காவலாளியும் பொறுப்பாக்கப்படுகிறான். ஏனெனில், காவலாளி தன்னுடைய சக மனிதனை அவனது பாவத்திலிருந்து திருப்புவதற்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யத் தவறிவிட்டான். நீங்கள் இன்னொருவரின் வழியில் இடறுதலுக்கேதுவான கல்லைப் போட்டு, மெய்யாகவே அவனைப் பாவம் செய்யத் தூண்டினால், நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்?
5. ஐந்தாவது எதிர்கேள்வி அல்லது ஆட்சேபனை: > “நீங்கள் சொல்லுகிற அனைத்து அறிவுரைகளையும் நான் பின்பற்ற வேண்டியிருந்தால், என்னுடைய அலமாரியில் இருக்கிற அனைத்து உடைகளையும் தூக்கிப் போட்டுவிட்டு, எல்லாம் புதியதான ஆடைகளை வாங்க வேண்டியிருக்கிறதே! இதற்கு நான் என்ன செய்வது? என்னால் ஒரே நேரத்தில் அவ்வளவு பணம் கொடுத்து வாங்க முடியாதே?”
பதில்: என்னுடைய அருமையான சகோதரிகளே, ஒரு காரியம் உங்களைப் பாவத்திற்கு நேராக இழுக்குமானால் அதை நீங்கள் செய்யாமல் இருப்பதே நலம். அதற்காக நீங்கள் எந்தக் கிரயத்தையும் கொடுக்கலாம். நீங்கள் ஒரு மெய்யான கிறிஸ்தவராக இருந்தால், எல்லா பாவங்களையும் விட்டுவிட்டு நீங்கள் கிறிஸ்துவிடம் வந்திருக்கிறீர்கள். ஆகவே, இப்பொழுது எந்த விலை கொடுத்தாயினும் கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்றுவேன் என்னும் தீர்மானத்தை எடுங்கள். கர்த்தருடைய முழு விருப்பத்தையும் சரியானதையும் செய்ய உங்களுக்கு விருப்பம் இருந்தால், அவர் உங்களுக்கு ஒரு வழியைக் காட்டுவார்; இல்லையெனில் இத்தகைய வழி ஒன்றைக் காண்பியுங்கள் என்று அவருடைய சமூகத்தில் கதறி அழுங்கள். மேலும், நீங்கள் பாவம் செய்யவோ அல்லது மற்றவர்களைப் பாவம் செய்யத் தூண்டவோ கூடாதபடி நீங்கள் ஆடை உடுத்தும் பாங்கினை மாற்றிக்கொள்ளுங்கள்.
6. ஆறாவது எதிர்கேள்வி அல்லது ஆட்சேபனை: > “நான் பிறரைக் கவர்ந்திழுக்கக்கூடிய அளவுக்கு அழகான பெண்ணோ அல்லது பிறர் சோதிக்கப்படும் அளவுக்கு என்னுடைய உடல் அமைப்பு கவர்ச்சியானதோ கிடையாது. ஆகவே, நான் என்னுடைய விருப்பப்படி எனக்கான ஆடையை அணிந்துகொள்கிறேன். இதில் என்ன தவறு இருக்க முடியும்?”
பதில்: முதலாவதாக, ஒரு மனிதனுக்கு எது கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதற்கு நீங்கள் ஒன்றும் தேர்ந்த நீதிபதி அல்ல. ஓர் எளிமையான அல்லது அழகற்ற பெண்ணைக் காட்டிலும், ஓர் அழகான மற்றும் நல்ல வடிவமைப்புள்ள பெண் ஓர் ஆணுக்கு ஒரு சோதனையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது உண்மைதான். ஆயினும், ஓர் ஆணிடம் பார்வைக்குக் கவர்ச்சி அற்றவளாகத் தோற்றமளிக்கிற ஒரு பெண், வேறொரு ஆணின் பார்வையில் மிகவும் கவர்ச்சியாகத் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும் உண்மையாகும். எளிமையான வகையில் உடை உடுத்தியிருக்கிற பெண்கள்கூட யாருக்காவது பிடித்த பெண்ணாக இருப்பாள்.
