ஆதியாகமம் 27:36-40 - WCV
36
அதைக் கேட்ட ஏசா, “யாக்கோபு என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே.ஏனெனில், அவன் இருமறை என்னை ஏமாற்றிவிட்டான்.ஏற்கெனவே எனக்குரிய தலைமகனுரிமையைப் பறித்துக் கொண்டான்.இப்பொழுது எனக்குரிய ஆசியையும் பிடுங்கிக்கொண்டான்” என்று சொல்லி, திரும்பவும் தந்தையை நோக்கி:”நீர் எனக்கென வேறு எந்த ஆசியும் ஒதுக்கி வைக்கவில்லையா?” என்று கேட்டான்.
37
ஈசாக்கு ஏசாவிடம், “நான் அவனை உனக்குத் தலைவனாக ஏற்படுத்தியுள்ளேன். அவன் உறவினர் யாவரையும் அவனுக்கு அடிமைப்படுத்தியுள்ளேன்.அவனுக்குத் தானியத்தையும் திராட்சை இரசத்தையும் நிறைவாக வழங்கிவிட்டேன்.இப்படி இருக்க என் மகனே! நான் உனக்கு வேறென்ன செய்ய முடியும்?” என்று சொல்ல,
38
ஏசா அவரை நோக்கி, “அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா” என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுதான்.
39
அவன் தந்தை ஈசாக்கு அவனுக்கு மறுமொழியாக, “உன் குடியிருப்புக்கு நிலத்தின் செழுமையோ மேல்வானின் பனித்துளியோ கிட்டாது.
40
நீ உன் வாளினால் வாழ்க்கை நடத்தி உன் தம்பிக்கு அடிமையாய் இருப்பாய்: நீ கிளர்ந்து எழும்போது உன் கழுத்தில் அவன் சுமத்திய நுகத்தடியை முறித்து விடுவாய்” என்றார்.