1 | கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்: அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள். | நீதி 23:23 1கொரி 15:58 1கொரி 16:13 எபே 6:14 பிலிப் 1:27 1தெச 3:8 2தெச 2:15 எபிரெ 3:6 எபிரெ 3:14 எபிரெ 4:14 எபிரெ 10:23 எபிரெ 10:35-39 யூதா 1:3 யூதா 1:20 யூதா 1:21 வெளிப் 2:25 வெளிப் 3:3 |
2 | பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்குப் பயனே இல்லை. | 1கொரி 16:21 2கொரி 10:1 1தெச 2:18 பிலேமோ 1:9 |
3 | விருத்தசேதனம் செய்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் திருச்சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமை உண்டு என்பதை நான் மீண்டும் வற்புறுத்திக் கூறுகிறேன். | உபா 8:19 உபா 31:21 நெகே 9:29 நெகே 9:30 நெகே 9:34 லூக் 16:28 அப் 2:40 அப் 20:21 எபே 4:17 1தெச 4:6 1யோவா 4:14 |
4 | திருச்சட்டம் சார்ந்த செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக இயலும் நீங்கள் கிறிஸ்துவுடன் உறவற்றுப் போய்விட்டீர்கள்: அருளை இழந்து விட்டீர்கள். | கலா 5:2 கலா 2:21 ரோம 9:31 ரோம 9:32 ரோம 10:3-5 |
5 | ஆனால் நாம் தூய ஆவியின் துணையால் நம்பிக்கையின் வழியாய் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவோம் என்னும் எதிர்நோக்கு நிறைவேறும் என ஆவலோடு காத்திருக்கிறோம். | யோவா 16:8-15 எபே 2:18 |
6 | கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்வோர், விருத்தசேதனம் செய்து கொண்டாலும் செய்து கொள்ளாவிட்டாலும், அவர்களுக்கு எப்பயனும் இல்லை. அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது. | கலா 5:2 கலா 5:3 கலா 3:28 கலா 6:15 ரோம 2:25-29 ரோம 3:29-31 1கொரி 7:19 கொலோ 3:11 |
7 | நீங்கள் நன்றாகத்தானே முன்னேறி வந்தீர்கள்! அப்படியிருக்க உண்மைக்குக் கீழ்ப்படியாதபடி இப்போது உங்களைத் தடுத்தவர் யார்? | மத் 13:21 1கொரி 9:24 எபிரெ 12:1 |
8 | இவ்வாறு செய்யத் தூண்டியவர் உங்களை அழைத்த இறைவன் அல்ல. | கலா 1:6 |
9 | சிறிதளவு புளிப்புமாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கிறது. | மத் 23:33 மத் 16:6-12 மாற் 8:15 லூக் 12:1 லூக் 13:21 1கொரி 5:6 1கொரி 5:7 1கொரி 15:33 2தீமோ 2:17 |
10 | மாறுபட்ட கொள்கை எதையும் நீங்கள் ஏற்கமாட்டீர்கள் என்னும் உறுதியான நம்பிக்கையை ஆண்டவர் எனக்குத் தந்துள்ளார். ஆனால் உங்கள் உள்ளத்தைக் குழப்புவோர் எவராய் இருந்தாலும் அவர்கள் தண்டனைத் தீர்ப்பைப் பெறுவார்கள். | கலா 4:11 கலா 4:20 2கொரி 1:15 2கொரி 2:3 2கொரி 7:16 2கொரி 8:22 2தெச 3:4 பிலேமோ 1:21 |
11 | சகோதர சகோதரிகளே, விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என அறிவிப்பதாய் இருந்தால் நான் ஏன் இன்னும் துன்புறுத்தப்பட வேண்டும்? நான் அவ்வாறு அறிவித்தால் சிலுவை ஒரு தடையாக இருக்க இடமில்லையே! | கலா 2:3 அப் 16:3 |
12 | உங்கள் உள்ளங்களில் குழப்பம் உண்டாக்குகிறவர்கள் தங்களை அலிகளாகவே ஆக்கிக் கொள்ளட்டும். | கலா 5:10 கலா 1:8 கலா 1:9 ஆதி 17:14 யாத் 12:15 யாத் 30:33 லேவி 22:3 யோசு 7:12 யோசு 7:25 யோவா 9:34 அப் 5:5 அப் 5:9 1கொரி 5:13 தீத் 3:10 |
