இணை வசன வேதாகமம்

மத்தேயு 2

                   
புத்தகங்களைக் காட்டு
1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,மத் 1:25 லூக் 2:4-7
2““யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் “ என்றார்கள்.மத் 21:5 சங் 2:6 ஏசா 9:6 ஏசா 9:7 ஏசா 32:1 ஏசா 32:2 எரே 23:5 சகரி 9:9 லூக் 2:11 லூக் 19:38 லூக் 23:3 லூக் 23:38 யோவா 1:49 யோவா 12:13 யோவா 18:37 யோவா 19:12-15 யோவா 19:19-15
3இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.மத் 8:29 மத் 23:37 1இரா 18:17 1இரா 18:18 யோவா 11:47 யோவா 11:48 அப் 4:2 அப் 4:24-27 அப் 5:24-28 அப் 16:20 அப் 16:21 அப் 17:6 அப் 17:7
4அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.மத் 21:15 மத் 21:23 மத் 26:3 மத் 26:47 மத் 27:1 1நாளா 24:4-19 2நாளா 36:14 எஸ்றா 10:5 நெகே 12:7 சங் 2:2 யோவா 7:32 யோவா 18:3
5அவர்கள் அவனிடம், “ யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.ஆதி 35:19 யோசு 19:15 ரூத் 1:1 ரூத் 1:19 ரூத் 2:4 ரூத் 4:11 1சாமு 16:1
6ஏனெனில், “ யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை: ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் “ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் “ என்றார்கள்.மத் 2:1 மீகா 5:2 யோவா 7:42
7பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.மத் 26:3-5 யாத் 1:10 1சாமு 18:21 சங் 10:9 சங் 10:10 சங் 55:21 சங் 64:4-6 சங் 83:3 சங் 83:4 ஏசா 7:5-7 எசே 38:10 எசே 38:11 வெளிப் 12:1-5 வெளிப் 12:15-5
8மேலும் அவர்களிடம். “ நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வண்ஙகுவேன் “ என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.1சாமு 23:22 1சாமு 23:23 2சாமு 17:14 1இரா 19:2 யோபு 5:12 யோபு 5:13 சங் 33:10 சங் 33:11 நீதி 21:30 புலம் 3:37 1கொரி 3:19 1கொரி 3:20
9அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.மத் 2:2 சங் 25:12 நீதி 2:1-6 நீதி 8:17 2பேது 1:19
10அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.உபா 32:13 சங் 67:4 சங் 105:3 லூக் 2:10 லூக் 2:20 அப் 13:46-48 ரோம 15:9-13
11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்: நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்: தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.லூக் 2:16 லூக் 2:26-32 லூக் 2:38-32
12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.மத் 2:22 மத் 1:20 மத் 27:19 ஆதி 20:6 ஆதி 20:7 ஆதி 31:24 யோபு 33:15-17 தானி 2:19
13அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “ நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் “ என்றார்.மத் 2:19 மத் 1:20 அப் 5:19 அப் 10:7 அப் 10:22 அப் 12:11 எபிரெ 1:13 எபிரெ 1:14
14யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.மத் 2:20 மத் 2:21 மத் 1:24 அப் 26:21
15ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “ எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் “ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.மத் 2:19 அப் 12:1-4 அப் 12:23-4 அப் 12:24-4
16ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.ஆதி 39:14 ஆதி 39:17 எண் 22:29 எண் 24:10 நியா 16:10 யோபு 12:4
17அப்பொழுது “ ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது: ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது: இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்:
18ஆறுதல் பெற அவள் மறுக்கிறாள்: ஏனெனில் அவள் குழந்தைகள் அவளோடு இல்லை “ என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.எரே 31:15
19ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,சங் 76:10 ஏசா 51:12 தானி 8:25 தானி 11:45
20“ நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் “ என்றார்.மத் 2:13 நீதி 3:5 நீதி 3:6
21எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.ஆதி 6:22 எபிரெ 11:8
22ஆனால் யtதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்: கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.ஆதி 19:17-21 1சாமு 16:2 அப் 9:13 அப் 9:14
23அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, “ 'நசரேயன் " என அழைக்கப்படுவார் “ என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.யோவா 18:5 யோவா 18:7 யோவா 19:19 அப் 2:22

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.