ரோமர் 15:9-13 - WCV
9
பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, “பிறஇனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்: உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்” என் இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.
10
மேலும், “வேற்றினங்களே, ஆண்டவரின் மக்களோடு மகிழுங்கள்” என்றும்
11
“பிற இனத்தாரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்: மக்களினத்தாரே நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்” என்றும் எழுதியுள்ளது அல்லவா!
12
இன்னும், “ஈசாயின் குலக்கொழுந்து ஒருவர் வருவார்: மக்களினங்களை ஆளும் தலைவராய் அவர் தோன்றுவார்: மக்களினங்கள் அவரையே எதிர்நோக்கி இருப்பர்” என்று எசாயா கூறுகிறார்.
13
எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! அவ்வாறு தூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக.