சங்கீதம் 73:7-9 - WCV
7
அவர்களின் கண்கள் கொழுப்பு மிகுதியால் புடைத்திருக்கின்றன: அவர்களது மனத்தின் கற்பனைகள் எல்லை கடந்து செல்கின்றன.
8
பிறரை எள்ளி நகையாடி வஞ்சகமாய்ப் பேசுகின்றனர்: இறுமாப்புக்கொண்டு கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர்.
9
விண்ணுலகை எதிர்த்து அவர்கள் வாய் பேசுகின்றது: மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல் விரிந்து பரவுகின்றது.