69
பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, “நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே “ என்றார்.
70
அவரோ, “நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை “ என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார்.
71
அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண்” அவரைக் கண்டு, “இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன் “ என்று அங்கிருந்தோரிடம் சொன்னார்.
72
ஆனால் பேதுரு, “இம்மனிதனை எனக்குத் தெரியாது “ என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்.
73
சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, “உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே: ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது “ என்று கூறினார்கள்.
74
அப்பொழுது அவர், “இந்த மனிதனை எனக்குத் தெரியாது “ என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று.
75
அப்பொழுது, “சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் “ என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.