எசேக்கியேல் 13:10-16 - WCV
10
ஏனெனில், இவர்கள் நல்வாழ்வு இல்லாதிருந்தும் “நல்வாழ்வு உளது” எனச் சொல்லி என் மக்களை வழி தவறச் செய்தார்கள். மக்கள் எல்லைச் சுவர் எழுப்பியபோது இவர்கள் அதற்குச் சுண்ணாம்பு பூசினார்கள்.
11
சுண்ணாம்பு பூசுகிறவர்களிடம் சொல்: அது விழுந்துவிடும்: அடைமழை பெய்யும்: ஆலங்கட்டிகள் விழும்: புயற்காற்று சீறியெழும்.
12
சுவர் விழும்போது, “நீங்கள் பூசிய சுண்ணாம்பு எங்கே?” என்று உங்களைக் கேட்கமாட்டார்களா?
13
ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் சீற்றமுற, புயற்காற்று சீறியெழும்: நான் சினமுற, அடைமழை பெய்யும்: நான் கோபமுற, ஆலங்கட்டிகள் விழும்: சுவரும் அழிந்துவிடும்.
14
நீங்கள் சுண்ணாம்பு பூசிய சுவரை நான் இடித்துத் தரைமட்டமாக்குவேன். அதன் அடித்தளம் பெயர்க்கப்படும். அது விழும்போது, அதனடியில் நீங்கள் அழிந்து போவீர்கள். அப்போது, நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
15
இப்படிச் சுவர் மீதும், அதில் சுண்ணாம்பு பூசியவர்கள் மீதும் என் சினத்தைத் தீர்த்துக் கொண்டு, “சுவரையும் காணோம்: அதற்குச் சுண்ணாம்பு பூசியோரையும் காணோம்” என்று உங்களுக்கு உரைப்பேன்.
16
நல்வாழ்வு இல்லாதிருந்தும் “நல்வாழ்வு உளது” என்னும் காட்சி கண்டு எருசலேமுக்காக இறைவாக்குரைக்கும் இஸ்ரயேலின் இறைவாக்கினரும் அவ்வாறே அழிவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.