4
இத்தாமரின் குடும்பத்தை விட எலயாசரின் குடும்பத்தில் மிகுதியான தலைவர்களைக் கொண்டிருந்தது. எனவே எலயாசரின் புதல்வரில் பதினாறு பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும், இத்தாமரின் புதல்வரிலும் எட்டுப்பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
5
எலயாசர், இத்தாமர் ஆகிய இரு குடும்பங்களின் புதல்வரிலும் திருத்தலத் தலைவர்களும் இறைப்பணித் தலைவர்களும் இருந்தமையால், சீட்டுக் குலுக்கல் முறையில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.
6
நெத்தனியேலின் மகனும் லேவியனும் எழுத்தனுமான செமாயா, அரசர் அலுவலர்கள், குருக்களாகிய சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் முன்னிலையில் பதிவுசெய்தான். எலயாசரின் குடும்பத்திற்கும், இத்தாமரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.
7
சீட்டு விழுந்த முறை: முதல் சீட்டு யோயாரிபுக்கு: இரண்டாம் சீட்டு எதாயாவுக்கு:
8
மூன்றாவது ஆரிமுக்கு: நான்காவது செயோரிமுக்கு:
9
ஐந்தாவது மல்கியாவுக்கு: ஆறாவது மியாமினுக்கு:
10
ஏழாவது அக்கோட்சுக்கு: எட்டாவது அபியாவுக்கு:
11
ஒன்பதாவது ஏசுவாவுக்கு: பத்தாவது செக்கனியாவுக்கு:
12
பதினொன்றாவது எலியாசிபுக்கு: பன்னிரண்டாவது யாக்கிமுக்கு:
13
பதின்மூன்றாவது உப்பாவுக்கு: பதினான்காவது எசேபயாவுக்கு:
14
பதினைந்தாவது பில்காவுக்கு: பதினாறாவது இம்மேருக்கு:
15
பதினேழாவது ஏசீருக்கு: பதினெட்டாவது அப்பிசேசுக்கு:
16
பத்தொன்பதாவது பெத்தகியாவுக்கு: இருபதாவது எசக்கேலுக்கு:
17
இருபத்தொன்றாவது யாக்கினுக்கு: இருபத்திரண்டாவது காமுலுக்கு:
18
இருபத்து மூன்றாவது தெலாயாவுக்கு: இருபத்து நான்காவது மாசியாவுக்கு.
19
இவர்களே தங்கள் மூதாதையாகிய ஆரோன் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தந்த விதிமுறைகளை, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கேற்ற வரிசை முறைப்படி ஆண்டவரின் இல்லம் சென்று, அங்கு நிறைவேற்றுவதற்காகப் பதிவு செய்யப்பட்டவர்கள்.