1 | ஒருநாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர். | அப் 4:13 அப் 8:14 மத் 17:1 மத் 26:37 யோவா 13:23-25 யோவா 20:2-9 யோவா 21:7 யோவா 21:18-22 கலா 2:9 |
2 | அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துக் கொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சைக் கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் “அழகுவாயில்” என்னுமிடத்தில் வைப்பர். | அப் 4:22 அப் 14:8 யோவா 1:9-30 |
3 | அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சைக் கேட்டார். |
4 | பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, “எங்களைப் பார்” என்று கூறினர். | அப் 11:6 அப் 14:9 அப் 14:10 லூக் 4:20 |
5 | அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார். |
6 | பேதுரு அவரிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை: என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி, | மத் 10:9 1கொரி 4:11 2கொரி 6:10 2கொரி 8:9 யாக் 2:5 |
7 | அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார்கள். உடனே அவரது காலடிகளும் கணுத்கால்களும் வலுவடைந்தன. | அப் 9:41 மாற் 1:31 மாற் 5:41 மாற் 9:27 லூக் 13:13 |
8 | அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்: துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார். | அப் 14:10 ஏசா 35:6 லூக் 6:23 யோவா 5:8 யோவா 5:9 யோவா 5:14 |
9 | அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர். | அப் 14:11 மாற் 2:11 மாற் 2:12 லூக் 13:17 |
10 | அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகு வாயில் அருகே பிச்சைக்கேட்டுக் கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துக்கொண்டனர்: நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர். | அப் 3:2 அப் 4:14-16 அப் 4:21-16 அப் 4:22-16 யோவா 9:3 யோவா 9:18-21 |
11 | நலமடைந்த அவர் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக் கொண்டிருக்க, எல்லா மக்களும் திகிலுற்று சாலமோன் மண்டபம் என்னும் இடத்திற்கு ஒரு சேர ஓடிவந்தனர். | லூக் 8:38 |
12 | பேதுரு இதைக் கண்டு மக்களைப் பார்த்துக் கூறியது: “எருசலேம் மக்களே, நீங்கள் ஏன் இதைப் பார்த்து வியப்படைகிறீர்கள்? நாங்கள் எங்கள் சொந்த வல்லமையாலோ இறைப்பற்றாலோ இவரை நடக்கச் செய்துவிட்டதுபோல் ஏன் எங்களையே உற்றுப் பார்க்கிறீர்கள்? | அப் 2:22 அப் 13:26 ரோம 9:4 ரோம 11:1 |
13 | ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர். இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். | அப் 5:30 அப் 7:32 யாத் 3:6 சங் 105:6-10 மத் 22:32 எபிரெ 11:9-16 |
14 | நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள். | அப் 2:27 அப் 4:27 அப் 7:52 அப் 22:14 சங் 16:10 சகரி 9:9 மாற் 1:24 லூக் 1:35 யாக் 5:6 1பேது 3:18 1யோவா 2:1 வெளிப் 3:7 |
15 | வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள். | யோவா 1:4 யோவா 4:10 யோவா 4:14 யோவா 5:26 யோவா 10:28 யோவா 11:25 யோவா 11:26 யோவா 14:6 யோவா 17:2 ரோம 8:1 ரோம 8:2 1கொரி 15:45 கொலோ 3:3 கொலோ 3:4 எபிரெ 2:10 எபிரெ 5:9 1யோவா 5:11 1யோவா 5:12 1யோவா 5:20 வெளிப் 21:6 வெளிப் 22:1 வெளிப் 22:17 |
16 | இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுளக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது. | அப் 3:6 அப் 4:7 அப் 4:10 அப் 4:30 அப் 16:18 மத் 9:22 |
17 | அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத்தெரியும். | அப் 7:40 ஆதி 21:26 ஆதி 39:8 ஆதி 44:15 யாத் 32:1 எண் 22:6 ரோம 11:2 பிலிப் 1:22 |
18 | ஆனால் கடவுள், தம் மெசியா துன்புறவேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார். | அப் 17:2 அப் 17:3 அப் 26:22 அப் 26:23 அப் 28:23 லூக் 24:26 லூக் 24:27 லூக் 24:44 1கொரி 15:3 1கொரி 15:4 1பேது 1:10 1பேது 1:11 வெளிப் 19:10 |
19 | எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள். | அப் 2:38 அப் 11:18 2தீமோ 2:25 |
20 | அப்பொழுது ஆண்டவர் புத்துயிர் அளிக்கும் காலத்தை அருளி உங்களுக்காக ஏற்படுத்திய மெசியாவாகிய இயேசுவை அனுப்புவார். | அப் 17:31 மத் 16:27 மத் 24:3 மத் 24:30-36 மாற் 13:26 மாற் 13:30-37 லூக் 19:11 லூக் 21:27 2தெச 2:2 2தெச 2:8 எபிரெ 9:28 வெளிப் 1:7 வெளிப் 19:11-16 |
21 | விண்ணேற்றமடைந்த இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம் வரை விண்ணுலகில் இருக்கவேண்டும். பழங்காலத் தூய இறைவாக்கினர் வாயிலாகக் கடவுள் இந்தக் காலத்தைக்குறித்து கூறியிருந்தார். | அப் 1:11 |
22 | மோசேயும், “உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிடமிருந்து என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச்செய்வார். அவர் உங்களுக்குக் கூறும் எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிசாயுங்கள். | அப் 7:37 உபா 18:15-19 |
23 | அந்த இறைவாக்கனருக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படியாத எவரும் மக்களினின்று அடியோடு அழிக்கப்படுவர்” என்று கூறியுள்ளார். | அப் 13:38-41 உபா 18:19 மாற் 16:16 யோவா 3:18-20 யோவா 8:24 யோவா 12:48 2தெச 1:7-9 எபிரெ 2:3 எபிரெ 10:28-30 எபிரெ 10:39-30 எபிரெ 12:25 வெளிப் 13:8 வெளிப் 20:15 |
24 | சாமுவேல் தொடங்கி இறைவாக்குரைத்த அனைவரும் இந்தக் காலத்தைப்பற்றி அறிவித்து வந்தனர். | அப் 3:19 அப் 3:21 ரோம 3:21 |
25 | அந்த இறைவாக்கினர் உரைத்தவற்றை உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்கள். கடவுள் ஆபிரகாமிடம், “உன் மரபினர் வழியாக மண்ணின் மக்களின்ஙகள் அனைத்தும் ஆசிபெறும்” என்று கூறி உடன்படிக்கை செய்தார். கடவுள் உங்கள் மூதாதையரோடு செய்த அந்த உடன்படிக்கையையும் உரிமையாக்கிக் கொள்பவர்கள் நீங்களே. | அப் 2:39 அப் 13:26 ஆதி 20:7 ஆதி 27:36-40 ஆதி 48:14-20 ஆதி 49:1-33 சங் 105:8-15 மத் 3:9 மத் 3:10 |
26 | ஆகையால், நீங்கள் அனைவரும் உங்கள் தீயசெயல்களைவிட்டு விலகி ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே, கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.” | அப் 1:8 அப் 13:26 அப் 13:32 அப் 13:33 அப் 13:46 அப் 13:47 அப் 18:4-6 அப் 26:20 அப் 28:23-28 மத் 10:5 மத் 10:6 லூக் 24:47 ரோம 2:9 ரோம 2:10 வெளிப் 7:4-9 |