இந்தக் குட்டையான ஆடைகள் தவறானவை என்று எவரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்விதமான ஆடைகள் ஓர் ஆணின் கண்களுக்கு பாலியல் கவர்ச்சியை உண்டுபண்ணக்கூடியதாக, இருக்கின்றன என்று முழு உலகத்துக்குமே தெரியும். தங்களைத் தேவபக்தியுள்ள பெண்கள் என்று அழைத்துக்கொள்பவர்களும், எங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும் என்று கூறிக்கொள்கிற பெண்களும், இது நல்லதா அல்லது கெட்டதா என்று யோசிக்காமலேயே தற்காலத்தில் பிரபலமாயிருக்கிற ஆடைகளையே அது குட்டையான உடையாயினும் அல்லது நீளமான உடையாயினும் தொடர்ந்து அணிந்து வருகிறார்கள். இது இவ்வளவு குட்டையாயிருக்கிறது என்று பிறர் விமர்சிக்கிற அளவுக்கு இது சிறியதாயிருக்கிறது. இவர்கள் தங்களது ஆடைகளை நீளமாக இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்வதற்குப் பதிலாக, நாங்கள் எவ்வளவு உயரமாக இருக்கிறோம் என்பதை மெச்சிக்கொண்டு இத்தகைய ஆடைகளை தைரியமாக அணிந்துகொண்டு வருகிறார்கள். இத்தகைய ஆடைகளை அணிந்துகொண்டு, உங்கள் வீட்டுக் கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது, என்னுடைய உடலின் எந்தப் பாகமும் வெளியே தெரியவில்லை என்று உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் உட்காரும்போதோ, குனியும்போதோ அல்லது காரில் ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ என்ன நிகழும் என்பதை நீங்களே அறிவீர்கள். அப்பொழுது தெரிபவை அநாகரிகத்தின் உச்சகட்டம் என்றே சொல்ல வேண்டும். இத்தகைய உடைகளை நீங்கள் வடிவமைத்தாலும் இல்லாவிட்டாலும் அல்லது அவற்றை நீங்கள் விரும்வினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் தொடைகளும், உங்கள் கால்களும் வெளியே தெரிந்து, ஆண்களுடைய கண்களின் இச்சையைத் தூண்டுகின்றன என்பதில் சந்தேமேயில்லை.
குட்டையான அரைக்கால் பாவடைகளோ அல்லது அரைக்கால் டவுசர்களோ என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ அதேவிதமான விளைவுகளையே பக்கவாட்டில் கிழித்துவிடப்பட்டுள்ள நீளமான பாவடைகளும் ஏற்படுத்துகின்றன. இந்தவகையான ஆடைகளுடனும் உங்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இருக்கக்கூடாது. இத்தகைய ஆடைகளை அணியும் போது உங்கள் தொடைகளை யாரால் பார்க்காமல் இருக்க முடியும்? அது நடப்பதற்கு வசதியாக கிழித்துவிடப்பட்டிருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம், ஆனால் அதை அவ்வளவு இறுக்கமாக அணிந்தால் அதைக் கிழித்துவிடாமல் நடக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியாதா? இவ்விதமான ஆடைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, நீளமானதும் அகலமானதுமான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இத்தகைய இறுக்கமான ஆடைகளைக் குறித்து இன்னும் சில காரியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
உங்கள் ஆடைகள் எவ்வளவு நீளமாக இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? நீங்கள் குனியும் போதும் அல்லது உட்கார்ந்திருக்கும் போதும் உங்கள் கால்கள் வெளியே தெரியாவண்ணம், அது முழங்காலுக்குக் கீழேயும், முன்னும் பின்னும் முழுவதுமாக மூடப்பட்டிருக்கும் படியான ஆடைகளை அணிந்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் போதுமான அளவு பாதுகாப்பாக இருப்பதை உணருவீர்கள். நீங்கள் கவனமாக இருப்பதற்காக மற்றொரு காரியத்தையும் கூறுகிறேன். உங்களுடைய கால்கள் உங்களது பார்வையில் மறைந்திருந்தால் மட்டும் போதாது, பிறருடைய பார்வையிலும் மறைந்திருக்க வேண்டும். அதாவது, நீங்கள் குனியும்போதும், உட்காரும்போதும் ஆடையின் முன்புறம் இயல்பாகவே தாழ்வாகத் தொங்கும், முன்புறக் கால்களை முழுவதுமாக மறைத்துவிடும், அதே நேரத்தில், கால்களின் பின்புறம் அதிகமாக வெளியே தெரியும் அளவில் ஆடைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். பெண்கள் அமரும்போது, தங்களது கால்களின் முன்பக்கம் வெளியே தெரியாவண்ணம் கவனமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன், ஆனால் கால்களின் பின்பகுதியும், தொடைகளின் பக்கவாட்டுப் பகுதியும் அருகில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும். உங்களது ஆடை போதுமான அளவு நீளமாக இல்லாவிட்டால் மட்டுமே இத்தகைய பிரச்சினைகள் ஏற்படும். உங்களது கால்கள் எந்த வகையிலும் வெளியே தெரியாவண்ணம் இருக்க வேண்டுமாயின், நீங்கள் அணிகிற ஆடைகள் முழங்கால்களுக்குக் கீழே அனைத்து அம்சங்களிலும் மறைக்கும்படி இருக்க வேண்டும்.