இணை வசன வேதாகமம்

ரோமர் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1அப்படியானால், மற்றவர்களை விட யூதர்கள் பெற்றுள்ள சிறப்பு என்ன? விருத்தசேதனத்தால் அவர்களுக்குப் பயன் என்ன?ரோம 2:25-29 ஆதி 25:32 பிரச 6:8 பிரச 6:11 ஏசா 1:11-15 மல்கி 3:14 1கொரி 15:32 எபிரெ 13:9
2எல்லா வகையிலும் அவர்கள் பெரும்பயன் பெற்றுள்ளார்கள். முதலாவது, கடவுளின் வாக்குகள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.ரோம 3:3 ரோம 11:1 ரோம 11:2 ரோம 11:15-23 ரோம 11:28-23 ரோம 11:29-23
3ஆனால், அவர்களுள் சிலர் அவ்வாக்குகளை நம்பவில்லையே! அதனாலென்ன? அவர்கள் நம்பாதலால், கடவுள் நம்பத்தகாதவர் ஆகிவிடுவாரா?ரோம 9:6 ரோம 10:16 ரோம 11:1-7 எபிரெ 4:2
4ஒருபோதுமில்லை. மனிதர் எல்லாரும் பொய்யர்: கடவுளோ உண்மை உள்ளவர் என்பது தெளிவாகும். ஏனெனில்.”உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது: உம் தண்டனைத் தீர்ப்புகளில் வெற்றி விளங்குகிறது” என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!ரோம 3:6 ரோம 3:31 ரோம 6:2 ரோம 6:15 ரோம 7:7 ரோம 7:13 ரோம 9:14 ரோம 11:1 ரோம 11:11 லூக் 20:16 1கொரி 6:15 கலா 2:17 கலா 2:21 கலா 6:14
5நீதியற்ற நம் நடத்தையின் மூலம் கடவுளின் நீதி வெளிப்படுமாயின் நாம் என்ன சொல்வோம்? கடவுள் சினந்தெழுந்து தண்டித்தால், அவர் நீதியற்றவர் என்போமா?-இதை நான் மனிதர் பேசும் முறையில் சொல்லுகிறேன்-ரோம 3:7 ரோம 3:25 ரோம 3:26 ரோம 8:20 ரோம 8:21
6ஒருபோதும் இல்லை. கடவுள் நீதியற்றவர் என்றால் எப்படி அவர் உலகிற்குத் தீர்ப்பளிக்க முடியும்?ஆதி 18:25 யோபு 8:3 யோபு 34:17-19 சங் 9:8 சங் 11:5-7 சங் 50:6 சங் 96:13 சங் 98:9 அப் 17:31
7என் பொய்ம்மையின் மூலம் கடவுளின் வாய்மை வெளிப்படுவதோடு அவரது மாட்சியும் பெருகுமானால், இன்னும் நான் பாவி எனத் தீர்ப்பளிக்கப்படுவது ஏன்?ஆதி 37:8 ஆதி 37:9 ஆதி 37:20 ஆதி 44:1-14 ஆதி 50:18-20 யாத் 3:19 யாத் 14:5 யாத் 14:30 1இரா 13:17 1இரா 13:18 1இரா 13:26-32 2இரா 8:10-15 மத் 26:34 மத் 26:69-75
8அப்படியானால், “நன்மை விளையும்படி தீமையைச் செய்வோம்” என்று சொல்லலாமா! நாங்கள் இவ்வாறு கூறுவதாகச் சிலர் எங்கள் மீது வீண்பழி சுமத்துகின்றனர். இவர்கள் தகுந்த தண்டனை பெறுவார்கள்.மத் 5:11 1பேது 3:16 1பேது 3:17
9அப்படியானால், மற்றவர்களைவிட யூதர்களாகிய நாம் மேலானவர்களா? இல்லவே இல்லை. ஏனெனில் யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்துக்கு உட்பட்டிருப்பதாக ஏற்கெனவே எடுத்துரைத்தாயிற்று.ரோம 3:5 ரோம 6:15 ரோம 11:7 1கொரி 10:19 1கொரி 14:15 பிலிப் 1:18
10அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது: “நேர்மையாளரே இல்லை, ஒருவர் கூட இல்லை:ரோம 3:4 ரோம 11:8 ரோம 15:3 ரோம 15:4 ஏசா 8:20 1பேது 1:16
