எபிரெயர் 10:28-30 - WCV
28
மோசேயின் சட்டத்தைப் புறக்கணித்தவர், இரக்கம் பெறாமல், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்கு மூலத்தின்படி சாக வேண்டியிருந்தது.
29
அப்படியென்றால், கடவுளுடைய மகனையே காலால் மிதித்தவர், தம்மைத் தூய்மைப்படுத்திய உடன்படிக்கையின் இரத்தத்தையே தீட்டு என்று கருதியவர், அருள்தரும் ஆவியாரையே பழித்தவர் எத்துணைக் கொடிய தண்டனையைப் பெற வேண்டியவர் என்பதை எண்ணிப் பாருங்கள்.
30
“பழி வாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன” என்றும் “ஆண்டவரே தம் மக்களுக்குத் தீர்ப்பு அளிப்பார்” என்றும் உரைத்தவர் யார் என்பது நமக்குத் தெரியுமன்றோ?