நீங்கள் உண்மையிலேயே மிகவும் கவர்ச்சியற்றவராக இருக்கிறீர்கள் என்றே வைத்துக்கொள்வோம்; எந்த மனிதனும் உங்களால் சோதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வைத்துக்கொள்வோம். ஆயினும், பிற பெண்களுக்கு நீங்கள் எந்த வகையான முன்மாதிரியைக் கொடுக்கப்போகிறீர்கள்? தங்கள் மனம்போனபடி ஆடை அணிகிற தேவபக்தியற்ற பெண்களுக்கு நீங்கள் எவ்வாறான மாதிரியாக இருக்கப்போகிறீர்கள்? உங்களைப் பார்க்கிற பெண்களுக்கு நீங்கள் எதைக் கற்றுக்கொடுக்கப் போகிறீர்கள் அல்லது அவர்களை எவ்வாறு சரியான வழியில் நடத்தப் போகிறீர்கள்? அவர்கள் உங்களைப் பார்ப்பதன் மூலமாக, நீங்கள் அணிகிற விதத்தைப் பார்த்து, தங்களுடைய சீரற்ற ஆடையை மாற்றிக்கொள்ள முன்வருவார்களா?
இறுதியாக, சில பெண்கள் மிகவும் அப்பாவியாகவும், ஆண்களின் சுபாவத்தைப் பற்றிச் சிறிதளவும் அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும், எந்த ஆண்களும் தங்களைத் தங்களுடையவர்களாகக் கருதவோ அல்லது காதலிக்கவோ முன்வராததால், "எங்களால் எந்த ஆண்களுக்கும் பாதகமில்லை, எனவே நாங்கள் எந்த ஆண்களின் மனமும் சலனமடையும்படி நடந்துகொள்ள மாட்டோம்" என்று சொல்கிறார்கள்.
பெண்களைப் பார்ப்பதாலும், முக்கியமாகக் கவர்ச்சிகரமாக இருக்கிற பெண்ணைப் பார்ப்பதாலும் ஓர் ஆண் பாவ இன்பத்தைப் பெறுகிறான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆண்கள் ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடிகளைச் செலவிடுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? பெண்களின் நிர்வாணப் படங்களைப் போடும் ஆபாசப் பத்திரிகைகள் எத்தனை ஆயிரங்கள் விற்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? இவ்வளவு பெரிய தொகை செலவழித்து இதைப் பார்ப்பதால் அவர்களுக்கு என்ன இன்பம் கிடைத்துவிடப் போகிறது? இந்தப் படங்கள் என்ன இன்பத்தை ஆண்களுக்குத் தந்துவிடப் போகிறது? ஆம், இவையெல்லாம் பார்ப்பதில் கிடைக்கும் இன்பங்களாகும். பெண்களின் உடலைப் பார்ப்பதன் மூலமாக ஆண்களின் உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன. இது அவனது கற்பனையைத் தூண்டி, சரீர இன்பத்தைப் புகுத்திவிடுகிறது. பெரும்பாலான ஆண்கள் சுதந்திரமாக இத்தகைய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். கொஞ்சமும் கட்டுப்பாடு இல்லாமல், அவர்கள் பெண்களை எங்கு பார்த்தாலும், அவர்களை உற்றுப் பார்த்து, பெண்மையின் உருவத்தைத் தங்கள் கண்களுக்கு விருந்தாக்கிக் கொள்கிறார்கள். ஆகவே, உங்களுடைய சரீரத்தை வெளிப்படுத்தும் ஆடைகள் இந்தக் காரியத்திற்குத் தூண்டுகோலாக இருந்துவிடக் கூடாது.
தேவபக்தியுள்ள மனிதர்கள் அத்தகைய இன்பம் பாவமானது என்பதை உணர்ந்துகொள்வார்கள். மேலும், இத்தகைய இன்பத்தைத் தங்கள் சொந்த மனைவிகளிடத்தில் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்றும் அறிந்திருக்கிறார்கள். எனவே, பிற பெண்கள் மூலமாக இத்தகைய சோதனைகள் வரும்போது அவர்கள் இச்சோதனைகளை மிகவும் தீவிரமாக எதிர்த்துப் போராடி அதை வெல்வார்கள். ஆனாலும்கூட, ஆண்களுக்கு ஏற்படுகிற உணர்ச்சிகளின் தீவிர வலிமை மற்றும் அதன் கடினத்தன்மையின் காரணமாக இதற்கு எதிரான போராட்டத்தை இவர்கள் மிகவும் கடினமானதாகக் காண்கிறார்கள். இதை எதிர்த்துப் போராடுவதற்கு அவர்களுடைய ஆவி ஆயத்தமாக இருக்கிறது; ஆனால் சோதனையின் பயங்கரமான முகத்துக்கு முன்பாக அவர்களுடைய மாம்சம் பலவீனமாகக் காணப்படுகிறது. சோதனையை வெல்ல வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது; ஆனால், பல நேரங்களில் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று அறியாததினாலே தோல்வியைத் தழுவுகிறார்கள். இதைக் குறித்து வேதம் இவ்விதமாகக் கூறுகிறது: “அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை” (ரோமர் 7:18).