11மதிநுட்பம் உள்ளவர் ஒருவருமில்லை: கடவுளைத் தேடுபவர் எவராவது உண்டோ?ரோம 1:22 ரோம 1:28 சங் 14:2-4 சங் 53:2 சங் 53:4 சங் 94:8 நீதி 1:7 நீதி 1:22 நீதி 1:29 நீதி 1:30 ஏசா 27:11 எரே 4:22 ஓசி 4:6 மத் 13:13 மத் 13:14 மத் 13:19 தீத் 3:3 1யோவா 5:20
12எல்லாரும் நெறிபிறழ்ந்தனர்: ஒருமிக்கக் கெட்டுப்போயினர். நல்லது செய்பவர் யாருமில்லை: ஒருவர்கூட இல்லை.”யாத் 32:8 சங் 14:3 பிரச 7:29 ஏசா 53:6 ஏசா 59:8 எரே 2:13 எபே 2:3 1பேது 2:25
13“அவர்களது தொண்டை திறந்த பிணக்குழி: அவர்களது நாக்கு வஞ்சகமே பேசும். அவர்கள் உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சு.”சங் 5:9 எரே 5:16 மத் 23:27 மத் 23:28
14“அவர்கள் வாயில் சாபமும் கொடுமையும் நிறைந்துள்ளது.”சங் 10:7 சங் 59:12 சங் 109:17 சங் 109:18 யாக் 3:10
15“இரத்தம் சிந்துவதற்கு அவர்கள் கால்கள் விரைகின்றன:நீதி 1:16 நீதி 6:18 ஏசா 59:7 ஏசா 59:8
16பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன:
17அமைதி வழியை அவர்கள் அறியார்.”ரோம 5:1 ஏசா 57:21 ஏசா 59:8 மத் 7:14 லூக் 1:79
18“அவர்களது மனக்கண்களில் இறையச்சம் இல்லை.”ஆதி 20:11 சங் 36:1 நீதி 8:13 நீதி 16:6 நீதி 23:17 லூக் 23:40 வெளிப் 19:5
19திருச்சட்டம் சொல்வதெல்லாம் அந்தச் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குப் பொருந்தும் என நமக்குத் தெரியும். ஆகவே இவர்களும் உலக மக்கள் அனைவரும் சாக்குப்போக்குச் சொல்ல வழியின்றி இருக்கிறார்கள்.ரோம 3:2 ரோம 2:12-18 யோவா 10:34 யோவா 10:35 யோவா 15:25 1கொரி 9:20 1கொரி 9:21 கலா 3:23 கலா 4:5 கலா 4:21 கலா 5:18
20ஏனெனில், திருச்சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை. மனிதர்கள் பாவிகள் என்பதையே சட்டம் அவர்களுக்கு உணர்த்துகிறது.ரோம 3:28 ரோம 2:13 ரோம 4:13 ரோம 9:32 அப் 13:39 கலா 2:16 கலா 2:19 கலா 3:10-13 கலா 5:4 எபே 2:8 எபே 2:9 தீத் 3:5-7 யாக் 2:9 யாக் 2:10
21இப்பொழுதோ கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது: திருச்சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின்றன.ரோம 1:17 ரோம 5:19 ரோம 5:21 ரோம 10:3 ரோம 10:4 ஆதி 15:6 ஏசா 45:24 ஏசா 45:25 ஏசா 46:13 ஏசா 51:8 ஏசா 54:17 ஏசா 61:10 எரே 23:5 எரே 23:6 எரே 33:16 தானி 9:24 அப் 15:11 1கொரி 1:30 2கொரி 5:21 கலா 5:5 பிலிப் 3:9 எபிரெ 11:4-40 2பேது 1:1
22இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்: நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை.ரோம 4:3-13 ரோம 4:20-22 ரோம 5:1-11 ரோம 8:1 பிலிப் 3:9
23ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்.ரோம 3:9 ரோம 3:19 ரோம 1:28-32 ரோம 2:1-16 ரோம 11:32 பிரச 7:20 கலா 3:22 1யோவா 1:8-10
24ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர்.ரோம 4:16 ரோம 5:16-19 1கொரி 6:11 எபே 2:7-10 தீத் 3:5-7
25இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார். அவரிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவே அவ்வாறு செய்தார். கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்த பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார்.அப் 2:23 அப் 3:18 அப் 4:28 அப் 15:18 1பேது 1:18-20 வெளிப் 13:8
26இக்காலத்தில் தமது நீதியைக் கடவுள் பொறுமையோடு காட்டி வருகிறார். ஆம், அவர் நீதியுள்ளவர். இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார்.உபா 32:4 சங் 85:10 சங் 85:11 ஏசா 42:21 ஏசா 45:21 செப் 3:5 செப் 3:15 சகரி 9:9 அப் 13:38 அப் 13:39 வெளிப் 15:3
27அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் பெருமைபாராட்ட இடமில்லை? செயல்களின் அடிப்படையிலா? இல்லை: நம்பிக்கையின் அடிப்படையில்தான்.ரோம 3:19 ரோம 2:17 ரோம 2:23 ரோம 4:2 எசே 16:62 எசே 16:63 எசே 36:31 எசே 36:32 செப் 3:11 லூக் 18:9-14 1கொரி 1:29-31 1கொரி 4:7 எபே 2:8-10
28ஏனெனில் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின்மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் எனக் கருதுகிறோம்.ரோம 3:20-22 ரோம 3:26-22 ரோம 4:5 ரோம 5:1 ரோம 8:3 யோவா 3:14-18 யோவா 5:24 யோவா 6:40 அப் 13:38 அப் 13:39 1கொரி 6:11 கலா 2:16 கலா 3:8 கலா 3:11-14 கலா 3:24-14 பிலிப் 3:9 தீத் 3:7
29கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள்.ரோம 1:16 ரோம 9:24-26 ரோம 11:12 ரோம 11:13 ரோம 15:9-13 ரோம 15:16-13 ஆதி 17:7 ஆதி 17:8 ஆதி 17:18 சங் 22:7 சங் 67:2 சங் 72:17 ஏசா 19:23-25 ஏசா 54:5 எரே 16:19 எரே 31:33 ஓசி 1:10 சகரி 2:11 சகரி 8:20-23 மல்கி 1:11 மத் 22:32 மத் 28:19 மாற் 16:15 மாற் 16:16 லூக் 24:46 லூக் 24:47 அப் 9:15 அப் 22:21 அப் 26:17 கலா 3:14 கலா 3:25-29 எபே 3:6 கொலோ 3:11
30ஏனெனில் கடவுள் ஒருவரே. விருத்தசேதனம் பெற்றவர்களாயினும் விருத்தசேதனம் பெறாதவர்களாயினும், இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் யாவரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்.ரோம 3:28 ரோம 4:11 ரோம 4:12 ரோம 10:12 ரோம 10:13 கலா 2:14-16 கலா 3:8 கலா 3:20 கலா 3:28 கலா 5:6 கலா 6:15 பிலிப் 3:3 கொலோ 2:10 கொலோ 2:11
31அப்படியானால், நம்பிக்கை தேவை என வலியுறுத்துவதன்மூலம் திருச்சட்டத்தைச் செல்லாததாக்குகிறோமா? ஒரு போதும் இல்லை. மாறாக, அவ்வாறு செய்வதன் மூலம் திருச்சட்டத்தை நிலைநாட்டுகிறோம்.ரோம 4:14 சங் 119:126 எரே 8:8 எரே 8:9 மத் 5:17 மத் 15:6 கலா 2:21 கலா 3:17-19

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.