இணை வசன வேதாகமம்

எபேசியர் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆதலால் ஆண்டவர் பொருட்டு கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்: நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்.எபே 3:1
2முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி,எண் 12:3 சங் 45:4 சங் 138:6 நீதி 3:34 நீதி 16:19 ஏசா 57:15 ஏசா 61:1-3 செப் 2:3 சகரி 9:9 மத் 5:3-5 மத் 11:29 அப் 20:19 1கொரி 13:4 1கொரி 13:5 கலா 5:22 கலா 5:23 கொலோ 3:12 கொலோ 3:13 1தீமோ 6:11 2தீமோ 2:25 யாக் 1:21 யாக் 3:15-18 1பேது 3:15
3அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.எபே 4:4 யோவா 13:34 யோவா 17:21-23 ரோம 14:17-19 1கொரி 1:10 1கொரி 12:12 1கொரி 12:13 2கொரி 13:11 கொலோ 3:13-15 1தெச 5:13 எபிரெ 12:14 யாக் 3:17 யாக் 3:18
4நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே: தூய ஆவியும் ஒன்றே.எபே 2:16 எபே 5:30 ரோம 12:4 ரோம 12:5 1கொரி 10:17 1கொரி 12:12 1கொரி 12:13 1கொரி 12:20 கொலோ 3:15
5அவ்வாறே ஆண்டவர் ஒருவரே: நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே: திருமுழுக்கு ஒன்றே.அப் 2:36 அப் 10:36 ரோம 14:8 ரோம 14:9 1கொரி 1:2 1கொரி 1:13 1கொரி 8:6 1கொரி 12:5 பிலிப் 2:11 பிலிப் 3:8
6எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே: அவர் எல்லாருக்கும் மேலானவர்: எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்: எல்லாருக்குள்ளும் இருப்பவர்.எபே 6:23 எண் 16:22 ஏசா 63:16 மல்கி 2:10 மத் 6:9 யோவா 20:17 1கொரி 8:6 1கொரி 12:6 கலா 3:26-28 கலா 4:3-7 1யோவா 3:1-3
7கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது.எபே 4:8-14 மத் 25:15 ரோம 12:6-8 1கொரி 12:8-11 1கொரி 12:28-30
8ஆகையால்தான், “அவர் உயரே ஏறிச் சென்றார்: அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்: மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்” என்று மறைநூல் கூறுகிறது.சங் 68:18
9“ஏறிச் சென்றார்” என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா?நீதி 30:4 யோவா 3:13 யோவா 6:33 யோவா 6:62 யோவா 20:17 அப் 2:34-36
10கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர்.எபே 1:20-23 அப் 1:9 அப் 1:11 1தீமோ 3:16 எபிரெ 4:14 எபிரெ 7:26 எபிரெ 8:1 எபிரெ 9:23 எபிரெ 9:24
11அவரே சிலரைத் திருத்தூதராகவும் சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும் ஏற்படுத்தினார்.எபே 4:8 எபே 2:20 எபே 3:5 ரோம 10:14 ரோம 10:15 1கொரி 12:28 யூதா 1:17 வெளிப் 18:20 வெளிப் 21:14
12திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார்.லூக் 22:32 யோவா 21:15-17 அப் 9:31 அப் 11:23 அப் 14:22 அப் 14:23 அப் 20:28 ரோம 15:14 ரோம 15:29 1கொரி 12:7 2கொரி 7:1 பிலிப் 1:25 பிலிப் 1:26 பிலிப் 3:12-18 கொலோ 1:28 1தெச 5:11-14 எபிரெ 6:1 எபிரெ 13:17
13அதனால் நாம் எல்லாரும் இறை மகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.எபே 4:3 எபே 4:5 எரே 32:38 எரே 32:39 எசே 37:21 எசே 37:22 செப் 3:9 சகரி 14:9 யோவா 17:21 அப் 4:32 1கொரி 1:10 பிலிப் 2:1-3
14ஆகவே இனி நாம் குழந்தைகளைப்போல் இருக்கக் கூடாது. மனிதருடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் தவறுக்கு வழி நடத்தும் ஏமாற்று வழிகளையும் நம்பி, அவர்களுடைய போதனைகள் என்னும் காற்றால் அடித்துச்செல்லப்பட்டு அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படக்கூடாது.ஏசா 28:9 மத் 18:3 மத் 18:4 1கொரி 3:1 1கொரி 3:2 1கொரி 14:20 எபிரெ 5:12-14
15மாறாக, அன்பின் அடிப்படையில் உண்மை பேசி, தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும்.எபே 4:25 சகரி 8:16 2கொரி 4:2 2கொரி 8:8
16அவரால்தான் முழு உடலும் இசைவாய்ப் பொருந்தித் தன்னிடமுள்ள தசை நார்களால் இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பணியைச் செய்வதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பால் கட்டமைப்புப் பெற்று வளர்ச்சியடைகிறது.எபே 4:12 யோவா 15:5
