இணை வசன வேதாகமம்

எபேசியர் 5

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள்.எபே 4:32 லேவி 11:45 மத் 5:45 மத் 5:48 லூக் 6:35 லூக் 6:36 1பேது 1:15 1பேது 1:16 1யோவா 4:11
2கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.எபே 3:17 எபே 4:2 எபே 4:15 யோவா 13:34 ரோம 14:16 1கொரி 16:14 கொலோ 3:14 1தெச 4:9 1தீமோ 4:12 1பேது 4:8 1யோவா 3:11 1யோவா 3:12 1யோவா 3:23 1யோவா 4:20 1யோவா 4:21
3பரத்தைமை, அனைத்து ஒழுக்கக்கேடுகள், பேராசை ஆகியவற்றின் பெயர் கூட உங்களிடையே சொல்லப்படலாகாது. இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை.எபே 5:5 எபே 4:19 எபே 4:20 எண் 25:1 உபா 23:17 உபா 23:18 மத் 15:19 மாற் 7:21 அப் 15:20 ரோம 1:29 ரோம 6:13 1கொரி 5:10 1கொரி 5:11 1கொரி 6:9 1கொரி 6:13 1கொரி 6:18 1கொரி 10:8 2கொரி 12:21 கலா 5:19-21 கொலோ 3:5 1தெச 4:3 1தெச 4:7 எபிரெ 12:16 எபிரெ 13:4 2பேது 2:10 வெளிப் 2:14 வெளிப் 2:21 வெளிப் 9:21 வெளிப் 21:8 வெளிப் 22:15
4அவ்வாறே, வெட்கங்கெட்ட செயல், மடத்தனமான பேச்சு, பகடி பண்ணுதல் ஆகியவை தகாதவை: நன்றி சொல்லுதலே தகும்.எபே 4:29 நீதி 12:23 நீதி 15:2 பிரச 10:13 மத் 12:34-37 மாற் 7:22 கொலோ 3:8 யாக் 3:4-8 2பேது 2:7 2பேது 2:18 யூதா 1:10 யூதா 1:13
5ஏனெனில் பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப் பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.1கொரி 6:9 1கொரி 6:10 கலா 5:19 கலா 5:21
6வீண் வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில் மேற்கூறிய செயல்களால்தான் கீழ்ப்படியாத மக்கள் மீது கடவுளின் சினம் வருகின்றது.எரே 29:8 எரே 29:9 எரே 29:31 எசே 13:10-16 மீகா 3:5 மத் 24:4 மத் 24:24 மாற் 13:5 மாற் 13:22 கலா 6:7 கலா 6:8 கொலோ 2:4 கொலோ 2:8 கொலோ 2:18 2தெச 2:3 2தெச 2:10-12 1யோவா 4:1
7எனவே அவர்களோடு நீங்கள் எதிலும் பங்கு கொள்ள வேண்டாம்.எபே 5:11 எண் 16:26 சங் 50:18 நீதி 1:10-17 நீதி 9:6 நீதி 13:20 1தீமோ 5:22 வெளிப் 18:4
8ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.எபே 2:11 எபே 2:12 எபே 4:18 எபே 6:12 சங் 74:20 ஏசா 9:2 ஏசா 42:16 ஏசா 60:2 எரே 13:16 மத் 4:16 லூக் 1:79 அப் 17:30 அப் 26:18 ரோம 1:21 ரோம 2:19 2கொரி 6:14 கொலோ 1:13 தீத் 3:3 1பேது 2:9 1யோவா 2:8
9ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது.கலா 5:22 கலா 5:23
10ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள்.1சாமு 17:39 ரோம 12:1 ரோம 12:2 பிலிப் 1:10 1தெச 5:21
11பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக்காட்டுங்கள்.எபே 5:7 ஆதி 49:5-7 சங் 1:1 சங் 1:2 சங் 26:4 சங் 26:5 சங் 94:20 சங் 94:21 நீதி 4:14 நீதி 4:15 நீதி 9:6 எரே 15:17 ரோம 16:17 1கொரி 5:9-11 1கொரி 10:20 1கொரி 10:21 2கொரி 6:14-18 2தெச 3:6 2தெச 3:14 1தீமோ 6:5 2தீமோ 3:5 2யோவா 1:10 2யோவா 1:11 வெளிப் 18:4
12அவர்கள் மறைவில் செய்பவற்றைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது.எபே 5:3 ரோம 1:24-27 1பேது 4:3
13அவர்கள் செய்வதை எல்லாம் குற்றமென ஒளியானது எடுத்துக்காட்டும்போது அவற்றின் உண்மைநிலை வெளியாகிறது.புலம் 2:14 ஓசி 2:10 ஓசி 7:1
14அவ்வாறு தெளிவாக்கப்படுவதெல்லாம் ஒளிமயமாகிறது. ஆதலால், “தூங்குகிறவனே, விழித்தெழு: இறந்தவனே, உயிர்பெற்றெழு: கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்” என்று கூறப்பட்டுள்ளது.ஏசா 51:17 ஏசா 52:1 ஏசா 60:1 ரோம 13:11 ரோம 13:12 1கொரி 15:34 1தெச 5:6 2தீமோ 2:26
