2இராஜாக்கள் 8:10-15 - WCV
10
எலிசா மறுமொழியாக, “நீ போய், 'நீர் நலமடைவது உறுதி' என்று சொல்: ஆனால், 'அவன் செத்துப்போவது திண்ணம்' என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்” என்றார்.
11
பிறகு கடவுளின் அயடிவர் அசாவேலின் முகத்தை அவன் வெட்கமுறும் அளவுக்கு வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்து அழுதார்.
12
அசாவேல் அவரை நோக்கி, “என் தலைவரே, நீர் அழுவது ஏன்?” என்று கேட்டான். அதற்கு அவர், “நீ இஸ்ரயேல் மக்களுக்கு செய்யவிருக்கிற தீமைகளை நான் அறிவேன்: அவர்களின் கோட்டைகளைத் தீக்கிரையாக்குவாய்: அவர்களுடைய இளைஞர்களை வாளுக்கு இரையாக்குவாய்: அவர்களுடைய சிறு குழந்தைகளைத் தரையில் மோதிக் கொல்வாய்: அவர்களுடைய கருவுற்ற பெண்களின் வயிற்றைக் குத்திக் கிழிப்பாய்” என்றார்.
13
அசாவேல் அவரை நோக்கி, “நாயினும் இழிந்தவன் அடியேன். இவ்வளவு கேவலமான செயலை நான் செய்வேனா?” என்றான். அதற்கு எலிசா, “நீ சிரியாவின் மன்னனாகப் போகின்றாய் என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்” என்றார்.
14
அசாவேல் எலிசாவிடமிருந்து விடைபெற்றுத் தன் தலைவனிடம் திரும்பிச் சென்றான். மன்னன் அவனை நோக்கி, “எலிசா உன்னிடம் என்ன சொன்னார்”என்று கேட்டான்.அதற்கு அசாவேல், “நீர் நலமடைவது உறுதி என்று அவர் எனக்குச் சொன்னார்” என்றார்.
15
மறுநாள் அசாவேல் ஒரு போர்வையை எடுத்துத் தண்ணீரில் நனைத்து மன்னன் முகத்தை மூட, அவன் இறந்து போனான்.அசாவேல் அவனுக்குப் பதிலாக அரசனானான்.