13 | அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்: அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். | கலா 5:1 கலா 4:5-7 கலா 4:22-31 ஏசா 61:1 லூக் 4:18 யோவா 8:32-36 ரோம 6:18-22 |
14 | “உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக” என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. | மத் 7:12 மத் 19:18 மத் 19:19 மத் 22:39 மத் 22:40 ரோம 13:8-10 யாக் 2:8-11 |
15 | ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை! | கலா 5:26 2சாமு 2:26 2சாமு 2:27 ஏசா 9:20 ஏசா 9:21 ஏசா 11:5-9 ஏசா 11:13-9 1கொரி 3:3 1கொரி 6:6-8 2கொரி 11:20 2கொரி 12:20 யாக் 3:14-18 யாக் 4:1-3 |
16 | எனவே நான் சொல்கிறேன்: தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்: அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். | கலா 3:17 1கொரி 7:29 |
17 | ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நிங்கள் செய்ய விரும்பவதை உங்களால் செய்ய முடிவதில்லை. | சங் 19:12 சங் 19:13 சங் 51:1-5 சங் 51:10-12 சங் 65:3 சங் 119:5 சங் 119:20 சங் 119:24 சங் 119:25 சங் 119:32 சங் 119:35 சங் 119:40 சங் 119:133 சங் 119:159 சங் 119:176 பிரச 7:20 ஏசா 6:5 மத் 16:17 மத் 16:23 மத் 26:41 யோவா 3:6 ரோம 7:18 ரோம 7:21-25 ரோம 8:5 ரோம 8:6 ரோம 8:13 யாக் 4:5 யாக் 4:6 |
18 | நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள். | கலா 5:16 கலா 5:25 கலா 4:6 சங் 25:4 சங் 25:5 சங் 25:8 சங் 25:9 சங் 143:8-10 நீதி 8:20 ஏசா 48:16-18 எசே 36:27 யோவா 16:13 ரோம 8:12 ரோம 8:14 2தீமோ 1:7 1யோவா 2:20-27 |
19 | ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, | கலா 5:13 கலா 5:17 கலா 6:8 சங் 17:4 யோவா 3:6 ரோம 7:5 ரோம 7:18 ரோம 7:25 ரோம 8:3 ரோம 8:5 ரோம 8:9 ரோம 8:13 1கொரி 3:3 1பேது 4:2 |
20 | சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்மை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, | எசே 22:18 உபா 18:10 1சாமு 15:23 1நாளா 10:13 1நாளா 10:14 2நாளா 33:6 அப் 8:9-11 அப் 16:16-19 |
21 | அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன். | உபா 21:20 லூக் 21:34 ரோம 13:13 1கொரி 5:11 1கொரி 6:10 எபே 5:18 1தெச 5:7 |
22 | ஆனால் தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, | கலா 5:16-18 சங் 1:3 சங் 92:14 ஓசி 14:8 மத் 12:33 லூக் 8:14 லூக் 8:15 லூக் 13:9 யோவா 15:2 யோவா 15:5 யோவா 15:16 ரோம 6:22 ரோம 7:4 எபே 5:9 பிலிப் 1:11 கொலோ 1:10 |
23 | கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. | அப் 24:25 1கொரி 9:25 தீத் 1:8 தீத் 2:2 |
24 | கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். | கலா 3:29 ரோம 8:9 1கொரி 3:23 1கொரி 15:23 2கொரி 10:7 |
25 | தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம். | யோவா 6:63 ரோம 8:2 ரோம 8:10 1கொரி 15:45 2கொரி 3:6 1பேது 4:6 வெளிப் 11:11 |
26 | வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர்மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக! | லூக் 14:10 1கொரி 3:7 பிலிப் 2:1-3 யாக் 4:16 |