15ஆகையால் உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள்.எபே 5:33 மத் 8:4 மத் 27:4 மத் 27:24 1தெச 5:15 எபிரெ 12:25 1பேது 1:22 வெளிப் 19:10
16இந்த நாள்கள் பொல்லாதவை. ஆகவே காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்:பிரச 9:10 ரோம 13:11 கலா 6:10 கொலோ 4:5
17ஆகவே அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்து கொள்ளுங்கள்.எபே 5:15 கொலோ 4:5
18திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும். மாறாக, தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள்.ஆதி 9:21 ஆதி 19:32-35 உபா 21:20 சங் 69:12 நீதி 20:1 நீதி 23:20 நீதி 23:21 நீதி 23:29-35 ஏசா 5:11-13 ஏசா 5:22-13 மத் 24:49 லூக் 12:45 லூக் 21:34 ரோம 13:13 1கொரி 5:11 1கொரி 6:10 1கொரி 11:21 கலா 5:21 1தெச 5:7
19உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள்.அப் 16:25 1கொரி 14:26 கொலோ 3:16 யாக் 5:13
20நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.எபே 5:4 யோபு 1:21 சங் 34:1 ஏசா 63:7 அப் 5:41 1கொரி 1:4 பிலிப் 1:3 பிலிப் 4:6 கொலோ 1:11 கொலோ 1:12 கொலோ 3:17 1தெச 3:9 1தெச 5:18 2தெச 1:3 2தெச 2:13
21கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.எபே 5:22 எபே 5:24 ஆதி 16:9 1நாளா 29:24 ரோம 13:1-5 1கொரி 16:16 பிலிப் 2:3 1தீமோ 2:11 1தீமோ 3:4 எபிரெ 13:17 1பேது 2:13 1பேது 5:5
22திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்.எபே 5:24 ஆதி 3:16 எஸ்தர் 1:16-18 எஸ்தர் 1:20-18 1கொரி 14:34 கொலோ 3:18-25 1தீமோ 2:11 1தீமோ 2:12 தீத் 2:5 1பேது 3:1-6
23ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர்.1கொரி 11:3-10
24திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்.எபே 5:33 யாத் 23:13 யாத் 29:35 கொலோ 3:20 கொலோ 3:22 தீத் 2:7 தீத் 2:9
25திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார்.எபே 5:28 ஆதி 2:24 ஆதி 24:67 2சாமு 12:3 நீதி 5:18 நீதி 5:19 கொலோ 3:19 1பேது 3:7
26வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார்.யோவா 17:17-19 அப் 26:18 1கொரி 6:11 தீத் 2:14 எபிரெ 9:14 எபிரெ 10:10 1பேது 1:2 யூதா 1:1
27அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார்.2கொரி 4:14 2கொரி 11:2 கொலோ 1:22 கொலோ 1:28 யூதா 1:24
28அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின்மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவராவார்.எபே 5:31 எபே 5:33 ஆதி 2:21-24 மத் 19:5
29தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார்.எபே 5:31 நீதி 11:17 பிரச 4:5 ரோம 1:31
30ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள்.எபே 1:23 ஆதி 2:23 ரோம 12:5 1கொரி 6:15 1கொரி 12:12-27 கொலோ 2:19
31“இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டு தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்: இருவரும் ஒரே உடலாயிருப்பர்” என மறைநூல் கூறுகிறது.ஆதி 2:24 மத் 19:5 மாற் 10:7 மாற் 10:8 1கொரி 6:16
32இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.எபே 6:19 கொலோ 2:2 1தீமோ 3:8 1தீமோ 3:16
33எப்படியும், உங்களுள் ஒவ்வொருவரும் தம்மீது அன்புகொள்வதுபோல தம் மனைவியின் மீதும் அன்பு செலுத்த வேண்டும். மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும்.எபே 5:25 எபே 5:28 எபே 5:29 கொலோ 3:19 1பேது 3:7

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.