17ஆதலால் நான் ஆண்டவர் பெயரால் வற்புறுத்திச் சொல்வது இதுவே: பிற இனத்தாவர் வாழ்வதுபோல் இனி நீங்கள் வாழக்கூடாது. அவர்கள் தங்கள் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழ்கிறார்கள்.1கொரி 1:12 1கொரி 15:50 2கொரி 9:6 கலா 3:17 கொலோ 2:4
18அவர்களது மனம் இருளடைந்திருக்கிறது. அவர்களது பிடிவாத உள்ளத்தின் விளைவாய் ஏற்பட்ட அறியாமையின் காரணத்தால் அவர்கள் கடவுள் தரும் வாழ்வுக்குப் புறம்பானவர்களாக இருக்கிறார்கள்.சங் 74:20 சங் 115:4-8 ஏசா 44:18-20 ஏசா 46:5-8 அப் 17:30 அப் 26:17 அப் 26:18 ரோம 1:21-23 ரோம 1:28-23 1கொரி 1:21 2கொரி 4:4 கலா 4:8 1தெச 4:5
19அவர்கள் உள்ளம் மரத்துப்போய்ப் பேராசை கொண்டு, ஒழுக்கக் கேடான செயல்களில் எல்லாம் ஈடுபட்டுத் தங்களைக் காமவெறிக்கும் உட்படுத்தினார்கள்.1தீமோ 4:2
20ஆனால் நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிக் கற்றறிந்தது இதுவல்ல.லூக் 24:47 யோவா 6:45 ரோம 6:1 ரோம 6:2 2கொரி 5:14 2கொரி 5:15 தீத் 2:11-14 1யோவா 2:27
21உண்மையில் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரிடமுள்ள உண்மைக்கேற்பவே இருந்தது.மத் 17:5 லூக் 10:16 யோவா 10:27 அப் 3:22 அப் 3:23 எபிரெ 3:7 எபிரெ 3:8
22எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள்.எபே 4:25 1சாமு 1:14 யோபு 22:23 எசே 18:30-32 கொலோ 2:11 கொலோ 3:8 கொலோ 3:9 எபிரெ 12:1 யாக் 1:21 1பேது 2:1 1பேது 2:2
23உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும்.எபே 2:10 சங் 51:10 எசே 11:19 எசே 18:31 எசே 36:26 ரோம 12:2 கொலோ 3:10 தீத் 3:5
24கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.எபே 6:11 யோபு 29:14 ஏசா 52:1 ஏசா 59:17 ரோம 13:12 ரோம 13:14 1கொரி 15:53 கலா 3:27 கொலோ 3:10-14
25ஆகவே பொய்யை விலக்கி ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள். ஏனெனில் நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம்.லேவி 19:11 1இரா 13:18 சங் 52:3 சங் 119:29 நீதி 6:17 நீதி 12:19 நீதி 12:22 நீதி 21:6 ஏசா 9:15 ஏசா 59:3 ஏசா 59:4 ஏசா 63:8 எரே 9:3-5 ஓசி 4:2 யோவா 8:44 அப் 5:3 அப் 5:4 கொலோ 3:9 1தீமோ 1:10 1தீமோ 4:2 தீத் 1:2 தீத் 1:12 வெளிப் 21:8 வெளிப் 22:15
26சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்: பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்.எபே 4:31 எபே 4:32 யாத் 11:8 யாத் 32:21 யாத் 32:22 எண் 20:10-13 எண் 20:24-13 எண் 25:7-11 நெகே 5:6-13 சங் 4:4 சங் 37:8 சங் 106:30-33 நீதி 14:29 நீதி 19:11 நீதி 25:23 பிரச 7:9 மத் 5:22 மாற் 3:5 மாற் 10:14 ரோம 12:19-21 யாக் 1:19
27அலகைக்கு இடம் கொடாதீர்கள்.எபே 6:11 எபே 6:16 அப் 5:3 2கொரி 2:10 2கொரி 2:11 யாக் 4:7 1பேது 5:8
28திருடர் இனித் திருடாமல் இருக்கட்டும். மாறாக, தேவையில் உழல்வோருக்குப் பகிர்ந்து கொடுக்கத் தங்களிடம் பொருள் இருக்கும் வகையில், தாங்களே தங்கள் கைகளால் நேர்மையோடு பாடுபட்டு உழைக்கட்டும்.யாத் 20:15 யாத் 20:17 யாத் 21:16 நீதி 30:9 எரே 7:9 ஓசி 4:2 சகரி 5:3 யோவா 12:6 1கொரி 6:10 1கொரி 6:11
29கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி, தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்.எபே 5:3 எபே 5:4 சங் 5:9 சங் 52:2 சங் 73:7-9 மத் 12:34-37 ரோம 3:13 ரோம 3:14 1கொரி 15:32 1கொரி 15:33 கொலோ 3:8 கொலோ 3:9 கொலோ 4:6 யாக் 3:2-8 2பேது 2:18 யூதா 1:13-16 வெளிப் 13:5 வெளிப் 13:6
30கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்.ஆதி 6:3 ஆதி 6:6 நியா 10:16 சங் 78:40 சங் 95:10 ஏசா 7:13 ஏசா 43:24 ஏசா 63:10 எசே 16:43 மாற் 3:5 அப் 7:51 1தெச 5:19 எபிரெ 3:10 எபிரெ 3:17
31மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்.சங் 64:3 ரோம 3:14 கொலோ 3:8 கொலோ 3:19 யாக் 3:14 யாக் 3:15
32ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்: கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.ரூத் 2:20 சங் 112:4 சங் 112:5 சங் 112:9 நீதி 19:22 ஏசா 57:1 லூக் 6:35 அப் 28:2 ரோம 12:10 1கொரி 13:4 2கொரி 2:10 2கொரி 6:6 கொலோ 3:12 கொலோ 3:13 2பேது 1:7

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.