இந்தக் காரியத்தில் அவர்களுக்கு மன உறுதியும், ஜெபமும், பிரயாசமும் இருந்தபோதிலும், ஓர் அழகான மற்றும் அம்சமான பெண்ணைக் கண்டால் இவர்களது விருப்பம் இல்லாமையினாலேயே கண்கள் அவர்களை நோக்கிவிடுகின்றன. அதாவது, விருப்பமின்றியே பெண்களின் மீது ஈர்க்கப்பட்டு விடுகிறார்கள். விருப்பமில்லாமல் பார்க்கிற ஒரு கணப்பொழுது பார்வையானது, அவர்களுடைய இருதயத்தில் இச்சித்துப் பாவம் செய்வதற்குப் போதுமானதாக அமைந்துவிடுகிறது. இந்த வகையான சோதனைகளைக் கையாளுவதில் ஓரளவு தேர்ச்சி பெற்ற ஒரு மனிதன் ஆரம்பத் தாக்குதலை வேண்டுமானால் எளிதில் எதிர்த்துவிடலாம். ஆனால், இத்தகைய சோதனைகள் பெண்களால் தொடர்ந்து வருமானால் எத்தகைய வலிமையானவர்களும் பலவீனமடைந்து கவர்ச்சிக்கு அடிபணிந்துவிடுகிறார்கள். எனவேதான், “பாலிய இச்சைக்கு விலகி ஓடு” (2 தீமோத்தேயு 2:22) என்று புத்தி சொல்கிறோம். அதாவது, இத்தகைய சோதனைகள் வருகிற ஒவ்வொரு சமயத்திலும் ஓடிவிட வேண்டும். இதுவே தப்பிப்பதற்கான சிறந்த வழியாகும். ஆனால், இந்தப் பொல்லாத உலகில் நாம் ஓடிப்போவோமா? இதை விடுங்கள், நம் இதயங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத் தேவனுடைய சபையையும் விட்டு நாம் ஓடிப்போக வேண்டுமா? இப்படிச் செய்வது மிகவும் அவமானம் அல்லவா? ஒரு விசுவாசியாகிய ஆணுக்கு எங்கு புகலிடம் கிடைக்க வேண்டுமோ அங்கிருந்தே ஓட வேண்டிய சூழல் நேரிட்டால் என்ன செய்வது? சபையிலேயே புகலிடம் கிடைக்கவில்லையெனில் வேறு எங்கு ஓடுவது?
தேவன் உங்களுக்குக் கொடுத்த உங்கள் சரீர அழகில் எவ்விதத் தவறும் இல்லை; அவ்வாறே அதில் தீமையும் இல்லை. இது தேவனால் படைக்கப்பட்டது. தேவனால் படைக்கப்பட்டதெல்லாம் மிகவும் நன்றாயிருந்தது போலவே, உங்கள் சரீரமும் நன்றாயிருக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தேவனால் வடிவமைக்கப்பட்டது: பெண் "ஆணுக்காகவே" உருவாக்கப்பட்டாள் என்று வேதம் கூறுகிறது (1 கொரிந்தியர் 11:9). உங்கள் சரீர அழகும் அதன் வடிவமைப்பும் ஓர் ஆணின் இருதயத்தைத் திருப்திப்படுத்த வேண்டுமே தவிர, எல்லா ஆண்களையும் அல்ல. தேவன் உங்களை அந்த ஓர் ஆணுடன் இணைத்திருந்தால், எல்லா வகையிலும் அந்த அழகை அவரிடம் மட்டுமே வெளிப்படுத்துங்கள்.
அப்பொழுது அவர் பிற பெண்களின் அழகுக்கும் கவர்ச்சிக்கும் ஆட்படாதவராக அல்லது குறைந்த சோதனையைச் சந்திப்பவராக இருப்பார். இவ்வாறு நீங்கள் உங்கள் சரீர அழகைப் பயன்படுத்தினால், அது உங்களுக்கு அதை அருளிய தேவனை மகிமைப்படுத்தும்; மேலும், அது யாருக்காகக் கொடுக்கப்பட்டதோ அந்த ஆணுக்கு மட்டுமே பயன்படும். இதற்கு மாறாக, உங்கள் சரீரத்தை முழு உலகமும் பார்க்கும்படி காட்சிப்பொருளாக்கினால் நீங்கள் விபசாரம் செய்கிறீர்கள். இப்படிச் செய்வதன் மூலமாக நீங்கள் உங்களையே மகிமைப்படுத்துவது மட்டுமின்றி, பிசாசுக்குச் சேவை செய்கிறவர்களாகவும் மாறிவிடுவீர்கள்.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.