14
நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக் கொள்ள வேண்டாம். இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு, நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு?
15
கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் என்ன உடன்பாடு? நம்பிக்கை கொண்டோர்க்கு நம்பிக்கை கொண்டிராதவரோடு என்ன தொடர்பு?
16
கடவுளின் கோவிலுக்கும் சிலைவழிபாட்டுக் கோவிலுக்கும் என்ன இணக்கம்? வாழும் கடவுளின் கோவில் நாமே. ‘என் உறைவிடத்தை அவர்கள் நடுவில் நிறுவுவேன். அவர்கள் நடுவே நான் உலவுவேன். நானே அவர்கள் கடவுள்! அவர்கள் என் மக்கள்! ‘ என்று கடவுளே சொல்லியிருக்கிறார் அன்றோ!
17
எனவே, ‘அவர்கள் நடுவிலிருந்து வெளியேறுங்கள்: அவர்களை விட்டுப் பிரிந்து செல்லுங்கள்’ என்கிறார் ஆண்டவர். ‘தீட்டானதைத் தொடாதீர்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்.
18
மேலும் நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன்: நீங்கள் எனக்குப் புதல்வரும் புதல்வியருமாயிருப்பீர்கள்’ என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவர்.